தலைகீழ் இராஜ்ஜியம்: மலைப் பிரசங்கத்தில் 8 நாட்கள் வேதபாடத் திட்டம்மாதிரி

The Upside Down Kingdom: An 8 Day Study Through the Beatitudes

8 ல் 5 நாள்

இரக்கத்தின் முகம்

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள். மத்தேயு 5:7

முன்னுரை

வடக்கு இத்தாலியில் உள்ள கோமோ ஏரிக்கு அருகில் உள்ள ப்ரெஸ்டினோவில் மரினெல்லா பெரெட்டா என்ற 70 வயது பெண் இறந்து கிடந்தார். அவள் இறந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவளது எலும்புக் கூட்டைக் காவல்துறையினர் கண்ட கண்டுபிடித்தபோது, ​​மம்மி செய்யப்பட்ட நிலையில் அவள் மேஜையில் அமர்ந்திருந்தாள். மரினெல்லாவை குறைந்தது இரண்டரை ஆண்டுகளாக  பார்க்கவில்லை என அண்டை வீட்டார் கூறினர்.இதைப்பற்றிய செய்தி எழுதுகையில் அவள் "தனிமையின் ஆள்தத்துவம்" என்று  பத்திரிகையாளர் மாசிமோ கிராமெல்லினி எழுதினார். "மக்கள் தனியாக இறக்கிறார்கள். நாம் தனியாக வாழ்கிறோம், இது கிட்டத்தட்ட மோசமானது.”

அவரது கட்டுரையின் இறுதி வார்த்தைகள் நம்மைக் குற்றப்படுத்துபவை: “அவரது குடிசையின் மூடிய வாயிலுக்குப் பின்னால் மரினெல்லாவின் கண்ணுக்குத் தெரியாத வாழ்க்கையின் மர்மம் நமக்கு ஒரு பயங்கரமான பாடத்தைக் கற்பிக்கிறது. உண்மையான சோகம் அவள் மரணத்தை மற்றவர்கள் கவனிக்காதது அல்ல. மரினெல்லா பெரெட்டா உயிருடன் இருப்பதை அவர்கள் உணரவில்லை என்பதே அது.”

தியான ஆராய்ச்சி

நாம் தேவ தயவைப் பெற்ற பிறகு, மற்றவர்களின் தேவைகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஒரே கூரையின் கீழ் வாழும் நாம் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை புறக்கணிப்பது எளிது, கண்ணுக்கு தெரியாத அண்டை வீட்டாரையும் நண்பர்களையும் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அவற்றை கவனித்து செயல்படவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

உற்று நோக்கு

மற்றவர்களைக் கவனிக்கவும், அவர்களின் தேவையை இரக்கத்துடன் ஒப்புக்கொள்ளவும் இயேசு நம்மை அழைக்கிறார். “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,” (மத்தேயு 9:36). இதுவே மலை பிரசங்கத்தின் இதயத்துடிப்பு எனலாம்—நம் அயலாரோடு துன்பப்படுவது என கெல்வின் சொல்வதை நாம் இன்று அனுதாபம் என்கிறோம்.

தேவ தயவை வெளிப்படுத்துவது என்பது கருணையின் சிறிய துளியை அல்ல, ஒரு பெரிய பிரளயத்தை உருவாக்கும். “அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.’” (மத்தேயு 18:21).

மன்னிப்பு என்பது வெறும் கருணைக்கு உதாரணம் அல்ல; இது விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் கடைசி கால நிலைச் செயல். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலம், கிறிஸ்து மீண்டும் வந்து, இரக்கத்துடன் எல்லாவற்றையும் சரிசெய்வார் என்ற எங்கள் நம்பிக்கையை நாங்கள் செயல்படுத்தி காண்பிக்கிறோம். நமது இரட்சிப்பு, மிகவும் மோசமான தீமைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள நமக்கு உதவுகிறது. பவுல் சொல்கிறார் “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.” (ரோமர் 5:20).

அப்பியாசப்படுத்துதல்

நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டுமானால் அவருடைய இரக்கமுள்ள இருதயத்தைப் பெற வேண்டும், ஏனெனில் தேவன் ஒருவரே நம் காயங்களை முழுவதுமாக ஆற்றி, நம் வாழ்வின் செத்த பகுதிகளை உயிர்ப்பிக்க முடியும். இதைப் பற்றி இயேசு சொல்லும்போது, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (லூக்கா 23:34). நாமும் இதை சொல்வது தானே சரியாக இருக்கும்?

கர்த்தர் நம்முடைய கடினமான, மன்னிக்காத இருதயங்களை மாற்றும்படி ஜெபிப்போம். கிறிஸ்துவின் நாமத்தில்நஒவ்வொரு முறையும் நாம் இரக்கத்தையும், மன்னிப்பையும், தயவையும் காண்பிக்கும்போது—ஒருவனுடைய மற்றுமொரு குற்றத்தை மன்னிக்கும் அன்பை காண்பிக்கும்போது—அவரது வரவிருக்கும் ராஜ்ஜியத்தை கிட்டி சேர்கிறோம், பரலோகத்தில் இருப்பதைப் போலவே பூமியிலும் நாம் அனுபவிக்கும் ராஜ்யத்தின் ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறோம்.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

The Upside Down Kingdom: An 8 Day Study Through the Beatitudes

இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் (மத்தேயு 5:2–12), உலகிலிருந்து வேறுபட்டு, எதிர் கலாச்சாரத்தில், கிறிஸ்துவில் வேரூன்றிய ஒரு புதிய அடையாளத்துடன் வாழும்படி நம்மை வலியுறுத்துகிறார். தலைகீழ் இராஜ்ஜியம் எனும் இந்த வாசிப்புத்திட்டம் அத்தகைய எதிர் உள்ளுணர்வு ஞானத்தையும், இன்றைய நாட்களுக்கு அது பொருந்துமா என்றும் ஆராய்கிறது.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய க்ராஸ்வேக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.crossway.org/ ஐ பார்வையிடுங்கள்