தலைகீழ் இராஜ்ஜியம்: மலைப் பிரசங்கத்தில் 8 நாட்கள் வேதபாடத் திட்டம்மாதிரி

தேவனை தரிசித்தல்
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். மத்தேயு 5:8
முன்னுரை
மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தைப் பருவத்தில் பார்வையை இழந்த பிறகு, ஃபேனி ஜே. க்ராஸ்பீ 9000 பாமாலைகளுக்கு மேல் இயற்றினார், அதில் “ப்ளஸ்ட் அஸ்ஸுயரன்ஸ்,” “ஜீசஸ், கீப் மீ நியர் தி க்ராஸ்,” “ஐ ஆம் தைன்,ஓ லார்ட்.” க்ராஸ்பீ-ன் இப்படிப்பட்ட மகத்தான கிரியைகளுக்கு அவரது சிறந்த அறிவே காரணம் எனலாம். க்ராஸ்பீயோடு இணைந்து பணியாற்றிய ஹக் மெய்ன் என்பவர் சொல்கிறார், அவர் இரண்டு பாடல்களை ஒரே நேரத்தில் வடிவமைக்க முடியும், ஒவ்வொரு கவிதையின் வரிகளுக்கு இடையில் மாறி மாறி இரண்டு செயலாளர்களை ஓய்வில்லாமல் எழுத வைத்திருந்தார்.
இது அவருடைய ஊழியத்தின் ஒரு பகுதி மட்டுமே. இருபது வருடங்களுக்கும் மேலாக, அவர் மன்ஹாட்டனின் மீட்புப் பணிகள் மூலம் சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை பார்வையிட்டார். விசுவாசிகள் வாழ்க்கையின் முடிவில் கிறிஸ்துவை நேருக்கு நேர் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை சுட்டிக்காட்டி கிராஸ்பி அடிக்கடி தனது செய்திகளை கேட்போரை ஊக்கப்படுத்தினார். பல நூற்றாண்டுகளாக, நமது இந்த உச்சகட்ட நம்பிக்கையை சபைகள் அழகிய தரிசனம் என்று விவரிக்கிறது (1 கொரிந்தியர் 13:12).
தியான ஆராய்ச்சி
தேவன் நம் உள்ளிந்திரியங்களை ஆராய்கிறார், நமது நோக்கங்களை மதிப்பீடு செய்கிறார், நமது தனிப்பட்ட நடத்தைகளைக் கவனிக்கிறார். இத்தகைய இதய உந்துதல்களும் நோக்கங்களும் ராஜ்யத்தின் மையப் புள்ளியாகும்.
உற்று நோக்கு
பிரச்சனை என்னவென்றால், கடவுளை அறியாதவர்களின் பாவ இதயம் தன்னைத்தானே திருப்பிக் கொண்டு தேவனை விட்டு விலகுகிறது. இது பொய்யையும் பெருமையையும் விளைவிக்கிறது, மேலும் தனிமைப்படுத்தப்படுவதற்கும் மோதலுக்கும் வழிவகுக்கும் என அகஸ்டின் கூறுகிறார். மனம் தான் முக்கிய பிரச்சனை. நமது மிகவும் பணிவான மற்றும் பரோபகாரமான செயல்களும் கூட—பொது நலனை நாடுதல், மற்றவர்களுக்கு நாம் செய்யும் சேவைகளும் கூட—தவிர்க்க முடியாமல் பெருமைக்கான சந்தர்ப்பங்களாக மாறும். தூய்மைக்கான நமது பாசாங்குகள் பெரும்பாலும் ஒரு இரகசிய பாவத்தை மறைப்பதற்கான முயற்சிகளே.
அகஸ்டின் கூறுகிறார்: தேவனிடம் பேசுகையில்,"நீர் எங்களை உமக்காக உருவாக்கினீர், உம்மை வந்தடையும் வரை எங்கள் இதயம் அமைதியற்றதாயிருக்கிறது." அவர் ஒருமையில் "இதயம்" என்னும் பயன்படுத்துகிறார். "இதயங்கள்" என்னும் பன்மை வார்த்தையை பயன்படுத்தவில்லை, மனிதகுலம் ஒரு பொதுவான இதயத்தைப் பகிர்ந்து கொள்கிறது, நம் அனைவருக்குமான பொதுவான தேவை—நமது வெறுமை தேவனின் சுத்திகரிக்கும் பிரசன்னத்தால் நிரப்பப்பட வேண்டும் என்பதே. இதைத்தான் துல்லியமாக கர்த்தரின் ஆவியானவர் வேதவாக்கியத்தின் மூலம் நிறைவேற்றுகிறார்,இது நாம் கட்டுப்பாடின்றி மரணத்திற்கு நேராக ஓடும் ஓட்டத்தை உடைக்கும் மாற்றமாகும்.
குருட்டுத்தன்மையிலிருந்து ஆவிக்குரிய பார்வைக்கு மாறும்— இந்த அனுபவம்—இதுவே இரட்சிப்பின் வழி. ஹிப்போவில் உள்ள தனது சபையில் உரையாற்றிய அகஸ்டின், "இந்த வாழ்க்கையில் எங்கள் முழு வேலையும் கர்த்தரைக் காணக்கூடிய இதயத்தின் கண்ணை ஆரோக்கியத்திற்கு மீட்டெடுப்பதாகும்" என்று பிரசங்கித்தார். இது பார்வையை மிஞ்சும் பார்வை. இது கர்த்தரை தரிசித்தல்.
APPLICATION
நமது பார்வையின் கவனம் நம் இதயத்தின் மையத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த மலைப் பிரசங்கம் என்னும் அருட்கொடை நமக்கு நினைவூட்டுகிறது. அசுத்தமும் பரிசுத்தமான தேவ தரிசனமும் ஒன்றாக நடவாது. நம் நியாயத்திற்காக எழுப்பப்பட்டவரை நோக்கிய நாம் தூய்மையற்ற வாழ்வில் தொடர இரட்சிக்கப்படவில்லை. மாறாக, அசுத்தத்திலிருந்து புதிதாக ஜீவனுக்கு இரட்சிக்கப்படுகிறோம், இது நம்மை மிகவும் கவர்ந்திழுக்கும் வீணான விஷயங்களை விட கிறிஸ்துவை அதிகளவில் நேசிக்கச் செய்யும் செயல்முறை. இது படிப்படியான மற்றும் சிக்கலான செயல்முறை (நமது பார்வையில்).
பாலைவனத்தில் தாகம் எடுத்தவனைப் போல பரிசுத்தத்தை நாடித் தேடுபவர்கள் தேவனைத் தேடுகிறார்கள், அவர்கள் இரண்டையும் கண்டுபிடித்து என்றென்றும் தாகத்தைத் தணிவார்கள். உங்கள் இதயம் எங்கே?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் (மத்தேயு 5:2–12), உலகிலிருந்து வேறுபட்டு, எதிர் கலாச்சாரத்தில், கிறிஸ்துவில் வேரூன்றிய ஒரு புதிய அடையாளத்துடன் வாழும்படி நம்மை வலியுறுத்துகிறார். தலைகீழ் இராஜ்ஜியம் எனும் இந்த வாசிப்புத்திட்டம் அத்தகைய எதிர் உள்ளுணர்வு ஞானத்தையும், இன்றைய நாட்களுக்கு அது பொருந்துமா என்றும் ஆராய்கிறது.
More