வாழ்க்கையின் புயல்களில் தேவனின் சத்தியத்தை கண்டுபிடித்தல்மாதிரி

Finding God's Truth In The Storms Of Life

10 ல் 9 நாள்

இழப்பின் வெற்றி

ஒரு எழுத்தாளர் ஒரு புதினத்தை எழுதுவதற்கு அமரும்போது, அவர் ஏற்கனவே புத்தகம் எவ்வாறு முடிகிறது என்பதை அறிவார். முக்கியமான கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களையும், அவற்றை எவ்வாறு தீர்ப்பார்கள் என்பதையும் அவர் அறிவார்.

இதேபோலவே தேவனும். அவர் உங்கள் கதையை எழுதுகிறார், மேலும் அவர் ஏற்கனவே முடிவை அறிவார். சில நேரங்களில், நாமே "என்ன நடக்கப் போகிறது?" எனக் கத்த நினைப்போம். இறுதி பக்கத்தைத் தவறுதலாகப் பார்க்க நாம் ஆசைப்படுகிறோம். முழுக் கதையைப் புரிந்துகொள்ளாமல், நமது சிக்கல்களுக்கு தேவன் வைத்திருக்கும் நோக்கம்தான் அனைத்து துக்கத்தையும் சமாளிக்க வேண்டியதா என்று நம்புவதில் நாம் தடுமாறுகிறோம்.

யோபு, தன்னுடைய துன்பங்களுக்கு தேவனின் நோக்கம் என்ன என்பது குறித்து மிகவும் குழப்பத்துடன் இருந்தவராக இருக்கலாம். அவர் தனது ஏமாற்றத்தில் தேவனை நோக்கி அலறுகிறார், மேலும் பலமுறை மனவருத்தத்தின் எல்லையில் சென்றடைகிறார். ஆனால் தேவன் யோபுவுக்கு, தமது நோக்கங்களும் திட்டங்களும் எப்போதும் நிறைவேறும் என்பதை நினைவூட்டுகிறார். தேவன் யோபுவுக்கு அவன் துன்பத்தின் நோக்கத்தை எந்த நேரத்தில் சொல்லவில்லை, ஆனால் தேவன் இன்னும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக வாக்குறுதியளிக்கிறார்.

நம்முடைய துன்பங்கள் தேவனின் திட்டத்தில் எவ்வாறு சேர்க்கப்படுகின்றன என்பதை நாம் பெரிய அளவில் அறிய முடியாது. ஆனால் நாம் கடக்க வேண்டிய எல்லாவற்றுக்கும் தேவனிடம் எப்போதும் ஒரு நோக்கம் உண்டு என்ற அறிவால் நமக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும்.

தேவனின் திட்டம் ஒருபோதும் தோல்வியடையாது என்பதை அறிந்தால், நாம் தேவனின் திட்டத்திற்காக அமைதியாக காத்திருக்க முடியும். நமது துன்பம், தேவன் உலகின் மீதான அன்பின் பெரிய கதையின் ஒரு சிறிய பகுதியாகும்.

ஜெபம்: பிரியமான தேவனே, என் துன்பத்தில் ஒரு நோக்கம் இல்லாததைப் போலவே எனக்குப் பட்டால், நம்பிக்கை காத்து கொள்வது கடினம். எனக்கு பொறுமையைத் தந்து, நீர் எப்போதும் கட்டுப்பாட்டில் இருப்பதை நம்பச் செய்யும். உமது சரியான திட்டத்திற்கு நன்றி. ஆமென்.

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

Finding God's Truth In The Storms Of Life

கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகின் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க படுவதில்லை. உண்மையில், பிரச்சனைகள் வரும் என்று யோவான் 16:33 உறுதியளிக்கிறது. நீங்கள் இப்போது வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கானது. வாழ்க்கையின் புயல்களினுடாய் நமக்கு கிடைக்கும் நம்பிக்கையின் நினைவூட்டல் இது. இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளில் உங்களுக்கு உதவும் அடித்தளத்தை அது உங்களுக்கு வழங்கும்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக எலிசபெத் கிரேஸ் சாண்டர்ஸ்க்கு நன்றி செலுத்திக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு: https://www.worldhelp.net