தலைகீழ் இராஜ்ஜியம்: மலைப் பிரசங்கத்தில் 8 நாட்கள் வேதபாடத் திட்டம்மாதிரி

The Upside Down Kingdom: An 8 Day Study Through the Beatitudes

8 ல் 3 நாள்

பகைமை நிறைந்த உலகில் மென்மை

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள். மத்தேயு 5:5

முன்னுரை

1095ல், இஸ்லாமியர்களிடமிருந்து எருசலேமை மீட்பதற்கான முதல் சிலுவைப் போர் என்ற போருக்கு  போப் அர்பன் II அழைப்பு விடுத்தார், "தேவன் அதைச் செய்வார்" என்று டியூஸ் வால்ட்டின் முழக்கத்துடன் அழைப்பு விடுத்தார். அதே மனப்பான்மையுடன், பல வெற்றியாளர்கள் (போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் இருந்து) அமெரிக்கா வழியாக கிறிஸ்தவத்தை பரப்ப முயன்றனர்—இயேசுவின் பெயரில் நடந்த மற்றொரு மிருகத்தனத்தின்  கதை. முப்பது வருடப் போர் (1618 முதல் 1648 வரை) நினைவுக்கு வருகிறது, கத்தோலிக்கர்களும் புரட்டஸ்டன்ட்களும் போர்க்களத்தில் நேருக்கு நேராக வன்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி சண்டையிட்டு,  லட்சக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்தனர்.

இவை அனைத்தும் நம்மை கேள்விக்கு இழுத்துச் செல்கின்றன: கிறிஸ்தவ வாழ்க்கையில் அதிகாரத்தின் சரியான நிலை என்ன—தேவ ராஜ்ஜியம் இவ்வுலகில் முன்னரே" விண்ணிலிருந்து வரும் வல்லமை," (லூக்கா 24:49 TAERV) அதன் பங்கு என்ன?

தியான ஆராய்ச்சி

சாந்தத்தின் இதயத்துடிப்பு என்பது தேவனின் தன்னையே-தரும் அன்பாகும்,கிறிஸ்து தனது ஜீவனைக் கொடுத்த செயல் வலிமை வாய்ந்ததாகக் காணப்படுகிறது. ஆனால் சாந்தத்தை பலவீனத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. முரண்பாடாக, சாந்தம் என்பது மென்மையான வலிமை என வரையறுக்கப்படுகிறது, சாந்தம்—பரிசுத்த ஆவியானவரால் நிர்வகிக்கப்படுகிறது, அது பூமியை சுதந்தரிக்கும்.

உற்று நோக்கு

நமது மலைப் பிரசங்கம் சொல்கிறது, “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்.” (மத்தேயு 5:5). “ சுதந்தரிப்பார்கள்” என்னும் வினைச்சொல் உறுதியான உடைமையைக் குறிக்கிறது, தேவன் நமது கரங்களில் வைக்கும் பரிசு. ஆனால் இதன் அர்த்தம் என்ன—பூமியை சுதந்தரித்தல் என்றால் என்ன? சங்கீதம் 37 சாந்த குணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரிப்பதைப் பற்றி பேசுகிறது (இஸ்ரவேல் என்னும் பூமியை). ஆசீர்வதிக்கப்பட்ட சாந்தகுணமுள்ளோர் யாரெனில், தேவனை நம்புபவர்கள். அவர்கள் கோபப்படாமல் தங்களை அடக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்—தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை கையளிக்கிறார்.

ஆனால் நமது வசனம் “தேசம்” என்று சொல்லவில்லை. இயேசு சொல்கிறார், சாந்த குணமுள்ளவர்கள் “ பூமியை” சுதந்தரிப்பார்களென . தேவனின் ஆசீர்வாதம் உலகளாவியதாகிவிட்டது. இப்போது ராஜ்யம் ஒவ்வொரு ஜாதியினருக்கும், எம்மொழி பேசுபவருக்கும், எல்லா தேசத்தாருக்கும் சொந்தமானது. இறையியலாளர்கள் ராஜ்யத்தை "ஏற்கனவே தயாராகிவிட்டது ஆனால் இன்னும் இல்லை" என்று அழைக்கின்றனர். முழு சொத்து சுதந்திரம் எதிர்காலத்தில் வரும். ஆனால் ஆசீர்வாதங்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன, தேவனுடன் நெருங்கிய தொடர்பு ... தெளிவான மனசாட்சி ... அமைதி ... மற்றும் ஆவியின் கனிகள்.

அப்பியாசப்படுத்துதல்

கிறிஸ்துவின் ராஜ்யம் முழுவதும், கிறிஸ்துவின் தேவாலயத்தை சாந்தத்துடன் நடத்துவதற்கு— அதாவது, பரிசுத்த ஆவியினால் ஆளப்படும் சாந்தமான பலத்துடன் நடத்துவதற்கு, கிட்டத்தட்ட போதுமான நபர்கள் நம்மிடம் இல்லை. அதற்குப் பதிலாக, பலர்  மற்றவர்கள் வழிநடத்தட்டும், முடிவெடுக்கட்டும், ஊழியங்களை தொடர்ந்து செய்யட்டும் என அமர்ந்து வேடிக்கை பார்க்கின்றனர். தேவாலயம் நலிந்து போகிறது—பிசாசு அதைப் பார்த்து  கொக்கரித்து சிரிக்கிறான். அத்தகைய தருணங்களில், கிறிஸ்து யூத ராஜ சிங்கம் என்பதை மறந்து போகிறோம், அவர் வலிமையற்ற மதத்தின் மீதான கசையடி, அவர் தன்னைப் பின்பற்றுபவர்களை ஆவிக்குரிய யுத்தத்திற்கு அழைக்கிறார்.

சாந்த குணத்தின் அளவிட முடியாத வலிமையைக் காண, நாம் சாந்த குணத்தை பார்க்க கூடாது. மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பார்க்க வேண்டும், மரணபரியந்தம், சிலுவை மரணம் வரை தன்னை தாழ்த்தினவர் (பிலிப்பியர் 2). அத்தகைய தரிசனம் நமக்கு முன் இருப்பதால், ஆவியானவரால் ஆளப்படும் மென்மையான பலத்துடன் தேவாலயத்திலும் வீட்டிலும் சேவை செய்ய தூண்டப்படுவோம். பின்னர், பல சண்டைகளில் சிக்கியுள்ள உலகம் கிறிஸ்துவை கணம் பண்ணும் சாந்தம் ஏற்படுத்தும் வித்தியாசத்தைக் காணும்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Upside Down Kingdom: An 8 Day Study Through the Beatitudes

இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் (மத்தேயு 5:2–12), உலகிலிருந்து வேறுபட்டு, எதிர் கலாச்சாரத்தில், கிறிஸ்துவில் வேரூன்றிய ஒரு புதிய அடையாளத்துடன் வாழும்படி நம்மை வலியுறுத்துகிறார். தலைகீழ் இராஜ்ஜியம் எனும் இந்த வாசிப்புத்திட்டம் அத்தகைய எதிர் உள்ளுணர்வு ஞானத்தையும், இன்றைய நாட்களுக்கு அது பொருந்துமா என்றும் ஆராய்கிறது.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய க்ராஸ்வேக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.crossway.org/ ஐ பார்வையிடுங்கள்