இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இந்த உலகத்தில் நாம் வாழும்போது நாம் இந்த உலகத்தின்,குறிப்பாக நாம் பிறந்த நாட்டில் குடிமக்களாக இருக்கிறோம். நாம் இயேசுவை நம் வாழ்வில் ஏற்றுக் கொண்டபின்னர்,நாம் கடவுளின் குடும்பத்தில் தத்து எடுக்கப்படுகிறோம். பின்னர் பரலோகத்தின் குடிமக்களாக மாறுகிறோம். அதற்காக நம் உலக பொறுப்புகளிலும் கடமைகளிலும் இருந்து நாம் விடுவிக்கப்பட்டதாக பொருள் இல்லை. நமக்கு இரு குடியுரிமைகள் இருக்கின்றன என்பதுவே இதன் பொருளாகும். அதாவது,இந்த உலகத்தில் நாம் நடந்து செல்லும்போது,நம் வேலைகளைச் செய்யும்போது,நம் குடும்பங்களை நடத்தும்போது,மற்றவர்களுடன் உறவாடும்போது நம்மிடம் எதிர்பார்க்கப்படும் பணிகளைச் செய்ய வேண்டும். நமது வேலையோ நமது தெய்வீக அழைப்போ அனைத்தையும் நாம் உச்சமான அர்ப்பணிப்புடன் கடவுளுக்கு செய்வது போலச் செய்ய வேண்டும். அவரைப் பிரியப்படுத்துவதாக,பார்த்துக் கொண்டிருக்கும் உலகத்துக்கு அவரது அன்பைக் காட்டுபவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்தமும் உலகப்பிரகாரமும் என்பதற்கு இடையிலான பிளவானது நாம் இரட்டை குடியுரிமை உள்ளவர்களாக வாழும்போது இல்லாமலேயே போய்விடுகிறது.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
நான் வசிக்கின்ற நாட்டிற்கு உண்மையுள்ள குடிமகனாக வாழ்கிறேனா?
பரலோகத்தின் குடிமகனாக/ குடிமகளாக இந்த உலகத்தில் பொறுப்புடன் வாழ்கிறேனா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருடைய கணக்கு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

மேடைகள் vs தூண்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

வனாந்தர அதிசயம்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
