வாழ்க்கையின் புயல்களில் தேவனின் சத்தியத்தை கண்டுபிடித்தல்மாதிரி

Finding God's Truth In The Storms Of Life

10 ல் 6 நாள்

நம் சோதனைகளை கடந்து பார்ப்பது

நாம் புயல்களைக் கடக்கும்போது, நமது உலகம் நம்மைச் சுற்றி மையமாக மாறத் தொடங்குகிறது. நாம் விரைவாக நம்முடைய சொந்த பிரச்சினைகளில் மிகவும் கவனம் செலுத்துவோம். சில சமயங்களில், அது வாழ்வதற்கான ஒரு நுண்ணறிவு முறையாக இருக்கலாம்—நம்முடைய பிரச்சினையை கடக்க, நாம் நம்மை கவனித்து கொள்வதற்கு கவனம் செலுத்த வேண்டும். ஆனால் மற்ற சமயங்களில், உள்ளே நோக்கி பார்க்கும் அந்த உணர்வு நம்மைத் துன்புறுத்துகிறது.

எந்தவொரு நபரும் நமக்காக கவனித்துக்கொள்ளமாட்டார் என்பதால், நம் உள்ளுணர்வு நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நமது பலவீனமான தருணங்களில், அந்த பொய்யை நம்புவது எளிதாகிறது. ஆனால் ஏசாயா 58:10-11 ஒரு மாறுபட்ட சித்திரத்தை சித்தரிக்கிறது. பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும். பட்டினியால் வாடுவோரை, ஒடுக்கப்பட்டவர்களை நாம் நேசித்து உதவிக்கரம் நீட்டுவோம் என்றால், தேவன் நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவார் என்று இது கூறுகிறது. மேலும், நமது சொந்த வாழ்க்கையைத் தாண்டி பிறரை ஆசீர்வதிப்பதன் அழகையும் அது நமக்கு காட்டுகிறது.

இந்த அழகிய வசனம் பிறரை நேசிப்பது ஒரு பரிசு என்பதை நமக்கு காட்டுகிறது! மேலும், அது நாம் துன்பம் அனுபவிக்கும் போது நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பரிசாகும்.

பிறர் துன்பப்படும்போது, அவர்களுக்கு எங்கள் அன்பு மிகவும் தேவைப்படுகிறது. மேலும், நாங்கள் நம்முடைய சொந்த சோதனைகளை அனுபவிக்கும் போது, பிறர் எதிர்கொள்ளும் துன்பங்களை நாங்கள் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் சோதனைகள் நமக்கு ஒன்றும் அல்லாவிட்டாலும் கூட, அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை நாங்கள் குறைந்தபட்சம் சிறு வகையிலாவது புரிந்து கொள்ள முடியும்.

புரிதல் பிறரை நன்றாக நேசிக்க உதவுகிறது! எப்போதும் நம்மைப் பார்க்காமல், பிறரை ஆசீர்வதிக்க வாய்ப்புகளை நம்மைச் சுற்றி நாங்கள் நோக்க முடிகிறது.

நாம் நம்முடைய கண்களை தேவனின் மீது வைத்துக் கொண்டு, நம்முடைய தேவைகளை விட பிறர் தேவைகளில் கவனம் செலுத்தினால், நாங்கள் ஒரு புதிய பார்வையைப் பெறுகிறோம். நமது சொந்த பிரச்சினைகளின் துன்பத்தையும் பலவீனத்தையும், பிறரை உதவுவதன் மகிழ்ச்சியும் வெற்றிகளும் பரிமாறிக்கொள்வோம். மேலும், இந்த செயல்முறையில் தேவனுக்கு நெருக்கமாக வருவோம்.

ஜெபம்: பிரியமான தேவனே, என் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு உதவி தேவைப்படும் அவசரநிலைகளை தெளிவாகப் பார்க்க என்னைச் செயல்படுத்துங்கள். நான் எதிர்நோக்கும் சோதனைகளில் பிறரை உதவுவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று எனக்குக் காட்டுங்கள். என்னுடைய வாழ்க்கை கடினமாக இருந்தாலும் கூட, பிறருக்கு உதவுவதின் ஆசீர்வாதத்தை அனுபவிக்க நீங்கள் எனக்குத் தந்த நன்றி. ஆமென்.

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Finding God's Truth In The Storms Of Life

கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகின் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க படுவதில்லை. உண்மையில், பிரச்சனைகள் வரும் என்று யோவான் 16:33 உறுதியளிக்கிறது. நீங்கள் இப்போது வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கானது. வாழ்க்கையின் புயல்களினுடாய் நமக்கு கிடைக்கும் நம்பிக்கையின் நினைவூட்டல் இது. இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளில் உங்களுக்கு உதவும் அடித்தளத்தை அது உங்களுக்கு வழங்கும்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக எலிசபெத் கிரேஸ் சாண்டர்ஸ்க்கு நன்றி செலுத்திக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு: https://www.worldhelp.net