தலைகீழ் இராஜ்ஜியம்: மலைப் பிரசங்கத்தில் 8 நாட்கள் வேதபாடத் திட்டம்மாதிரி

ஒருவனை ஐஸ்வரியவானாக மாற்றும் தரித்திரம்
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3
தொடக்கம்
ஹெராயின் போதைக்கு அடிமையான கும்பலுக்கு போதைப் பொருள் விற்பவர்களிடமிருந்து வாங்கி, அதை அதிகாரிகளுக்கு தெரியாமல் கும்பலுக்கு கொடுப்பவர் மைக் வெட்ரோன். அவர் தனிமை, தொடர்ச்சியான மரண அச்சுறுத்தல், மற்றும் ஓடி ஓடி ஒளிந்து வாழ்வது ஆகிய காரணங்களால் சோர்ந்து போனார், எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவர தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. தெற்கு புளோரிடாவில் ஒரு மேகமூட்டமான காலை நேரத்தில், மைக் தனது கடைசி உணவை சாப்பிடுவதற்காக பிக் ஆப்பிள் பேகல் எனும் அவரது விருப்பமான உணவகத்தில் இறங்கி உணவருந்தினார். மீண்டும் தனது வீட்டிற்கு வந்து, சாகும் வேளையில் தனிமையைத் தவிர்க்க துனை தேடி தொலைக்காட்சி சேனல்களை மாற்றினார். ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒரு பிரசங்கி, "உங்கள் சட்டை காலரைப் பிடித்து, கட்டாயமாக முழங்காலிட வைக்கும் வழியும், வலிமையும் வாழ்க்கைக்க இருக்கிறது" என்று கூறினார்.
மைக் வெட்ரோன் தொலைக்காட்சி சத்தத்தை கூட்டினார்.
“எல்லா ஆத்துமாவையும் கட்டும் ஒரு சங்கிலி உள்ளது,” என்று பிரசங்கியார் ஆச்சரியப்பட்டார், “ஆம், பாவம் எனும் சங்கிலி அது—இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் அந்த அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலையாக்குகிறது.” தீடிரென, தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்த சுவிஷேசகர் பார்வையாளர்களை இயேசுவை அண்டிக் கொள்ளும்படி அழைத்தார், மைக் வெட்ரோன் தன்னையும் அறியாமல், "ஆம், நான் இயேசுவை ஏற்றுக் கொள்கிறேன்!" எனக் கத்தினார். அந்த நொடி முதல் அவர் தனிமையாக உணரவில்லை.
மைக் வெட்ரோன் இப்போது வாழ்வின் முடிவை நோக்கி அல்ல, புதிய துவக்கத்தை நோக்கி சென்றார்.
தியான ஆராயச்சி
நாம் நமது ஆவிக்குரிய எளிமையை உணரும் போது, ராஜாவினுடைய ஐஸ்வர்யத்தை பெற்றுக்கொள்ள தயாராகி விடுகிறோம். இராஜ்ஜியம் பற்றி பிடிப்பவர்களுடையதல்ல, அது நொறுங்குண்டோருடையது—தங்கள் கடை நிலைக்கு வந்து, வெறுமையானோராய் தேவனை அண்டிக் கொண்டோருடையது.
உற்று நோக்கு
“பரலோக ராஜ்ஜியம்” என்னும் சொற்றொடர் மத்தேயு சுவிசேஷ புத்தகம் முழுவதும் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இது “தேவனுடைய இராஜ்ஜியத்தைக்” குறிக்கிறது. இது தேவனுடன் இணைந்த உண்மையான, அமைதியான, தூய்மையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை விவரிக்கிறது. இத்தகைய ஆசீர்வாதங்கள் நம் விக்கிரகங்களை எதிர்க்கின்றன—ஆறுதல், வெற்றி மற்றும் தேசிய பெருமையாகிய விக்கிரகங்கள்— அதே சமயம் அதை விட பெரிதானவற்றை உறுதியளிக்கிறது. தேவ ராஜ்யமே நம்மை திருப்திபடுத்தும் உண்மை, சத்தியம். பரலோக ராஜ்யத்தைப் பற்றிய வெறும் அவதூறு மற்றும் கேலிக்கூத்துகளே இந்த சிலைகளும் விக்கிரகங்களும். எனவே, இயேசு தனது மலைப் பிரசங்கத்தை ராஜ்யத்தைக் குறிக்கும் தனது அருட்கொடையாக வடிவமைத்தார்: “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.” (மத்தேயு 5:3;5:10).
பரலோகராஜ்யத்தை “அவர்களுடையது” என்று இயேசு எப்படி விவரிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். உட்பிரிவின் தொடக்கத்தில் இந்த வார்த்தையை நிலைநிறுத்துவது, ராஜ்யம் என்பது இந்த குறிப்பிட்ட குழுவிற்கும், ஆவியில் ஏழைகளுக்கும், ஒதுக்கப்பட்ட மற்றும் மறக்கப்பட்டவர்களுக்கும் என்ற உணர்வைத் தருகிறது. இது வாழ்க்கையில் திருப்தியடைபவர்களுக்கும், தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கும் அல்ல. இது தங்களை நம்புபவர்களுக்கு அல்ல, ஒரு நாளை வெல்லும் இயல்பான திறன் கொண்டவர்கள் அல்ல. மரணப்படுக்கையில் இருந்து மார்ட்டின் லூதர் அறிவித்தது போல், “நாம் அனைவரும் பிச்சைக்காரர்கள்; இதுவே உண்மை."
நடைமுறைபடுத்துதல்
இயேசுவின் சமகாலத்தவர்களில் பலர் யோசுவா அல்லது தாவீது போன்ற ஒரு மீட்பரை எதிர்பார்த்தனர், அவர் ரோமர்களை தோற்கடித்து பூமிக்குரிய ராஜ்யத்தை நிறுவுவார் என எதிர்பார்த்தனர். மாறாக, அவர் வரி வசூலிப்பவர்களின் நண்பராக அறியப்பட்டார்—வரி வசூலிப்பவர்கள் இஸ்ரவேல் அரசின் எதிரியான ரோமாருடன் இணைந்த துரோகிகளாக அறியப்பட்டனர்.
நம் இரட்சகரின் முன்மாதிரியின்படி, நாம் எதிர் பேச வேண்டிய அவசியமில்லை. அதே போல நமது வாதமே இறுதி வாதமாகவோ இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆவியில் ஏழ்மையான கிறிஸ்தவர்கள் அவதூறாக பேசப்பட்டாலும் மற்றோரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாலும் வாழ முடியும். ஏரோது அந்திபாஸுக்கு முன்பாக நம் இயேசு இருந்ததைப் போல் நம்மாலும் இருக்க முடியும்— அமைதியாக. ஒரு சமூக அல்லது அரசியல் காரியங்களில் வித்தியாசமாக சிந்திக்கும் நமது "எதிரியை" தோலுரிக்க வெளியேற்றுவதற்கு நாம் ஆசைப்படும்போது இத்தகைய எளிமை அவசியம்.
உங்களுடன் விவாதிக்க விரும்புவோரிடமும் நீங்கள் எப்படி ஆவியின் எளிமையுடன் எப்படி நடப்பீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் (மத்தேயு 5:2–12), உலகிலிருந்து வேறுபட்டு, எதிர் கலாச்சாரத்தில், கிறிஸ்துவில் வேரூன்றிய ஒரு புதிய அடையாளத்துடன் வாழும்படி நம்மை வலியுறுத்துகிறார். தலைகீழ் இராஜ்ஜியம் எனும் இந்த வாசிப்புத்திட்டம் அத்தகைய எதிர் உள்ளுணர்வு ஞானத்தையும், இன்றைய நாட்களுக்கு அது பொருந்துமா என்றும் ஆராய்கிறது.
More