உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

உபவாசம்
பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கு லெந்துகாலத்தின் போது சம்பிரதாயத்திற்காக உபவாசிப்பது ஏதோ ஒரு வித சந்தோஷத்தையோ, திருப்தியையோ கொடுக்கிறது. நாம் உபவாசிக்க ஆயத்தமாகும்போது, கிறிஸ்து இயேசுவுக்கும் நமக்குமுள்ள உறவு வளர்வதற்கு எது தடையாக இருக்கிறது என்று நினைக்கிறோமோ, பெரும்பாலும் அதையே நாம் உபவாசிக்கும் படி தெரிந்து கொள்கிறோம். ஆனால் பண்டைய கால உபவாசங்களில், உணவே உண்ணாமல் இருத்தலோ அல்லது கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தலோ ஒருவரின் பாவத்திற்குரிய இச்சைகளிலிருந்து விடுபடுவதற்காக செய்யப்படவில்லை.
ஒரு வேளை நாம் உபவாசிக்கும் கலையை தொலைத்து விட்டதனாலோ என்னவோ, நமக்கு தேவை என்று எதை நினைக்கிறோமோ, அதை சுயமாய் விட்டுவிடுவதானால் வரும் நன்மைகளை புரிந்து கொள்ள தவறி விட்டோம். முழு வேதாகமத்திலும்,கிருஸ்துவ வரலாற்றிலும் பல பேர் நீண்ட நாட்கள் நல்ல ஆரோகியத்துடன் உபவாசித்தார்கள். நம் கலாச்சாரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் உடனடியாக ஏதோவொரு பலனை எதிர்பார்க்கும் அந்த மனநிலை சரியாக பொருந்தி வரவில்லை என்பது திண்ணம்தான். ஆனால், நாம் நம் சுயத்தை மறுக்கும் அந்த கண பொழுதில் தானே ,ஆண்டவர் நமக்கு எதையாவது வெளிப்படுத்த கூடுமோ?
பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கு லெந்துகாலத்தின் போது சம்பிரதாயத்திற்காக உபவாசிப்பது ஏதோ ஒரு வித சந்தோஷத்தையோ, திருப்தியையோ கொடுக்கிறது. நாம் உபவாசிக்க ஆயத்தமாகும்போது, கிறிஸ்து இயேசுவுக்கும் நமக்குமுள்ள உறவு வளர்வதற்கு எது தடையாக இருக்கிறது என்று நினைக்கிறோமோ, பெரும்பாலும் அதையே நாம் உபவாசிக்கும் படி தெரிந்து கொள்கிறோம். ஆனால் பண்டைய கால உபவாசங்களில், உணவே உண்ணாமல் இருத்தலோ அல்லது கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தலோ ஒருவரின் பாவத்திற்குரிய இச்சைகளிலிருந்து விடுபடுவதற்காக செய்யப்படவில்லை.
ஒரு வேளை நாம் உபவாசிக்கும் கலையை தொலைத்து விட்டதனாலோ என்னவோ, நமக்கு தேவை என்று எதை நினைக்கிறோமோ, அதை சுயமாய் விட்டுவிடுவதானால் வரும் நன்மைகளை புரிந்து கொள்ள தவறி விட்டோம். முழு வேதாகமத்திலும்,கிருஸ்துவ வரலாற்றிலும் பல பேர் நீண்ட நாட்கள் நல்ல ஆரோகியத்துடன் உபவாசித்தார்கள். நம் கலாச்சாரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் உடனடியாக ஏதோவொரு பலனை எதிர்பார்க்கும் அந்த மனநிலை சரியாக பொருந்தி வரவில்லை என்பது திண்ணம்தான். ஆனால், நாம் நம் சுயத்தை மறுக்கும் அந்த கண பொழுதில் தானே ,ஆண்டவர் நமக்கு எதையாவது வெளிப்படுத்த கூடுமோ?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்