வாழ்க்கையின் புயல்களில் தேவனின் சத்தியத்தை கண்டுபிடித்தல்மாதிரி

Finding God's Truth In The Storms Of Life

10 ல் 2 நாள்

உணர்வுகளின் போராட்டம்

உங்கள் ஆவி நொறுக்கப்பட்டதாக எப்போதாவது உணர்ந்ததுண்டா? சில சமயங்களில் எல்லாம் நன்றாகவே நடக்கிறது, ஆனால் ஒரு சூழ்நிலை கட்டுப்பாட்டை இழந்துவிட்டால், உங்கள் வாழ்க்கையை திருத்த முயற்சிப்பதில் பயனில்லை எனக்கூட நினைக்கலாம். துக்கம், கோபம், நம்பிக்கையின்மை, பயம் போன்றவை மிகவும் உண்மையான உணர்வுகளாகும், மேலும் கடினமான நேரங்களில் மிக வலுவான கிறிஸ்தவர்கள் கூட அவற்றை சந்திக்கிறார்கள். தாவீதின் கதையையும் மற்ற பல விசுவாசப் பண்பாளர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்.

பல்வேறு நேரங்களில் இப்படியான உணர்வுகளை ஒப்புக்கொள்வதில் நாம் பயப்படக்கூட செய்யலாம். ஆனால் நாம் கடந்து செல்கின்ற சோதனைகளின் போது நமது அனைத்து உணர்வுகளையும், குறிப்பாக எதிர்மறையானவற்றை சமாளிப்பது முக்கியம். நமது கோபத்தையும் துக்கத்தையும் தேவனின் சத்தியத்தின் வெளிச்சத்தில் நாம் பார்க்கும்போது, தலைவணங்கி வாழாமல் ஆறுதல் பெற முடியும்.

நாம் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது, நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். (சங்கீதம் 34:18). நாம் கோபம் கொண்டிருக்கும் போது, நமது கோபத்தால் கூட தேவனின் நிலைத்த அன்பு குலையாது என்ற வாக்குறுதியினால் அமைதி காணலாம் (ஏசாயா 54:10). நம்பிக்கையின்மை நம்மை ஆட்கொள்ளும் போது, நம்முடைய கவலைகளை தேவனிடம் ஒப்படைக்கலாம், ஏனெனில் அவர் நம்மை ஒருபோதும் தள்ளாடவொட்டார் (சங்கீதம் 55:22). பயத்திற்கு அடிபணியத் தயாராக இருக்கும் போது, தேவன் நமக்கு ஆதரவாக இருக்கிறார், அவர் நம்மை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டார் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் இருக்கலாம் (சங்கீதம் 18:2).

நாம் வேதாகமத்தில் தேவன் தரும் ஏராளமான வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறோம், ஆனால் அவர் மீண்டும் மீண்டும் வழங்கும் வாக்குறுதி ஆறுதல் என்பதே. நமது உணர்வுகளுடன் நடைபெறும் போராட்டத்தை அவர் புரிந்துகொள்கிறார், மேலும் அவர் நமக்கு இரக்கம் காட்டுகிறார்.

நமது உணர்வுகள் நம்மால் சமாளிக்க முடியாத அளவுக்கு மாறினால், நம்முடைய பாரங்களை அவரிடம் ஒப்படைத்து, நம்பிக்கையுடன் அவர்மேல் சாய வேண்டும் என்பதே தேவனின் விருப்பம்.

நமது ஆவி நொறுக்கப்பட்டிருக்கும் போது, தேவன் இன்னும் நமக்குப் போதுமானவர் என நமக்கு உறுதிப்படுத்துகிறார்.

அடுத்த முறை உங்கள் உணர்வுகளை மறுக்க அல்லது அவற்றைக் கவனிக்க முயற்சிக்கும்போது, அவற்றை தேவனிடம் ஒப்படையுங்கள். உங்களை எதிர்கொள்ளும் எந்த உணர்வுப் போராட்டத்திற்கும் மிஞ்சிய நம்பிக்கையை அவர் உங்களுக்கு தருவார்.

ஜெபம்: பிரியமான தேவனே, வேதாகமத்தில் உமது அன்பின் மீதான உறுதிப்பாடுகளுக்கு நன்றி. நான் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினைக்கும் நீர் எப்போதும் வலிமையானவர் என்பதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய உணர்வுப் போராட்டங்களை உமக்குச் சமர்ப்பிக்க உதவும். எனக்கு மிகவும் தேவைப்படும் பொழுது நீர் தந்த ஆறுதலுக்கு நன்றி. ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

Finding God's Truth In The Storms Of Life

கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகின் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க படுவதில்லை. உண்மையில், பிரச்சனைகள் வரும் என்று யோவான் 16:33 உறுதியளிக்கிறது. நீங்கள் இப்போது வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கானது. வாழ்க்கையின் புயல்களினுடாய் நமக்கு கிடைக்கும் நம்பிக்கையின் நினைவூட்டல் இது. இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளில் உங்களுக்கு உதவும் அடித்தளத்தை அது உங்களுக்கு வழங்கும்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக எலிசபெத் கிரேஸ் சாண்டர்ஸ்க்கு நன்றி செலுத்திக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு: https://www.worldhelp.net

சம்பந்தப்பட்ட திட்டங்கள்