வாழ்க்கையின் புயல்களில் தேவனின் சத்தியத்தை கண்டுபிடித்தல்மாதிரி

Finding God's Truth In The Storms Of Life

10 ல் 8 நாள்

மனதுருகும் வரம்

யாருக்காவது அதிருப்தியாக இருக்க வேண்டிய உரிமை இருந்தால், அது ஹெலன் கேலர்தான். அவர் குருடும் செவிடும் ஆவார், மேலும் அவரது உடல்திறனின்மை அவரை உலகத்தை பலரும் அனுபவிப்பதைப் போல அனுபவிக்க முடியாமல் செய்தது. அவரைச் சுற்றியிருந்த அனைவருக்கும் அவரால் பெற முடியாத திறன்கள் இருந்தன. ஆனால், அவரிடம் இருந்தது மன உறுதியும், அதைவிட மதிப்புமிக்கது - கருணை.

"நீங்கள் மிகவும் துக்கத்தில் இருக்கும்போது, இந்த உலகத்தில் உங்களுக்கு செய்ய ஏதாவது இருக்கிறது என்பதை நம்புங்கள்," என்று அவர் சொன்னார். "நீங்கள் இன்னொருவரின் துக்கத்தை இனிமையாக்க முடிந்தவரை, வாழ்க்கை விரயமாகாது."

வயதானபோது, ஹெலன் தன்னுடைய பல நேரங்களையும் போரில் குருடோ அல்லது செவிடோ ஆன வீரர்களுக்கான மருத்துவமனைகளுக்கு சென்று அவர்கள் காயங்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்க்கையை ஆர்வமாய் வாழ முடியும் என்பதற்கான நம்பிக்கையைத் தந்தார். மேலும், அவர்கள் எதிர்காலத்தைச் சரியாக பார்க்க ஊக்கமளித்தார். அவரது உடல்திறனின்மை இந்த மக்களுக்கு அற்புதமான சவால்களைச் சந்திக்க உதவுவதற்கான வாய்ப்பினை தந்தது.

அதை ஹெலனின் பார்வையில் இருந்து சிந்தியுங்கள். அவர் எளிதில், "நான் குருடும் செவிடும், ஆனால் இந்த மனிதர்கள் வெறும் குருடாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் இருப்பதை விட எனக்கு பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன" என்று சொல்லியிருக்கலாம். அவர் கடிந்து கொள்ளவும், கோபமாகவும் அல்லது தன்னுடைய சிரமங்களில் கவனம் செலுத்தியும் செயல்பட வேண்டியிருந்தது. ஆனால் அதற்கு பதிலாக, அவர் தனது சூழ்நிலைகளை பயன்படுத்தி, தனது சுற்றியுள்ளவர்களுக்கு மனதுருக்கத்தைக் காண்பிக்கத் தீர்மானித்தார்.

நம்முடைய துக்கத்தில் சிக்கியிருக்கும் "உரிமையை" விட்டு விடுவது மற்றும் பிறருக்காக கருணை காக்கும் தேர்வு செய்வது கடினம். ஆனால் நாம் துன்புறுகிறோம், நமக்கு பிறரை அதிகமாக பரிவுத்தன்மையுடன் அணுகும் திறன் இருக்கும்.

பிரச்சினைகளை ஒப்பீடு செய்வதற்கோ அல்லது யாருக்கு மோசமானது என்று தீர்மானிப்பதற்கோ பதிலாக, ஆசீர்வாதமாக செயல்பட நாம் முடிவு செய்யலாம்.

ஜெபம்: பிரியமான தேவனே, மனதுருக்கத்தின் வரம் அளித்ததற்கு நன்றி. என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் சவால்களில், பிறருக்கான கருணையை நான் அதிகமாக உணர்வதை அறிவேன். அதனை நன்கு பயன்படுத்தி, என்னை சுற்றியுள்ளவர்களுக்கு ஆசீர்வாதமாக செயல்பட உதவிசெய்யும். ஆமென்.

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

Finding God's Truth In The Storms Of Life

கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகின் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க படுவதில்லை. உண்மையில், பிரச்சனைகள் வரும் என்று யோவான் 16:33 உறுதியளிக்கிறது. நீங்கள் இப்போது வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கானது. வாழ்க்கையின் புயல்களினுடாய் நமக்கு கிடைக்கும் நம்பிக்கையின் நினைவூட்டல் இது. இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளில் உங்களுக்கு உதவும் அடித்தளத்தை அது உங்களுக்கு வழங்கும்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக எலிசபெத் கிரேஸ் சாண்டர்ஸ்க்கு நன்றி செலுத்திக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு: https://www.worldhelp.net