சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

சோர்வுற்ற நமது ஆத்துமா [உள்மனம்] அவரது கரத்தினால் புதுமையாக்கப்படுவதையே “தேற்றி” என தாவீது கூறுகின்றார். இது ஒருமுறை நிகழும் சம்பவமல்ல. மாறாக, தொடர்ச்சியாக நடைபெறும் பயணம். இயேசு- நமது கடந்த காலத்தின் உடைந்த பகுதிகளை எடுத்து புதுப்பிக்கிறார்.
அது ஒட்டப்பட்டு கீறல்கள், வடுக்களுடன் புதுப்பிக்கப்பட்டது அல்ல, மாறாக, நாம்-அவருக்கு புதுப்பிக்க இடமளித்தால் - மறுரூபம் ஆக்கப்பட்டதாக–– மறுரூபம் பெறும்.
இந்த “உள்ளிருந்து வெளியே” புதுப்பிக்கப்படும் அனுபவத்தை நான் பெற அனுதினமும் நம் சுயத்தை அவரிடம் சரணடைய செய்வதனால் தான் ஆகும். சுயம்- கிறிஸ்தவன் ஆகமுடியாது; கிறிஸ்து+அவன் என்பதால் மட்டுமே கிறிஸ்தவன் ஆக முடியும்.
உடன் தாவீது தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் என்கிறார் இதன் அர்த்தம்.....இந்த நீதியின் பாதை சுலபமானது அல்ல. மாம்சம் விரும்புவதை செய்வதும் சுயத்தை பெருமைபடுத்துவதும்-இந்த பாதை அல்ல. நமக்கு - இது ஒரு பயணம். இதில் பயணிக்கும் போது நம்முடைய வார்த்தைகள் அல்ல; நமது நடத்தை [CONDUCT] அதிகம் பேசும்.
- இது எரேமியா 18:4 கூறும் -குயவன்-கை களிமண்வாழ்க்கை –குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான். இதுவே நீதியின் பாதையின் பயணம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கர்த்தர் என் மேய்ப்பராய் ... என்று நான் ஆரம்பிக்கும் போதே இந்த வாக்கியத்தை - உங்கள் உதடு முழுவதும் சொல்லி முடித்திருக்கும் என்பதை நான் அறிவேன். தாவீது சொன்ன இந்த வாக்கியத்திற்குள் ஓர் இரகசியம் இருக்கின்றது; அந்த இரகசியம் -உங்கள் வாழ்க்கையை மறுரூபம் [TRANSFORM] ஆக்கும் என்று நான் சொன்னால் – ”இனிமேல் என்மனசுக்கு கஷ்டமா இருந்தா - சங்கீதம்23 ஐ எடுத்து வாசிப்பேன்”, என்று இல்லாமல் - எப்படி வாழ்க்கையை இனி நடத்துவீர்கள் என்பதை மாற்றி அமைக்கும் ஒரு வெளிப்படுத்தலை -இந்த சங்கீதம் நமக்கு தரும். இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கின்ற ”கோலியாத்” தான் என்ன? <இந்த சவாலை நான் எப்படி சந்திப்பேன்? சமாதானத்தைத் தேடி அலைபவரா நீங்கள்? இதில் எனக்கு யார் ஐயா வழிகாட்டி [guide], வழிநடத்துவார்கள் [lead] என்ற கேள்வியா?> இந்த சங்கீதத்தின் வார்த்தைகளில் இருக்கும் ”வாழ்க்கையை புரட்டி போடும் சத்தியங்களை” நாம் இந்த வேதாகம திட்டத்தின் -மூலம் உள்வாங்கிக் கொள்ளலாம் - வாருங்கள்!
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவர் சர்வவல்லவர்
