நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 18 நாள்

"நாள் 18: தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியக்காரன்"

இதற்கு முந்தைய அதிகாரங்களில், ஏசாயா தீர்க்கதரிசியை கொண்டு தேவன் மக்களிடம் வாதாடுகிறார்; கள்ள விக்கிரகங்களை பின்தொடர்ந்தால், அவைகள் நம்மை ஏமாற்றி, அடிமைப்படுத்தி முடிவில் அழித்துப்போடும் என்று சொல்கிறார். இந்த அதிகாரத்தில், தேவனுடைய "தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியக்காரன்" நீதியை நிலைநாட்டவும் சிறைகளில் கட்டப்பட்டவர்களுக்கு விடுதலையை கொடுக்கவும் அழைக்கப்படுகிறார் (வசணம் 7). இது இஸ்ரவேலுக்கு ஒரு பாடமாக இருந்தது, நமக்கு இன்று ஒரு பாடமாக இருக்கிறது.

இந்த விக்கிரகாரத்தின் சுபாவம் தகுதியில்லாதவற்றை நாம் ஆராதித்து செவிக்கும்போது உண்டாகிறது. கிறிஸ்துவ செய்தியின் மையத்தில், இயேசு கிறிஸ்துவே அந்த "தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியக்காரன்", அவரே எல்லா ஆராதனைக்கு தகுதியுள்ளவர் என்பதாகும்.

நாம் விக்கிரங்களை நம்முடைய ஜீவியத்திலிருந்து தள்ளிவிட்டு உண்மையான ஆராதனையை துவக்க எவ்வாறு தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வது? வசனம் 1-4-இல், தேவன் "களிகூருகிறவரை" நாம் "தரிசிக்கவேண்டும்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. தரிசிப்பது என்றால் பார்த்து புரிந்துகொள்வதாகும். ஏசாயா இஸ்ரவேல் மக்கள் தேவனால் நியமிக்கப்பட்டு அவர் ஆவியானவரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியனை பார்த்து புரிந்துகொள்ள அழைக்கிறார். இந்த ஊழியனை தரிசிப்பதால் நாம் எது உண்மை, எது போலி என்று அறிந்துகொள்கிறோம், (ஏசாயா 41) இரும்பினாலும் காற்றினாலும் நிறைந்த போலியான விக்கிரகத்திலிருந்து (யோவான் 1) ஆவியால் நிறைந்த மாம்சத்தில் வந்த ஊழியனை தெரிந்துகொள்ளலாம்.

ஜெபம்

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி உம்மை துதிக்கிறோம். உம்மிலே தெய்வத்தின் முழுமை விளங்குகிறது, விக்கிரக ஆராதனையும் ஆனால் வரும் அழிவும் தீருகிறது. நீர் உடன்படிக்கை செய்யும் உம்முடைய வார்த்தைக்காக நன்றி. அதை நாங்கள் விரும்பி ஆச்சரியமாக நோக்கி பார்க்கிறோம். (லூக்கா 4:18. கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.