தலைகீழ் இராஜ்ஜியம்: மலைப் பிரசங்கத்தில் 8 நாட்கள் வேதபாடத் திட்டம்மாதிரி

The Upside Down Kingdom: An 8 Day Study Through the Beatitudes

8 ல் 4 நாள்

ருசித்துப் பாருங்கள்

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். மத்தேயு 5:6

முன்னுரை

பசி எப்படி இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். குழந்தைகளாக இருக்கையில் நாம் பசிக்கும்போது அழுதிருக்கிறோம், நாங்கள் அழுதோம், பெரியவர்களான பின்பு பெரும்பசியின் நிமித்தம் நமக்கு எரிச்சல் உண்டாகலாம். தியாகம் செய்து சாதிக்க நம்மைக் கட்டாயப்படுத்தும், தூண்டும் பசியும் நமக்குத் தெரியும்; அந்தப் பசி நம் எண்ணங்களை ஆக்கிரமித்து, நமது தரிசனத்தை வடிவமைக்கிறது, நமது லட்சியங்களை உயர்த்துகிறது. காலப்போக்கில், இந்த பசி தான் நம் அடையாளத்தை வடிவமைக்கிறது. மருத்துவர்கள் அடிக்கடி சொல்வது போல, “நாம் உண்பதெதுவோ அதுவே நாம்,” ஆவிக்குரிய உலகிலும் இந்தக் கோட்பாடு மெய்யே.

நாம் சுயநலமான லட்சியம், போலித்தனம், பொருள்முதல்வாதம் மற்றும் துரோகம் ஆகிய உணவையே உட்கொள்ளும்போது, ​​இந்த குணங்களை வெளிப்படுத்துகிறோம். உணவுக்கு அடிமையானவர் பிரிங்கிள்ஸின் முழு டப்பாவையும் உட்கொண்டு பின்பு ஐஸ்கிரீம் டப்பாவை நோக்கிச் செல்வது போல, சில ஆரம்பகால சமரசத்திலிருந்து, சுய அழிவின் ஆழமான வடிவங்களான பேராசை, காமம், பொறாமை மற்றும் பிற கொடிய பாவங்கள் நாம் செல்லலாம். தத்துவஞானி ஜேம்ஸ் கே.ஏ. ஸ்மித் நமது பசியை "மறுவாழ்வு" செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். அதாவது, கிறிஸ்துவின் ஆளுகைக்கு நமது ஆசைகளையும், ஆழ்ந்த ஏக்கங்களையும் சமர்ப்பித்தல்.

நாம் நீதியின் மேலி பசி மற்றும் தாகமுள்ளவர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

தியான ஆராய்ச்சி

நாம் தேட வேண்டிய நீதி தேவனுடைய மீட்பின் கிருபையாகும்—நமக்கு மிகவும் தேவைப்படும் இடத்தில்,நேரத்தில் மனிதகுலத்தை ஆசீர்வதிக்கும் ஒரு கருணை: தேவனோடுள்ள உறவில், நமது ஆத்துமாவை புதுப்பித்தலில் மற்றும் சமூகத்தின் கட்டமைப்புகளில்.

உற்றுநோக்கு

தேவனுடைய நீதியானது, அவர் தமது இரட்சிப்பின் கிருபையின் கரத்தை நீட்டும்போது அவருடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. இயேது அந்த நீதியின் ஆள்தத்துவமானவர், இப்போது அவரை விசுவாசத்தால் தழுவும் எவரும் அவருடைய மீட்பின் ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறார்கள். வரி வசூலிப்பவரான மத்தேயு மனந்திரும்பியபோது, ​​தேவனின் நீதியையும் ஆசீர்வாதத்தையும் அனுபவித்தார். "பாவிகள்" என்று ஒதுக்கப்பட்டவர்களும் விபச்சாரிகளும் அப்படியே தேவனின் நீதியையும் ஆசீர்வாதத்தையும் அனுபவித்தார்கள். எனவே தான், “ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்று இயேசு பிரதான ஆசாரியரிடத்திலும் ஜனத்தின் மூப்பரிடத்தில் சொன்னார் (மத்தேயு 21:31). யூதத் தலைவர்கள் அவரைக் கைது செய்ய முற்பட்டதில் ஆச்சரியம் உண்டா? ஒரு மாற்று இராஜ்ஜியம் இப்போது அவர்களின் மதப் பொருளாதாரத்தை ஆக்கிரமித்தது—ஆம், அதுவே தேவனுடைய இராஜ்ஜியம்.

"இந்த ஆசீர்வாதம் சாதனையாளர்களுக்கு அல்ல, பெறுபவர்களுக்குக் கூறப்பட்டது" என்று டொனால்ட் ஹாக்னர் கூறுகிறார்.” தேவனின் கிருபை தேவைப்படும் ஒன்றை செய்ய நம் பலனை நாடுதலை எதிர்க்க மிகவும் போராட வேண்டும். ஆரம்பம் முதல் இறுதி வரை நாம் தெய்வீக முயற்சியால் மாத்திரமே இரட்சிக்கப்படுகிறோம். ஆபிரகாம் போன்ற கோழைகளையும், தாவீதைப் போன்ற விபச்சாரர்களையும் கொலைகாரர்களையும் கர்த்தர் ஏற்றுக்கொண்டதை வேறு எப்படி விளக்குவது? (ரோமர் 4:1-8 ஐப் பார்க்கவும்.) அதுவுமல்லாமல்நநம்முடைய சொந்த நம்பிக்கையை வேறு எப்படி விளக்குவது?

அப்பியாசப்படுத்துதல்

விசுவாசத்தினால் மட்டுமே நியாயப்படுத்தப்படும் இந்த நற்செய்திக்காக போராடும் போது, சீர்திருத்தவாதிகள் நமது விசுவாசம் தனியாக இருப்பதில்லை என்று வலியுறுத்தினார்கள். "நற்செயல்கள் இல்லாத விசுவாசத்தையோ அல்லது அவை இல்லாமல் நிற்கும் நியாயத்தையோ நாம் கனவு காணவில்லை" என்று கால்வின் உறுதியாக நம்பினார். கிறிஸ்துவுடன் ஐக்கியப்பட்டதன் விளைவாக, ஆவியினாவரின் புதுப்பிக்கும் வேலையை நாம் பார்க்கிறோம், அது நீதியின் கனிகளைத் தருகிறது. (கலாத்தியர் 5:22–23).

இப்படியாக, தேவனாகிய இயேசு நம் உள்ளான பசியை முழுதுமாக மாற்றுகிறார். மார்ட்டின் லூதர் கூறுகிறார், "அத்தகைய நபர் ஒவ்வொருவரின் பொது நலனையும் சரியான நடத்தையையும் மேம்படுத்துவதற்குத் தொடர்ந்து உழைத்து, பாடுபடுகிறார்.”

நீதியின் மீது பசி, தாகமுள்ளவர்கள், நீதியில் பெருகும்நவாழ்க்கை வாழும்போது போதுமென்கின்ற திருப்தியடைந்த மனநிலையை வெளிப்படுத்துவார்கள் (இன்னும் குறைவான வாழ்வு வாழும் போதே). உங்களுக்கு நீதியின் மீது பசியும் தாகமும் உண்டா? இந்த புதிய பசி உங்கள் வாழ்க்கையில் எப்படி வெளிப்படுகிறது?

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

The Upside Down Kingdom: An 8 Day Study Through the Beatitudes

இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் (மத்தேயு 5:2–12), உலகிலிருந்து வேறுபட்டு, எதிர் கலாச்சாரத்தில், கிறிஸ்துவில் வேரூன்றிய ஒரு புதிய அடையாளத்துடன் வாழும்படி நம்மை வலியுறுத்துகிறார். தலைகீழ் இராஜ்ஜியம் எனும் இந்த வாசிப்புத்திட்டம் அத்தகைய எதிர் உள்ளுணர்வு ஞானத்தையும், இன்றைய நாட்களுக்கு அது பொருந்துமா என்றும் ஆராய்கிறது.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய க்ராஸ்வேக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.crossway.org/ ஐ பார்வையிடுங்கள்