நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 21 நாள்

"நாள் 21: பாடுபடும் ஊழியக்காரன்"

இயேசு அநேக ரீதியில் சிறந்தவராக இருந்தார். ஆனால் இந்த ஜீவியத்தை உலகத்தின் அளவுகளை வைத்து அளவிட்டால், அநேகரால் அவர் ஒரு தோல்வி என்று எனப்படுவார். அவர் தரித்திரராக, தள்ளப்பட்டு, ஒரு கஷ்டமான கேவலமான மரணத்தை சந்தித்தார். மற்றவர்கள் சௌகரியம், வல்லமை, நற்பெயரை நாடுவதுபோல் அவர் நாடவில்லை.

அவருடைய வெளிப்புற தோற்றத்திலும், அவர் ஒரு சிருஷ்டிகர் என்றோ பூமியை நடத்துபவர் என்றோ அடையாளம் இல்லாதிருந்தார். அவர் அழகின் ஊற்றாக இருந்தாலும், அவர் அழகையே ராஜரீகத்தையோ மற்றவர்கள் கண்டு பொறாமைகொள்ளும் அளவு கொண்டிருக்கவில்லை. அதர்க்கும் மேலாக, அவர் தள்ளப்பட்டு, பாடுகளை சுமத்தவராக இருந்தார், மக்கள் அவரை கண்டு முகம் சுளிக்கும் அளவிற்கு. அவர் அடிக்கப்பட்டு, துன்பப்படுத்தப்பட்டு, குத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, புத்திக்கு எட்டாத அளவு நடத்த பட்டார். ஆனாலும் அவரே மிக கபடமற்ற நீதியுள்ள மனிதனாக இருந்தபோதிலும்.

நாம் இந்த சூழ்நிலைக்குள்ளாக செல்லாமல் இருப்பதற்காக இயேசு இந்த சூழ்நிலைக்குள்ளாக சென்றார். அவர் நாம் சகித்திருக்கவே முடியாத துக்கம், துன்பம் இவைகளை சகித்தார். அவர் பாவம் செய்யாதிருந்தும் பாவத்திற்காக தண்டிக்க பட்டார். கடைசி வசனம் சொல்கிறது நாம் யாவரும் ஆடுகளை போலிருக்கிறோம் - முடமான, உதவிற்று நம்முடைய வழியில் செல்ல முற்பட்டுக்கொண்டு, ஆனால் தேவன் நம்முடைய மீறுதல் அனைத்தையும் அவர் மீது சுமத்தினார். அவர் ஐஸ்வர்யமாய் இருந்தாலும், நம் நிமித்தம் அவர் தரித்திரர் ஆனார், அவரின் தரித்திரம் மூலம் நாம் ஐஸ்வர்யம் ஆகும் வண்ணம்.

ஜெபம்

பிதாவே, உம்முடைய குமாரனின் தாழ்மை மற்றும் மனதுருக்கத்தை கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். அவருடைய தழும்புகளாலேயே நாங்கள் குணமாகிறோம். உம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்தில் எங்களை அனுதினம் புதிப்பியும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.