நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 12 நாள்

"நாள் 12: கன்மலை"

தோட்டக்காரருக்கு திராட்சை தோட்டத்தை குத்தகைக்கு விட்ட உவமையில், தோட்டத்தின் உரிமையாளர் அதை குத்தகைக்கு விட்டு பிரயாணம் செல்கிறார். அவர் தன் ஊழியர்களை அனுப்பி அவர் பங்கை கேட்கிறார். அவர்களை அந்த தோட்டக்காரன் கொலைசெய்கிறான். முடிவில் அவர் தன் குமாரனை அனுப்புகிறார், "என் குமாரனுக்கு அஞ்சுவார்கள்" என்று சொல்லி (மாற்கு 12:6). ஆனால் அவர் தவறுசெய்கிறார். அவருடைய குமாரனையும் கொன்றுபோடுகிறான்.

இயேசு சங்கீதம் 118-ஐ குறிப்பிட்டு இந்த உவமையை புரியவைக்கிறார் "ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று". (மாற்கு 12:10-11; மத்தேயு 21:42). வேறு விதம் சொல்லவேண்டுமானால், தேவனே அந்த தோட்டத்தின் உரிமையாளர். அந்த குத்தகைக்காரர்தான் மக்கள். ஆராதனை கீழ்ப்படித்தலின் மூலம் அவர்கள் அவருக்கு கனிகொடுத்திருக்கவேண்டும். ஆனால் அவருடைய தீர்க்கதரிசைகள் தேவமக்களை அவர்கள் தள்ளினார்கள். முடிவில் தேவ குமாரனை அனுப்பினார். ஆனால் அவரையும் அவர்கள் தள்ளினார்கள். முரட்டாட்டத்தில், அவரை தேவகுமாரன் என்று ஏற்றுக்கொள்ளாமல் போனார்கள். அதற்குமாறாக அவரை கொன்றுபோட்டார்கள்.

ஆனாலும் இயேசு தன் கோபத்தினால் அந்த மக்களை அழித்துப்போடவில்லை. அவருடைய மறுப்பு தேவனுடைய திட்டமாக இருந்தது - "கர்த்தராலே ஆயிற்று". "அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது" ஏனென்றால் கிறிஸ்துவின் மரணம் மரணத்தையே ஜெயித்தது. இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பி அவரை நம்புகிறவர்களுக்கு தேவன் அவரை இரட்சிப்பின் கன்மலையாக வைத்திருக்கிறதினால் நாம் களிகூருகிறோம். அவரில், நாம் நம்பும்போது, என்றென்றும் வாழ்ந்து மரிக்கமாட்டோம் (யோவான் 11:25-27).


ஜெபம்

தேவனே, உம்முடைய நல்ல சித்தத்தில் அனைத்தையும் செய்கிறீர். கிறிஸ்துவின் மரணம் தோல்வியாக தோன்றினாலும், அவரை மரணத்திலிருந்து எழுப்பி அவரை ஜெயிக்க செய்தீர். அவரில் நாங்கள் பாடுகிறோம் "நாங்கள் மறுப்பதில்லை, என்றும் வாழுவோம் (சங்கீதம் 118:17). அவரே எங்கள் இரட்சிப்பு. அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.