தேவனோடு உரையாடல்மாதிரி

அநேக வேளைகளில் தேவன் குடும்பம், நண்பர்கள், பாஸ்டர், நாம் சந்தித்திராத எழுத்தாளர்கள் மூலமாக பேசுகிறார். தாவீதுக்கு நாத்தான் மூலமாக, எஸ்தருக்கு மாமா மொர்தெகாய் மூலமாக, தீமோத்தேயுவுக்கு பவுலின் மூலமாக வந்ததுபோல தேவனுடைய வார்த்தை நம்மை மற்றவர்களின் தைரியம் மற்றும் முன்மாதிரியூட்டும் வார்த்தையின் மூலம் சந்திக்கக்கூடும்.
என்னை வழிநடத்தினவர்கள் பாதத்தில் அமர்ந்து நான் கற்று கொண்ட சாத்தியங்களை வைத்து அநேக பக்கங்கள் என்னால் பேசமுடியும்; என்னுடைய நாட்குறிப்புகள் இந்த ஞானமான வார்த்தைகளால் தான் நிரம்பியிருக்கின்றன, ஆனால் நான் ஒன்றைக்குறித்து பேச விரும்புகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன், அதிக நடைமுறைக்கு ஒத்த கருத்துக்களை கொண்ட ஒரு வழிநடத்தும் நண்பரை சந்திக்க எனக்கு தருணம் கிடைத்தது. அவர்களிடம் நான் தலைமைத்துவத்தை எடுத்தாலும், எடுத்தபின் அதிலிருந்து பின்வாங்கவே விரும்பும் சுபாவத்தைக் குறித்து கேட்டபோது, அவர்கள் எது நம்பிக்கையான விசுவாசத்தில் துவங்குகிறதோ, அது சுய சந்தேகத்திற்கு வழிவகுக்க கூடும் என்று புரிய வைத்தார்கள். ஆவியானது உற்சாகமாக துள்ளிக்குதித்தாலும், ஆத்துமா, "நீ என்ன செய்திருக்கிறாய்? என்று சந்தேகத்தை கிளப்பும். ஏன் இந்த ஆபத்தான காரியத்தை செய்தாய்? தயவுசெய்து இதை விட்டுவிட்டு திரும்பு போ!" என்று சொல்லும்.
இதை காட்சிப்படுத்த, அவர்கள் ஒரு நாற்காலியை இழுத்து அறையின் நடுவில் வைத்து அதின்மீது ஏறி நின்று புதிய தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதை நடித்து காட்டினார்கள். தேவன் என்னை "எழும்பி நில்" என்று தைரிய படுத்தும்போது, நானும் என் கச்சையை கட்டிக்கொண்டு தைரியமாக துணிவாக விசுவாசத்தில் நின்று என் புதிய நிலையில் இருந்து உலகத்தை நோக்கவேண்டும் என்று சொன்னார்கள். பிறகு, தேவன் என்னை நடத்தினால், என் ஆத்துமா திடீரென திரும்பி ஓட இடம் தராமல், என் ஆவியோடு சேர்ந்து விசுவாசத்தில் நிற்க செய்யவேண்டும் என்று சொன்னார்கள்.
நான் இன்னமும் இந்த அறிவுரையில் நடக்கிறேன். சில வேளைகளில் நான் தனியாக எனக்கு தலைமைத்துவத்தில் சவாலளிக்க கூடிய அறைக்குள் சென்று ஒரு நாற்காலியை நடுவில் இழுத்து போட்டு அதன்மேல் நின்றிருக்கிறேன். அந்த நிலையிலிருந்து, அந்த அறையை பார்த்து தேவன் என்னை அழைத்த அதிகார நிலையை உணர்ந்து தியானிப்பேன். அதன் மீது நின்ற படி மற்றவர்களுக்காகவம் எனக்காகவும் ஜெபிப்பேன். சத்தமாக, என் ஆத்துமாவிடம் இந்த புதிய நிலையில் சமாதானத்தோடு நிற்கும்படி கட்டளையிடுவேன். நான் சொல்லுவேன் ஆம் தேவனிடம் இல்லை என் சந்தேகங்களிடம். அந்த அறிவுரை என் ஜீவியத்திற்கு நிலையான ஞானமாக மாறியுள்ளது, எனக்கு நம்பிக்கையான வழிநடத்த தேவனுடைய சத்தம்.
இந்த திட்டத்தைப் பற்றி

'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

சிலுவையும் கிரீடமும்

தீர்க்கமான பிராத்தனைகள்

தேடல்

ஆவிக்குரிய யுத்தத்திற்கான திட்டம்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
