நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 23 நாள்

"நாள் 23: ஆவியானவர்"

ஏசாயாவில் நாம் வாசிக்க இருக்கும் கடைசி வேத பாடத்தில் நாம் நம்பிக்கை கொடுக்கும் ஆவியினால் வழிநடத்த படும் பாடத்தை பார்க்கிறோம். தேவனால் அபிஷேகிக்கப்பட்டவர், முந்தின அதிகாரங்களில் ராஜாவாகவும் ஊழியக்காரராகவும் சொல்லப்பட்டவர் தரித்திரர், உடைந்த உள்ளம் கொண்டோர், அடிமைகள் மற்றும் சிறைப்பட்டவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல வந்திருக்கிறார். அபிஷேகம் பெற்றவர் தேவையில் இருப்போருக்கு ஒரு ஊழியக்காரராகவும், ராஜாவாகவும் இந்த மாற்றத்தை உருவாக்குகிறார்.

இந்த பகுதியை ஒரு ஏக்கதோடா, சந்தோஷத்தோடோ, நம்பிக்கையோடோ வாசிக்காமல் இருப்பது கடினம். நம்முடைய அழுகை அழகாகவும், சந்தோஷமாகவும், துதியாகவும், நீதியாகவும் மகிமையாகவும் மாற்றப்படும் என்று காணும்போது நம்பிக்கையை பெறுகிறோம். நம் ஜீவியம் அடிமைத்தனத்திலிருந்து யூதர்களுக்கு வித்தியாசமாக இருந்தாலும், நமக்கு இது பேசுகிறது. நாமும் அடிமைப்பட்டு, உடைக்கப்பட்டு இருக்கிறோம் என்று உணருகிறோம். நம்முடைய நிலையிலிருந்து மீட்க எதேங்கிலும் வழியுண்டோ என்று பார்க்கிறோம். யார் இந்த அபிஷேகம் பெற்றவர்?

எல்லா பழைய ஏற்பாடு பகுதிகளிலும் இயேசு அவருடைய பிரசங்கத்தை ஆரம்பிக்க ஏசாயாவின் பகுதியில் துவங்குகிறார் "இன்று இது நிறைவேறியிருக்கிறது (லூக்கா 4:21). தனிமையாக வல்லமையற்று உணரும்போது, இயேசுவே நம்முடைய இருதய கதறுதலின் பதிலாக இருக்கிறார்.

ஜெபம்

பரம பிதாவே, என்னுடைய பெலனால் செய்யக்கூடாதவைகளை நீர் அபிஷேகம் பெற்ற கிறிஸ்துவால் செய்துமுடித்திருக்கிறீர். ஆனாலும் ஒவ்வொருநாளும் நான் என்னிடமே திரும்புகிறேன், எல்லாவற்றையும் மற்ற என் மீது நம்பிக்கை வைக்கிறேன், உம்மை தவிர. கிறிஸ்துவின் முழுமையும் இன்னும் அதிகம் காண எனக்கு உதவும், அதன்மூலம் அவர் நம்பிக்கை, விடுதலை, ஆறுதலை நான் உணர. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.