நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 24: கொடி"
கிறிஸ்துவ ஜீவியத்தில் நாம் அந்த அளவு சீராக இருக்கிறோமோ அந்த அளவுதான் தேவனுடைய அன்பும் பராமரிப்பும் நம்மோடு இருக்கும் என்று நினைப்பது மிக சுலபமே. நாமும் மற்றவர்கள் நமக்கு இஷ்டப்படி நடக்கிறார்களா என்று பார்த்தே அவர்களை நெருங்கவோ தள்ளிவிடவோ பார்க்கிறோம். ஆனால் நல்லவேளையாக, நம்முடைய ஜீவியம் நிலைவரமற்று இருந்தாலும், தேவன் நிலைவரம் உள்ளவராக இருக்கிறார்.
ஏரேமியா தீர்க்கதரிசி, தேவனை நம்புங்கள், எப்போதும் அவர் உங்களோடு இருப்பர் என்று இஸ்ரவேல் மக்களுக்கு நினைவூட்டுகிறார். அவருடைய நிலைத்தன்மையை நினைவூட்டுகிறார் "தாவீதின் சந்ததி சிங்காசனத்தில் வீற்றிருக்கும்...." (வசனம் 17-18). முடிவில் இயேசுவே அந்த ராஜாவாக சிங்காசனத்தில் எப்போதும் வீற்றிருந்து தன்னையே ஒரு பலியாக செலுத்தியிருக்கிறார்.
இயேசு நீதியுள்ள கிளையாக நாம் தேவனால் தள்ளப்படாமல் இருக்க நமக்கு நீதியை தருகிறார். இதன் நிமித்தம் நம்முடைய சொந்த தோல்விகளையும் உண்மையற்ற தன்மையையும் தேவனிடம் கொண்டுவர முடியும். இயேசு நம்மை எதிர்க்க மாட்டார். ஒவ்வொரு நாளும் நம்முடைய மனந்திரும்புதலை கொண்டு வந்தால் அவர் நம்மை தள்ள மாட்டார் என்று அறிந்திருக்கிறோம். இயேசுவின் ஜீவியம் மரணம், உயிர்தெழுதலினால் அவர் நம்மை ஏற்றுக்கொள்வார். நமக்கு இந்த நம்பிக்கை தேவையாக இருக்கிறது. நீ அவரிடம் வந்து கேட்டால், தேவன் உண்மையுள்ளவராக அதை தருவார்.
ஜெபம்
கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய இரக்கங்கள் அனுதினமும் புதிதாக இருப்பதற்காக நன்றி. உமக்கு பிரியமில்லாத காரியங்களுக்காக இன்றே உம்மிடம் மனந்திரும்ப எனக்கு கிருபை தாரும், நீர் என்னை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறீரே. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.
கிறிஸ்துவ ஜீவியத்தில் நாம் அந்த அளவு சீராக இருக்கிறோமோ அந்த அளவுதான் தேவனுடைய அன்பும் பராமரிப்பும் நம்மோடு இருக்கும் என்று நினைப்பது மிக சுலபமே. நாமும் மற்றவர்கள் நமக்கு இஷ்டப்படி நடக்கிறார்களா என்று பார்த்தே அவர்களை நெருங்கவோ தள்ளிவிடவோ பார்க்கிறோம். ஆனால் நல்லவேளையாக, நம்முடைய ஜீவியம் நிலைவரமற்று இருந்தாலும், தேவன் நிலைவரம் உள்ளவராக இருக்கிறார்.
ஏரேமியா தீர்க்கதரிசி, தேவனை நம்புங்கள், எப்போதும் அவர் உங்களோடு இருப்பர் என்று இஸ்ரவேல் மக்களுக்கு நினைவூட்டுகிறார். அவருடைய நிலைத்தன்மையை நினைவூட்டுகிறார் "தாவீதின் சந்ததி சிங்காசனத்தில் வீற்றிருக்கும்...." (வசனம் 17-18). முடிவில் இயேசுவே அந்த ராஜாவாக சிங்காசனத்தில் எப்போதும் வீற்றிருந்து தன்னையே ஒரு பலியாக செலுத்தியிருக்கிறார்.
இயேசு நீதியுள்ள கிளையாக நாம் தேவனால் தள்ளப்படாமல் இருக்க நமக்கு நீதியை தருகிறார். இதன் நிமித்தம் நம்முடைய சொந்த தோல்விகளையும் உண்மையற்ற தன்மையையும் தேவனிடம் கொண்டுவர முடியும். இயேசு நம்மை எதிர்க்க மாட்டார். ஒவ்வொரு நாளும் நம்முடைய மனந்திரும்புதலை கொண்டு வந்தால் அவர் நம்மை தள்ள மாட்டார் என்று அறிந்திருக்கிறோம். இயேசுவின் ஜீவியம் மரணம், உயிர்தெழுதலினால் அவர் நம்மை ஏற்றுக்கொள்வார். நமக்கு இந்த நம்பிக்கை தேவையாக இருக்கிறது. நீ அவரிடம் வந்து கேட்டால், தேவன் உண்மையுள்ளவராக அதை தருவார்.
ஜெபம்
கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய இரக்கங்கள் அனுதினமும் புதிதாக இருப்பதற்காக நன்றி. உமக்கு பிரியமில்லாத காரியங்களுக்காக இன்றே உம்மிடம் மனந்திரும்ப எனக்கு கிருபை தாரும், நீர் என்னை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறீரே. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.