“ரூபன், நீ என் மூத்த மகன்,
நீ வலிமையும் என் பலனின் முதல் அடையாளமுமானவன்,
நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன்.
தண்ணீரைப் போல் தளம்புகின்றவனே, நீ இனிமேல் மேன்மை அடைய மாட்டாய்;
ஏனெனில், நீ உன்னுடைய தந்தையின் படுக்கையின்மீது ஏறினாய்,
என் கட்டிலின்மீது ஏறி என் படுக்கையை தீட்டுப்படுத்தினாய்.