நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 33: அழைப்பு"
இயேசுவோடு அநேக காலையும் மாலையும் செலவழித்தபிறகு, அவர் வார்த்தைகளையும் செயல்களையும் நேரடியாக பார்த்தபிறகு பேதுருவால் அவரை கிறிஸ்துவென்றும், தேவனால் வாக்குப்பண்ணப்பட்டவர் என்றும் சொல்லமுடிந்தது. இயேசுவை விட்டு தூரமாக இருந்த மற்றவர்கள் அவர்கள் விசுவாசத்தில் குறைவாகவே உறுதியாக இருந்தார்கள். அவர்கள் அவரை தீர்க்கதரிசியென்று நம்பினார்கள். ஆனால் அவரிடம் நெருங்கி இருந்தவர்கள் அவர் செய்தியாளர் அல்ல, அவரே செய்தி என்று அறிந்திருந்தார்கள். பேதுருவின் இந்த அறிக்கைக்கு பிறகு, இயேசு அவர்களுக்கு தன் ஊழியத்தை குறித்து விளக்கி, அவரை பின்பற்றுவது என்றால் என்ன என்று எடுத்து கூறினார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மேசியாவாக இவர் இல்லை, அவர்கள் நினைத்ததுபோல அவரை பின்பற்றுவதும் இல்லை.
இயேசு அவரை பின்பற்றுபவர்களுக்கு ஒரு தெளிவான எச்சரிப்பை தருகிறார், அவரை தொடர்வதென்பது தன்னையே மறுதலித்து, அனுதினம் சிலுவையை சுமந்து அவரை பின்பற்றுவதே. அப்போதும் சரி இப்போதும் சரி, அவர் வார்த்தைகள் கடினமானவைகள் தான். நாம் வாழுகிற சமுதாயம் நம்மை மேன்மைபாராட்டி சௌகரியம், அதிகாரம், திருப்தி ஆகியவற்றை தேட கற்றுக்கொடுக்கிறது. தன்னையே மறுதலித்து தேவனுடைய காரியங்களை தேடுவது மரணத்தை போல உணரும், ஆனால் அதற்காக தான் இயேசு நம்மை அழைத்திருக்கிறார். அவரை பின்பற்றுவதற்கு எல்லா அதிகாரம் சௌகரியம் இவைகளை விட்டுவிட தயாராக இருக்க இயேசு சொல்கிறார். அதோடுகூட அவர்போல நம்மையும் ஆக்க அவர் வாக்களிக்கிறார். அவரில், பாடுகளின் மத்தியில் வெற்றி உண்டாகும். நம்முடைய ஜீவனை இழந்து, அவருடைய உண்மையான நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள தேவன் நம்மை அழைக்கிறார். அவர் உன்னை அழைப்பது உனக்கு கேட்கிறதா? உன்னை மறுதலித்து அவர் சிலுவையை சுமக்க நீ ஆயத்தமா? அவர் உன் ஜீவியத்தை வழி நடத்த வல்லவர் என்று விசுவாசிக்கிறாயா?
ஜெபம்
கிருபையுள்ள தேவனே, உம்முடைய குமாரனை எங்களுக்கு வெளிப்படுத்தினமைக்காக உமக்கு நன்றி. அந்த இயேசுவே கிறிஸ்து, எங்களுக்கு தேவையாக இருக்கும் மீட்பர். உம்மை பின்பற்ற எங்களுக்கு எங்களுக்கு தாரும். நீரே பாத்திரர், எங்கள் ஜீவனை உமக்கு தர வாஞ்சிக்கிறோம். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.
இயேசுவோடு அநேக காலையும் மாலையும் செலவழித்தபிறகு, அவர் வார்த்தைகளையும் செயல்களையும் நேரடியாக பார்த்தபிறகு பேதுருவால் அவரை கிறிஸ்துவென்றும், தேவனால் வாக்குப்பண்ணப்பட்டவர் என்றும் சொல்லமுடிந்தது. இயேசுவை விட்டு தூரமாக இருந்த மற்றவர்கள் அவர்கள் விசுவாசத்தில் குறைவாகவே உறுதியாக இருந்தார்கள். அவர்கள் அவரை தீர்க்கதரிசியென்று நம்பினார்கள். ஆனால் அவரிடம் நெருங்கி இருந்தவர்கள் அவர் செய்தியாளர் அல்ல, அவரே செய்தி என்று அறிந்திருந்தார்கள். பேதுருவின் இந்த அறிக்கைக்கு பிறகு, இயேசு அவர்களுக்கு தன் ஊழியத்தை குறித்து விளக்கி, அவரை பின்பற்றுவது என்றால் என்ன என்று எடுத்து கூறினார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மேசியாவாக இவர் இல்லை, அவர்கள் நினைத்ததுபோல அவரை பின்பற்றுவதும் இல்லை.
இயேசு அவரை பின்பற்றுபவர்களுக்கு ஒரு தெளிவான எச்சரிப்பை தருகிறார், அவரை தொடர்வதென்பது தன்னையே மறுதலித்து, அனுதினம் சிலுவையை சுமந்து அவரை பின்பற்றுவதே. அப்போதும் சரி இப்போதும் சரி, அவர் வார்த்தைகள் கடினமானவைகள் தான். நாம் வாழுகிற சமுதாயம் நம்மை மேன்மைபாராட்டி சௌகரியம், அதிகாரம், திருப்தி ஆகியவற்றை தேட கற்றுக்கொடுக்கிறது. தன்னையே மறுதலித்து தேவனுடைய காரியங்களை தேடுவது மரணத்தை போல உணரும், ஆனால் அதற்காக தான் இயேசு நம்மை அழைத்திருக்கிறார். அவரை பின்பற்றுவதற்கு எல்லா அதிகாரம் சௌகரியம் இவைகளை விட்டுவிட தயாராக இருக்க இயேசு சொல்கிறார். அதோடுகூட அவர்போல நம்மையும் ஆக்க அவர் வாக்களிக்கிறார். அவரில், பாடுகளின் மத்தியில் வெற்றி உண்டாகும். நம்முடைய ஜீவனை இழந்து, அவருடைய உண்மையான நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள தேவன் நம்மை அழைக்கிறார். அவர் உன்னை அழைப்பது உனக்கு கேட்கிறதா? உன்னை மறுதலித்து அவர் சிலுவையை சுமக்க நீ ஆயத்தமா? அவர் உன் ஜீவியத்தை வழி நடத்த வல்லவர் என்று விசுவாசிக்கிறாயா?
ஜெபம்
கிருபையுள்ள தேவனே, உம்முடைய குமாரனை எங்களுக்கு வெளிப்படுத்தினமைக்காக உமக்கு நன்றி. அந்த இயேசுவே கிறிஸ்து, எங்களுக்கு தேவையாக இருக்கும் மீட்பர். உம்மை பின்பற்ற எங்களுக்கு எங்களுக்கு தாரும். நீரே பாத்திரர், எங்கள் ஜீவனை உமக்கு தர வாஞ்சிக்கிறோம். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.