வாழ்க்கையின் புயல்களில் தேவனின் சத்தியத்தை கண்டுபிடித்தல்மாதிரி

சமாதானம், உதவி, நாளைய நம்பிக்கை
நீங்கள் இந்த ஆய்வின் கடைசி நாளை அடைந்துள்ளீர்கள்! இன்றைய தியானம் , கஷ்டமான காலத்தை எதிர்கொள்ளும் போது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமான ஒரு விஷயமான நம்பிக்கையைப் பற்றியது.
நீங்கள் எதைக் கடந்து செல்கிறீர்களோ, அதனைத் தேவன் அறிவார். அவர் தம்முடைய மக்களை நேசிப்பது ஒருபோதும் தோல்வியடையாது. இப்போதும் அவர் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதும் உங்களைத் தம் கையில் வைத்திருக்கிறார்.
ஏதோ நடக்கின்றதோ அல்லது உங்கள் கதையில் எவ்வாறு திருப்பம் வந்தாலும், நீங்கள் ஒருபோதும் தேவனுடைய திட்டத்திற்கு வெளியே இல்லை என்பதை உறுதியாக நம்பலாம்.
உங்கள் இரட்சகர் ஒருபோதும் உங்களைத் தனியாக விட்டு விடமாட்டார் என்ற நம்பிக்கையுடன் ஓய்வெடுக்கலாம்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:3-5 என்பது கிறிஸ்துவால் நமக்கு உள்ள அபாரமான நம்பிக்கையின் நினைவூட்டலாகும். தேவன் நமக்கு வாக்குத்தந்துள்ளார், துயரமோ வலியோ இல்லாத பரலோகத்தில் நமக்கு ஒரு இடம் இருக்கிறது. அவர் நம்முடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார். இப்போதும் அவர் நமக்கு அங்கே ஒரு இடம் தயாரித்து வருகிறார். அவர் அனைத்தையும் புதியதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்!
எந்த நிலையிலும் இருக்கிறீர்கள் என்றாலும், ஒருகணம் செலவழித்து, ஒருபோதும் உங்களை விட்டு விலகாத இரட்சகரைப் பற்றிய நம்பிக்கையில் நிலைத்திருங்கள். அவர் எல்லாவற்றையும் நன்மைக்காகவே செய்யக் கூடியவர் என்பதை நினைவில் கொண்டு ஆறுதல் அடையுங்கள். இந்த வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், எதிர்காலத்தில் காத்திருக்கும் மகிழ்ச்சியுடன் ஒப்பிடக்கூடியதல்ல என்பதற்குப் பெரும் நம்பிக்கையுடன் இருங்கள்.
உங்களுடைய போராட்டம் தேவனுக்கு மிகப்பெரிதாக இல்லை. நீங்கள் எவ்வளவு நம்பிக்கையற்றதாக உணர்ந்தாலும், உங்கள் நம்பிக்கையை விட அதிகமான நம்பிக்கை இருக்கிறது. அந்த உண்மையை இன்றே வாழ விரும்புங்கள்.
ஜெபம்: தேவனே, நீங்கள் எல்லாவற்றையும் நன்மைக்காக செயல்படுத்துகிறீர்கள் என்பதற்கான அறிவுக்காக நன்றி. இந்த வாழ்க்கையின் துன்பங்கள் என்னை சோர்வடையச் செய்தாலும், அவைகள் என்னை வரையறுக்கவில்லை என்பதற்காக நன்றி. நான் என்னுடைய அடையாளத்தை உங்களில் கண்டடைய முடியும் என்பதற்காகவும், வரும் வெற்றியில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதற்காக நன்றி. உங்களுடன் உண்டாகிய நித்திய வாழ்க்கையின் பரிசுக்காக நன்றி. உமது பிள்ளையாகிய எனக்கு ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ உதவி செய்க. ஆமென்.
இந்த தியானம் "ஏன்? வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ளும் பதில்கள்" எனும் புத்தகத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டது. நீங்கள் கஷ்டங்களை எதிர்கொள்ள மேலும் வேதச் சாந்த்வனையைத் தேடுகிறீர்களா? புத்தகத்தை நீங்கள் பெறலாம் இங்கே.
இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகின் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க படுவதில்லை. உண்மையில், பிரச்சனைகள் வரும் என்று யோவான் 16:33 உறுதியளிக்கிறது. நீங்கள் இப்போது வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கானது. வாழ்க்கையின் புயல்களினுடாய் நமக்கு கிடைக்கும் நம்பிக்கையின் நினைவூட்டல் இது. இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளில் உங்களுக்கு உதவும் அடித்தளத்தை அது உங்களுக்கு வழங்கும்.
More