நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

"நாள் 17: நாமம்"
இஸ்ரவேல் ராஜாவின் பதவியேற்ப்பில் இஸ்ரவேல் மக்கள் சங்கீதம் 72 போல ஒரு ஜெபத்தை ஏரெடுப்பார்கள். இந்த ஜெபம் ராஜாவை ஏற்றுக்கொள்வது மாத்திரம் அல்ல, அந்த தலைவருக்கான சில எதிர்ப்பார்ப்புகளை குறித்தது. ராஜா என்பவர் தேவனுடைய மக்களுக்கு நன்மைகள் வர ஒரு மார்க்கமாக கருதப்பட்டார், ஆகவே அவர் நீதி, நியாயத்தை சரியாக காக்க எதிர்ப்பார்க்க பட்டார். ராஜாவை நோக்கி தயவு, விடுதலைக்காக பார்ப்பது எதோ நடக்காத காரியம் அல்ல. இஸ்ரவேலின் ராஜா இயற்கையாகவே ஒரு உதவுகிறவராகவும் காப்பாற்றுகிறவராகவும் இருந்தார். ராஜாவும் அவ்வாறே இருக்க எதிர்ப்பார்க்கப்பட்டார்.
அன்றிலிருந்து இன்று வரை, எந்த ராஜாவும் அந்த திவ்விய அளவுகளை எட்டவில்லை. இன்று அநேகர் நம்முடைய தலைவர்களின் மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டோம், அவர்களை நம்புவதுமில்லை, மற்றவர்கள் நம்மை காப்பாற்ற இவரோ அவரோ தான் சரியானவர் என்று சொல்கிறார்கள். கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாக நாம், தேவன் தேவையிலிருப்பவர்கள், தரித்திரர், திக்கற்றவர்களுக்கு உதவ ஒருவரை அனுப்பியிருக்கிறார் என்று அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவில், அவரிடம் ஜெபிக்கும்போது நமக்கு நன்மைகள் நடக்கும் என்று அறிந்திருக்கவேண்டும். ராஜா உண்மையில் உனக்காக கவனித்து எல்லா தேவைகளையும் செய்கிறார் என்று அறிந்திருக்கிறாயா? அவர் நாமத்தை அழைத்திருக்கிறாயா?
ஜெபம்
வல்லமையான தேவனே, நாங்கள் தேடும் ராஜாவாக உம்முடைய குமாரன் இருப்பதினால் உம்மை துதிக்கிறோம். அவர் இரக்கம் நாங்கள் பார்த்த எல்லா இரக்கத்தை காட்டிலும் பெரிது. இந்த நீதியான ராஜாவை விசுவாசிக்கவும் கீழ்ப்படியாவும் உதவும். உம்முடைய நாமம் என்றென்றைக்கும் துதிக்கப்படுவதாக. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.
இஸ்ரவேல் ராஜாவின் பதவியேற்ப்பில் இஸ்ரவேல் மக்கள் சங்கீதம் 72 போல ஒரு ஜெபத்தை ஏரெடுப்பார்கள். இந்த ஜெபம் ராஜாவை ஏற்றுக்கொள்வது மாத்திரம் அல்ல, அந்த தலைவருக்கான சில எதிர்ப்பார்ப்புகளை குறித்தது. ராஜா என்பவர் தேவனுடைய மக்களுக்கு நன்மைகள் வர ஒரு மார்க்கமாக கருதப்பட்டார், ஆகவே அவர் நீதி, நியாயத்தை சரியாக காக்க எதிர்ப்பார்க்க பட்டார். ராஜாவை நோக்கி தயவு, விடுதலைக்காக பார்ப்பது எதோ நடக்காத காரியம் அல்ல. இஸ்ரவேலின் ராஜா இயற்கையாகவே ஒரு உதவுகிறவராகவும் காப்பாற்றுகிறவராகவும் இருந்தார். ராஜாவும் அவ்வாறே இருக்க எதிர்ப்பார்க்கப்பட்டார்.
அன்றிலிருந்து இன்று வரை, எந்த ராஜாவும் அந்த திவ்விய அளவுகளை எட்டவில்லை. இன்று அநேகர் நம்முடைய தலைவர்களின் மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டோம், அவர்களை நம்புவதுமில்லை, மற்றவர்கள் நம்மை காப்பாற்ற இவரோ அவரோ தான் சரியானவர் என்று சொல்கிறார்கள். கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாக நாம், தேவன் தேவையிலிருப்பவர்கள், தரித்திரர், திக்கற்றவர்களுக்கு உதவ ஒருவரை அனுப்பியிருக்கிறார் என்று அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவில், அவரிடம் ஜெபிக்கும்போது நமக்கு நன்மைகள் நடக்கும் என்று அறிந்திருக்கவேண்டும். ராஜா உண்மையில் உனக்காக கவனித்து எல்லா தேவைகளையும் செய்கிறார் என்று அறிந்திருக்கிறாயா? அவர் நாமத்தை அழைத்திருக்கிறாயா?
ஜெபம்
வல்லமையான தேவனே, நாங்கள் தேடும் ராஜாவாக உம்முடைய குமாரன் இருப்பதினால் உம்மை துதிக்கிறோம். அவர் இரக்கம் நாங்கள் பார்த்த எல்லா இரக்கத்தை காட்டிலும் பெரிது. இந்த நீதியான ராஜாவை விசுவாசிக்கவும் கீழ்ப்படியாவும் உதவும். உம்முடைய நாமம் என்றென்றைக்கும் துதிக்கப்படுவதாக. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.
More
இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.