தலைகீழ் இராஜ்ஜியம்: மலைப் பிரசங்கத்தில் 8 நாட்கள் வேதபாடத் திட்டம்மாதிரி

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக
சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். மத்தேயு 5:9
முன்னுரை
“இன்று தேவாலயத்தில் அமைதிக்கு மிக முக்கியமான தடையாக இருப்பது எது?” என்று சமீபத்தில் ஒரு பயிற்சியாளர் என்னிடம் கேட்டார். பதிலாக ஒரே நேரத்திற்குள் மனதிற்குள் பல சத்தம் கேட்டது: அற்ப பொறாமைகள், ஒற்றுமையை சீர்குலைக்கும் லட்சியங்கள், திருமணத்தை முறித்து விவாகரத்தில் விளைவிக்கும் குடும்ப சண்டைகள், மற்றும் பல. ஆனால் அவை அனைத்திற்கும் மேலாக சமகால தேவாலயத்தில் அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது—தேவன் அளித்த பெரிய கட்டளையை விட (மத்தேயு 28:16-20) கலாச்சார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியல் பாகுபாடு.
இன்று, பல கிறிஸ்தவர்கள் தங்கள் அரசியல் கட்சியை கிறிஸ்துவின் ராஜ்யத்தின் வெளிப்படையான இருப்புடன் தொடர்புப்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் கோஷங்கள் மற்றும் சீற்றங்களை உருவாக்கும் நடுநிலையற்ற தோரணையின் மூலம் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக, எதிர் தரப்பில் உள்ள உறுப்பினர்கள் வெவ்வேறு நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு பயங்கரமான தீய சக்தியாகவும் பார்க்கப்படுகிறார்கள். அரசியல் முற்போக்காளர்களையும் அரசியல் பழமைவாதிகளையும் இப்போது தேவாலயத்திற்குள் கூட பிரிக்கும் விரோதம் இதுதான்.
சபை இந்தப் போரை ராஜரீகமான விதத்தில் அனுக இயலுமா?
தியான ஆராய்ச்சி
சமாதானம் என்பது வெறுமனே நன்மை செய்வதோ அல்லது அன்பாக இருப்பதுவோ அல்ல. விரோதத்தின் தீப்பிழம்புகளை அணைப்பதும் அல்ல. இது சமுதாய வாழ்வுக்கான தேவனின் தெய்வீகத் திட்டம், அதில் கிறிஸ்து நம் இதயங்களை நிரப்புகிறார், பின்னர், அப்படியே உலகம் முழுவதையும் நிரப்புகிறார்.
உற்று நோக்கு
தேவன் சமாதானத்தை விரிவுபடுத்தும் விதம், அவர் நீதி வழங்கும் விதத்தை ஒத்திருக்கிறது—நமக்கும், நமக்குள்ளும், நம் மூலமாகவும். பவுல் விளக்குவது போல், தேவன் நீதிமான்களுக்கு "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக" சமாதானத்தை அளிக்கிறார் (ரோமர் 5:1). ஆவியின் சிந்தை கொள்வதே நம் உள்ளான அமைதியின் ஆழமான பரிமாணங்களை விளைவிக்கிறது (ரோமர் 8:6). இறுதியாக, "சமாதானத்துக்கேற்றவற்றை செய்யவும், பிறரை பக்தியில் பலப்படுத்தும் காரியங்களை செய்யவும்" நாம் நாடுதல் சமாதானத்தை நம் வழியாக வழிந்தோடச் செய்ய தேவனை அழைக்கும் அழைப்பாகும். (ரோமர் 14:19). இந்த வரிசை முக்கியமானது, ஏனென்றால் நம்மிடம் ஏற்கனவே இல்லாததை நம்மால் வழங்க முடியாது.
இருப்பினும், கவலை நமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட அமைதியைப் பறித்துவிடும். பயமுறுத்தும் அல்லது எரிச்சலூட்டும் சில நேரங்கள் நமக்கு இருக்கலாம்—அது சில நாட்கள், வாரங்கள் அல்லது ஒரு பருவகாலமாக நீடிக்கலாம்— ஆனால் தேவனுக்கு நன்றி, ஏனெனில் அத்துன்பங்கள் எப்போதும் நிலைக்காது. இவ்விதமான மனப்போராட்டங்களை விட மிகவும் அடிப்படையான ஒரு காரியம், பிதா,குமாரனாகிய இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குள்ளான நமது அடையாளம். இவ்விதமான நமது அடையாளம் நம் இதயங்களை அடக்கி, யாராலும் தடுக்கமுடியாத அமைதியை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.
நடைமுறையில், சமாதானம் செய்வதிற்கான நமது அழைப்பு, ஆவியானவர் நம் இதயத்தில் என்ன செய்கிறார் என்பதைப் பற்றிய பொது நிரூபணம் ஆகும்—இது நமக்குள் கிறிஸ்து விதைக்கப்பட்டு வளர்வதை காட்டுகிறது.
அப்பியாசப்படுத்துதல்
சந்தேகம் மற்றும் உட்பூசல்களுக்குப் பதிலாக, கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, பொறுமையையும் கருணையையும் வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும் (1 கொரிந்தியர் 13:4, 7)? நாம் எப்படி நடத்தப்பட விரும்புகிறோமோ அப்படியே (மத்தேயு 7:12; லூக்கா 6:31) நாம் மற்றவர்களை நடத்தினால் எப்படி இருக்கும்? "ஒவ்வொருவருக்கும் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வார்த்தைகள் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாகவும், உப்பால்மேறினதாயும் இருப்பதாக," (கொலோசெயர் 4:6) என்ற பவுலின் வார்த்தைகளை நாம் மனதில் கொண்டு நடந்தால் எப்படி இருக்கும்?
உதாரணமாக, பிறக்காத குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், குடும்பத்திற்கான தேவனின் வடிவமைப்பைப் பாதுகாப்பதற்கும், இன அநீதியை நிவர்த்தி செய்வதற்கும் ஏழைகளுக்கு உதவுவதற்கும் நாம் உறுதியுடன் இருக்க முடியுமா? இந்த வகையான சமாதானம் செய்தலுக்கு நமது இறையியல் நம்பிக்கைகளை நாம் சமரசம் செய்ய வேண்டியதில்லை. எதிரிகளிடம் அன்பை வெளிப்படுத்தியவரை, சிலுவையில் அறையப்பட்ட நமது இரட்சகரை, பின்பற்றுவதற்கு இது தேவைப்படுகிறது (மத்தேயு 5:44).
தேவனின் பிள்ளைகள் என்ற நமது நிலை, சமாதானத்தை உண்டாக்கும் தெய்வீக நடைமுறைக்கு நம்மை மேலும் மேலும் வழிநடத்துகிறது. இப்படிப்பட்ட சமாதானம் சுலபமாகவோ அல்லது மலிவாகவோ வராது, ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் தேவன் நிச்சயமாக அதை மேலோங்கச் செய்வார் (எபிரெயர் 13:20).
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் (மத்தேயு 5:2–12), உலகிலிருந்து வேறுபட்டு, எதிர் கலாச்சாரத்தில், கிறிஸ்துவில் வேரூன்றிய ஒரு புதிய அடையாளத்துடன் வாழும்படி நம்மை வலியுறுத்துகிறார். தலைகீழ் இராஜ்ஜியம் எனும் இந்த வாசிப்புத்திட்டம் அத்தகைய எதிர் உள்ளுணர்வு ஞானத்தையும், இன்றைய நாட்களுக்கு அது பொருந்துமா என்றும் ஆராய்கிறது.
More