தேவனோடு உரையாடல்மாதிரி

நான் என் கணவன் குடும்பத்தில் வருவதற்கு அநேக ஆண்டுகள் முன்னமே என் கணவனின் பாட்டி எம்மா பால்டு எக்காப் மரித்துப்போனார்கள். அவர்களுடைய மறக்கமுடியாத குணம் அவர்கள் அர்த்தமுள்ள ஜெபங்கள் தான். ஒரு நண்பர் சொன்னார் "எம்மா-வின் ஜெபங்கள் பரத்தையே தொட்டுவிடும்" என்று. ஆகவே ஒரு நாள் பழைய பெட்டிகளை சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது எம்மா-வின் தினக்குறிப்புப்புத்தகம் கிடைத்தபோது என்னுடைய உற்சாகத்தை உங்களால் புரிந்துகொள்ளமுடியும்! அந்த சிறிய புத்தகத்தை திறந்தபோது, நான் எதிர்பார்ப்போடு வாசிக்க துவங்கினேன். 1942-ஆம் ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பு இருந்தது. அந்த கடைசி வார்த்தை வரைக்கும் நான் வாசித்தேன், வாசித்து வைத்துவிட்டேன். சோகம் என்னவென்றால், அதில் ஒன்றும் சொல்லத்தகும் அளவு இல்லை.
மார்ச் 3: “துணியை இஸ்திரி போட்டு சாக்ஸ் அணிந்து கொண்டேன்.”
மார்ச் 8: “எல்லோரும் ஆலயத்திற்கு சென்றார்கள். டக்ளஸ் இரவு உணவுக்கு வந்தார். அதிக காற்றாய் இருக்கிறது.”
மார்ச் 9: “மேல் அறையை சுத்தம் செய்தேன். அழகான நாள். கடிதங்கள் எழுதினேன்.”
புரிந்துகொள்ள முடியவில்லை அல்லவா? ஆம், ஏனென்றால் இதெல்லாம் பழைய விவசாய குடும்ப நிகழ்வுகள் தான். அந்த சுவாரசியம் தரும் எந்த நிகழ்வும் இதில் குறிப்பிடப்படவில்லை. ஒரு நாள் மாத்திரம் "இன்று டிக்-இன் பிறந்த நாள். அவனை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்று எழுதியிருந்தது.
என்னோடு யோசித்து சொல்லுங்கள். எம்மா-வின் வருட நோக்கம், அல்லது ஜீவனின் கோட்பாடு ஏதாவது எழுதி வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும். ஏன் இயேசுவை நேசிக்கிறேன்? என்று சொல்லி இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஒரு ஒரே ஒரு ஜெபத்தை மாத்திரம் எழுதி வைத்திருந்தாள் எப்படி இருந்திருக்கும்?
எம்மா-வின் சிறிய புத்தகம் என் முன்னாள் இருக்கிறது - நான் யோசிக்கிறேன்: அவர்களுடைய தேவனோடு கொண்ட உறவை நான் அறிந்து கொள்ள எவ்வளவு ஆர்வமாக இருக்கிறேன் என்று அறிந்திருந்தால் அவர்கள் வித்தியாசமாக எழுதியிருப்பார்களா? அவர்களின் ஜெப அனுபவம் ஒரு ஜெப புத்தகமாக பதிவிட வேண்டும் என்று உணர்ந்திருப்பார்களா? நிச்சயம் நினைத்திருப்பார்கள்.
எழுவது ஆண்டுகள் பிறகு நம்முடைய மங்கின நினைவுகள் திறக்கப்படும்போது, நாம் சந்திக்காத நம்முடைய சந்ததிக்கு என்ன காரியம் தோன்றும்? நம்முடைய குடும்பத்தை பற்றி ஏதாகிலும் நாம் சொல்ல விரும்புவோமா? விசுவாசத்தை குறித்து? நமக்கு பின்னால் வருபவர்களுக்கு சொல்ல நம்முடைய இருதயத்தில் ஏதாகிலும் ஜெபம் இருக்கிறதா?
தேவனோடு நம்முடைய தனிப்பட்ட உரையாடல்கள் விலைமதிப்புள்ளவைகள் - அதிக விலைமதிப்புள்ளவைகள், நாம் சந்திக்காத சந்ததிகளுக்கு அவர்களை தொட வல்லமையான சக்தி கொண்டது.
இந்த திட்டத்தைப் பற்றி

'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

சிலுவையும் கிரீடமும்

தீர்க்கமான பிராத்தனைகள்

தேடல்

ஆவிக்குரிய யுத்தத்திற்கான திட்டம்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
