பீட் பிரிஸ்கோவின் தகப்பன் உங்களை நேசிக்கிறார்மாதிரி

நாள் 15
தந்தையின் முக்கிய தரம்
தேவன் பாவிகளை நேசிக்க வேண்டும் என்பது திகைக்க வைக்கிறது; ஆனால் அது உண்மை. நேசிக்க முடியாத மற்றும் நேசிக்கப்படத்தகாத (தான் நேசிக்கப்படத்தகாதவர் என நினைக்கும்) அனைவரையும் தேவன் நேசிக்கிறார்… மனிதர்களிடையே அன்பு அவர்கள் அன்புக்குரியவர்களின் ஏதோவொன்றால் தூண்டப்படுகிறது, ஆனால் தேவ அன்பு இலவசமானது, தூண்டப்படாதது, காரணமற்றது,தானாக வருவது. தேவன் மனிதர்களை நேசிக்கிறார், ஏனெனில் தேவன் மனிதர்களை நேசிக்கும்படி தேர்ந்தெடுத்தார். —ஜே. ஐ. பேக்கர், தேவனை அறிதல்
கர்த்தர் மகத்துவமானவர் மற்றும் புரிந்துகொள்ள முடியாதவர். அவர் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டவர். நல்ல வேளையாக, அவரது நம்பமுடியாத பரந்த தன்மையிலிருந்து, அவர் தன்னைப் பற்றிய மிக முக்கியமான மற்றும் அணுகக்கூடிய பகுதிகளை நமக்கு வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்தார். மேலும் அவர் வெளிப்படுத்தியதில் ஒரு பண்பு உள்ளது, அது எல்லாவற்றிலும் மிகவும் நம்பமுடியாதது, ஆச்சரியமானது.
“…இரக்கமும் … ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தை காக்கிறவர்…” (யாத்திராகமம் 34:6-7)
அவர் அன்பானவர்.
நாம் தேடும் எல்லாவற்றிற்கும் தேவனின் இந்த ஒரு பண்புதான் அடிப்படையானது; அவரை அறிவது மற்றும் அவரை அறியச் செய்வது பற்றி நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலும் இந்த அடிப்படையான பண்பே.
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:7-10)
நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாம் நேசிக்கப்பட வேண்டும் என்ற ஆசை ஆழமாக வேரூன்றி உள்ளது. உலகம் நமக்கு வழங்குவற்றில் இருந்து குறைந்த அளவிலான அன்பை மாத்திரமே கண்டுகொள்ள முடியும். எனினும், நாம் தேடும் உண்மையான அன்பை அவரில் மட்டுமே காண முடியும், ஏனென்றால் நாம் தேடும் அன்பே அவர் தான்..
தேவனே, நீர் எனக்காகச் செய்த எல்லாவற்றிற்கும் என்னால் போதுமான அளவு நன்றி சொல்ல முடியாது! உங்கள் அன்பு முடிவற்றது மற்றும் நிபந்தனையற்றது. நான் மற்றவர்களுடன் பழகும்போது அந்த அன்பை என் வாழ்வில் வெளிப்படுத்த விரும்புகிறேன், அதற்கு எனக்கு உதவும். உம் அன்பை நான் உணர்வதற்கு முன், நான் தொலைந்து போனேன், ஆனால் இப்போது உமது அன்பினால் நான் கண்டுபிடிக்கப்பட்டேன்! உமது அன்பு மற்றவர்களை உம்மிடம் கொண்டு வரும் வகையில் அந்த அன்பு என் மூலம் வெளிப்பட உதவி செய்யும்! ஆமேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தேவனே நமது பரம தகப்பன் என்றும் நாம் அவருடைய குழந்தைகள் என்று ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஆனால் தேவனே நமது தந்தையாக தொடர்புகொள்வது எப்பொழுதும் எளிதானது அல்ல—குறிப்பாக நமது பூமிக்குரிய அப்பாக்கள் நாம் விரும்பும் அன்பைக் காட்ட தவறினால். இந்த 16-நாள் திட்டத்தில், பீட் பிரிஸ்கோ, அன்பிற்கான நமது எல்லா ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் தேவனிடம் நம் கவனத்தை ஈர்க்கிறார் மற்றும் வேதம் எவ்வாறு தேவனை நமது நல்ல மற்றும் பரிபூரண தந்தையாக வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருடைய கணக்கு

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்
