பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள்மாதிரி

Live By The Spirit: Devotions With John Piper

7 ல் 3 நாள்

பரிசுத்த ஆவியானவர் பயத்தை வெல்லுவார்

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் — ஏசாயா 44:3

மற்றவர்களோடு திங்களன்றை காட்டிலும் வெள்ளிக்கிழமை ஏன் இனிமையாக இருக்க முடிகிறது தெரியுமா? நம்பிக்கை ஒரு பிரகாசமான வரும்காலத்தை குறிக்கும் ஆறாக, நம்முடைய சந்தோஷத்தை நிரப்பி, மற்றவர்களுக்கு இனிமையாக இருக்க செய்வதினாலல்லவா?

வெள்ளிக்கிழமையிலே ஓய்வும் கலியாட்டும் பக்கத்திலேயே இருக்கிறது, அதை நாம் ருசிக்கும் அளவு பக்கத்திலிருக்கிறது. நம்பிக்கையினால் நாம் வரவிருக்கும் வார கடைசியை ருசிக்கிறோம். நம்முடைய சந்தோஷத்தின் நீர்த்தேக்கம் நிரம்புகிறது. வார கடைசி பிரகாசமாக இருந்தால், நம்முடைய நீர்த்தேக்கம் நிரம்பி வழிய தொடங்கும்.

மற்றவர்கள்மீது நம்முடைய சந்தோசம் நிரம்பி வழிவதே அன்பு. உன்னுடைய வரும்காலத்தை குறித்து நீ சந்தோஷமாக உணரும்போது, நீ மற்றவர்களோடு இனிமையாகவே இருப்பாய். நம்பிக்கை உன்னை சந்தோஷத்தினால் நிரப்பும், சந்தோஷம் சிரிப்பினாலும் இனிமையான வார்த்தைகள் மற்றும் உதவும் கிரியைகளினாலும் வழியும். அது விடுமுறைகளுக்கு முன்னால், பிறந்த நாட்களுக்கு முன்னால், கிறிஸ்மஸிற்கு முன்னால் மற்றும் அநேகருக்கு வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும்.

நாம் பரிசுத்த ஆவியினால் முழுதும் மூழ்கியிருந்தால், வெள்ளிக்கிழமைகளைப் போல திங்கள்கிழமைகளிலும் நம்பிக்கையினால் முழுதும் மூழ்கியிருப்போம். நாளையைக்குறித்து எது நம்மை பயப்படுத்தினாலும், நாம் பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்திருந்தால் நாம் பயப்படவேண்டியதில்லை. வீட்டில் உறவுகளில் முறிவு இருக்கலாம், ஆரோக்கியம் மோசமாகிக்கொண்டிருக்கலாம், வேலையிடத்தில் உன் தலைவர் உன்னை வேலையைவிட்டு அனுப்பிவிட முயலலாம், நாளை என்பது ஒரு பயமுறுத்தும் எதிர்ப்பாக இருக்கலாம் - நாளையை குறித்து எது உன்னை பயமுறுத்தினாலும் சரி, தேவ ஆவியானவரின் ஊற்றுதலுக்கு உன் இருதயத்தை திற, அவருடைய வாக்குத்தத்த வார்த்தையை நோக்கி பார், அவர் உன்னை அந்த பயத்தை வெல்ல நம்பிக்கையினால் நிரப்புவார்.

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது, பயங்கள் மாத்திரம் மாற்றப்படுவதில்லை, ஏக்கங்கள் தீர்க்கப்படுகின்றன. தேவனுக்கென்ற உன் ஆத்துமாவின் தாகம் தீர்க்கப்படுகிறது - நம்முடைய மீதி வாழ்நாளை எங்கு செலவழிக்கவேண்டும் என்று அறிந்துகொள்ளும் அளவு அது நம்மை திருப்திப்படுத்துகிறது.

நம்முடைய எதிர்காலம் இரண்டு காரணங்களுக்காக கவலைக்கிடமாக தோன்றலாம்: ஒன்று கெடுதல் வருகிறது என்ற நிலை; மற்றொன்று சந்தோசஷம் வரப்போவதில்லை என்ற நிலை. இந்த இரண்டு காரியங்களினால்தான் மனிதனுடைய இருதயம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது அல்லவா: எதிர்கால கவலை மற்றும் எதிர்கால சந்தோஷத்திற்கான தாகம். அப்படியென்றால், ஏசாயாவின் வாக்குத்தத்தம் நமக்கு தேவையானதாக இருக்கிறது: ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் ஊற்றப்படும்போது, பயம் எடுக்கப்படுகிறது மற்றும் தாகம் தீர்க்கப்படுகிறது. உங்களுக்கும் தேவ ஆவியானவரின் தொடுதல் தேவையென்றால், பகலும் இரவும் அவருடைய வார்த்தையை வாசியுங்கள் என்று நான் உங்களை தூண்டுகிறேன்.

இன்னும் அறிய: http://www.desiringgod.org/messages/a-precious-promise-the-outpouring-of-gods-spirit

நாளை

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Live By The Spirit: Devotions With John Piper

பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள்

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக ஜான் பைப்பர் மற்றும் 'டெசிரிங் கோட்' அமைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம். இன்னும் தகவலுக்கு, http://www.desiringgod.org/என்ற இணையதளத்தை பார்வையிடவும்