தலைகீழ் இராஜ்ஜியம்: மலைப் பிரசங்கத்தில் 8 நாட்கள் வேதபாடத் திட்டம்மாதிரி

The Upside Down Kingdom: An 8 Day Study Through the Beatitudes

8 ல் 2 நாள்

இழப்பு லாபமாகும்போது

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள். மத்தேயு 5:4

முன்னுரை

தத்துவஞானியும் இறையியலாளருமான நிக்கோலஸ் வோல்டர்ஸ்டார்ஃப், தான் மிகவும் நேசித்தவரின் மரணத்தால் துக்கப்பட்டு, துன்பத்தின் உலகளாவிய நோக்கத்தை தனது புத்தகத்தில் விவரிக்கிறார், ஒரு மகனுக்கான புலம்பல்: “அனைவருக்கும் தன்னைத் தெரியப்படுத்தும்போது துன்பம் ஒவ்வொருவரிடமிருந்தும் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறது... துன்பத்தில் நாம் ஒன்றுதான். சிலர் செல்வந்தர்கள், சிலர் பிரகாசமானவர்கள்; சிலர் விளையாட்டு வீரர்களி தடகள, சிலர் பிரபலமானவர்கள். ஆனால் நாம் அனைவரும் துன்பப்படுகிறோம். ஏனெனில் நாம் அனைவரும் பரிசளிக்கிறோம், அன்பு கூறுகிறோம்; நம்முடைய இந்த தற்போதைய வாழ்வில், பரிசும் அன்பும் துன்பத்தையும் தருகின்றன.”

எங்கும் நிறைந்த துன்பம் நம் ஒவ்வொருவருக்கும் கற்பனைக்கு எட்டாத தேவ ஆறுதலுக்கான கதவைத் திறக்கிறது.

தியான ஆராய்ச்சி

நாம் இழப்பை சந்திக்கும் போது, ​​கசப்புடனோ, உணர்வு துண்டிக்கப்பட்ட ஸ்டோயிசம் நிலையிலோ, நம்பிக்கையுடனோ அதனை எதிர் கொள்ளலாம். நாம் விசுவாசத்தில் எதிர்கொள்வதைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​துக்கத்தின் செயல்முறையைத் தொடங்கி, தேவ ஆறுதலுக்காக நம்மைத் திறந்து கொடுக்கிறோம்.

உற்று நோக்கு

பல நூற்றாண்டுகளாக, துன்பத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாக உணர்ந்து தழுவிக்கொள்ள கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர்  ஊக்கப்படுத்தியுள்ளனர். “மெமொன்டோ மொரி,” என்றனர். மரணத்தை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் பரவலாக பார்க்கையில் அத்தகைய அங்கீகாரம் அரிதாக உள்ளது. "எங்களில் சிலர்....நித்தியத்தின் விளிம்பில் தினமும் வாழ்கிறோம்... அதன் விளைவாக நாம் இழக்கிறோம்" என்று கூறுகிறார் ஜே.ஐ. பாக்கர். ஒருவரின் இறப்பு குறித்த இந்த ஒப்புதலானது மனித அனுபவத்தை அர்த்தத்துடனும் அதன் அவசரத் தன்மையுடனும் வழங்கியது.

துரதிர்ஷ்டவசமாக, அடிக்கடி, நாம் இந்த யதார்த்தத்தை மறுக்க முற்படுகிறோம், மற்றவர்களிடமிருந்து நாம் ஒதுங்கி நிற்கிறோம், அதனால் அவர்களின் வலியை நாம் பார்க்க நேரிடாது, அவர்களாலும் நம் வலியை பார்க்க இயலாது. ஆனால் தனிமை, நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கிறது—மகிழ்ச்சியான எல்லாவற்றிலும் இருந்து நம்மை பிரிக்கிறது. நம் உணர்ச்சிகளை மறுத்து, நம் வலியைக் குறைக்க முயற்சிக்கலாம், ஆனால் உயிர்மூச்சு உள்ள வரை நம் இதயங்கள் துக்கத்தால் பாதிக்கப்படும்.

தப்பி ஓட முடியாது. இந்த உடைந்த உலகின் அபாயகரமான, முட்கள் நிறைந்த பாதைகளில் நாம் பயணிக்கும் வரை, நாம் துன்பப்பட்டு துக்கப்படுவோம். ஆனால் விரக்தியில் தப்பி ஓடுவதற்குப் பதிலாக, நம்மோடு அழுத, நமக்காக  கோரமான மரணத்தையும் சகித்த, நாம் நமது ஆத்துமாவில் நம்பிக்கையற்றுப்போன நமது இருளான நாட்களில் நமக்காகப் பரிந்து பேசின அவரை அணுகுவோம். நம்மால் இதனை சிறிதளவே புரிந்து கொள்ள இயலும், தேவன் இப்போதும் நமது துன்பத்தில் நம்முடன் துன்பப்படுகிறார். இந்த எண்ணம் துக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கட்டும்—நாம் உட்பட.

அப்பியாசப்படுத்துதல்

பெரும்பாலும், பேரழிவு பற்றிய பயம் நிறைந்த எண்ணம் மட்டுமே நம்மை ஆட்கொள்கிறது: நோய் பற்றிய பயம், நம் குழந்தைகளின் கவலை, தனிமை, நிதி துரதிர்ஷ்டம், முதுமை பற்றிய கவலை அல்லது விரும்பத்தகாத நினைவுகள். சுருக்கமாகச் சொன்னால், கிறிஸ்துவும் அவருடைய நித்திய நோக்கங்களும் நம் பார்வையில் இருந்து மங்கிப்போகும் அளவுக்கு நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு தொடர்ச்சியான பயத்தால் நாம் அவதிப்படுகிறோம்.

ஆனால் நாம் மட்டுமே அந்த துன்பத்தை அனுபவிப்பதில்லை. அந்த துன்பத்தினுள் கிறிஸ்துவும் நம்மோடு கைகோர்த்து  இருக்கிறார். உதவி செய்ய முற்படுமா மற்றோர்  தோல்வியடைகிறார்கள், அவர்களின் ஆறுதல்கள் தோற்று போகின்றன, ஆனால் தேவன் இருக்கிறார். இப்போதும் நம் இதயங்களில் இருக்கும் அவருடைய தெய்வீக பிரசன்னம், அண்ட சராசரத்தையும் விரைவில் நிரப்பும், இது ஒவ்வொரு கொடூரமான நிழலையும் என்றென்றும் அழிக்கும். அந்த நாளில், “நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டையின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்” (மல்கியா 4:2), சகலமும் புதிதாக்கப்படும். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை;” (வெளிப்படுத்தின விசேஷம் 21:4). ஆம், “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்” (மத்தேயு 5:4).

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

The Upside Down Kingdom: An 8 Day Study Through the Beatitudes

இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் (மத்தேயு 5:2–12), உலகிலிருந்து வேறுபட்டு, எதிர் கலாச்சாரத்தில், கிறிஸ்துவில் வேரூன்றிய ஒரு புதிய அடையாளத்துடன் வாழும்படி நம்மை வலியுறுத்துகிறார். தலைகீழ் இராஜ்ஜியம் எனும் இந்த வாசிப்புத்திட்டம் அத்தகைய எதிர் உள்ளுணர்வு ஞானத்தையும், இன்றைய நாட்களுக்கு அது பொருந்துமா என்றும் ஆராய்கிறது.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய க்ராஸ்வேக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.crossway.org/ ஐ பார்வையிடுங்கள்