பயத்தை விட விசுவாசம்மாதிரி

எலிசபெத்தின் அனுபவத்தில், வாழ்க்கை நம் விருப்பப்படி நடக்காதபோது, ஆனால் நாம் தொடர்ந்து விசுவாசத்துடன் இருக்கும்போது என்ன சாத்தியம் என்பதை நாம் காண்கிறோம்.
எலிசபெத்தும் சகரியாவும் குழந்தைப் பேறு வயதை கடந்துவிட்டனர். ஆண்கள் அவர்களை ஒரு வயதான தம்பதியினராகப் பார்த்தாலும், கடவுள் அவர்களைத் தம்முடைய உண்மையுள்ள குழந்தைகளாகக் கண்டு ஒரு வழியை உருவாக்கினார். இது சாதாரண குழந்தை அல்ல; இது ஒரு பண்டைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் - கடவுளின் மகனுக்கு யோவான் வழியைத் தயார் செய்தல்.
அவர்களின் வாழ்க்கை கடவுளின் மகத்தான திட்டத்தின் ஒரு பகுதி என்பதை அவர்களின் கதை வெளிப்படுத்துகிறது. அவர்களின் ஏமாற்றமும் அவமானமும் கதையின் முடிவு அல்ல; அவை கடவுளின் நோக்கத்தில் ஒரு அத்தியாயம். அமைதி மற்றும் காத்திருப்பு நேரங்களிலும் கூட - உறுதியான நம்பிக்கையுடன் சேவை செய்வதன் சக்திக்கு அவர்களின் வாழ்க்கை ஒரு சான்றாகும்.
முடிவற்ற தாமதங்கள், ஏமாற்றங்கள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் - கடவுளால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பயம் காலம் கடந்துவிட்டதாக நமக்குச் சொல்லும்போது கூட, கடவுள் ஒருபோதும் தாமதிக்க மாட்டார் என்பதை விசுவாசம் நமக்கு நினைவூட்டுகிறது.
பரிசீலனை:நீண்டகாலம்காத்திருப்பதால், எந்தஜெபத்தைவிட்டுவிட்டீர்கள்? அதைஇன்றுமீண்டும்தேவனிடம்கொண்டுசெல்லலாமா?
ஜெபம்:ஆண்டவரே, காத்திருப்பதில்சோர்வடைந்தால், நீர்விசுவாசமுள்ளவர்என்பதைஎனக்குநினைவூட்டும். உமதுநேரத்தைநம்பச்செய்யும்மனதையும், அமைதியானநம்பிக்கையுடன்உமக்குசேவைசெய்யும்ஆவியையும்எனக்குத்தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒரு சீஷனாக இருப்பது எப்படி

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

சத்தியம் மறுரூபப்படுத்தும்

வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவரை சந்தியுங்கள்

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்

குற்ற உணர்வுப் பாதை - குற்ற உணர்வுப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம்

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல்

சங்கீதம் 25 ன் வாயிலாக ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், ஆராதியுங்கள் மற்றும் தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
