மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்Sample

ஆண்டவர் உனக்கு பதில்அளிக்காதபோது நீ என்ன செய்வாய்?
இன்று, அப்போஸ்தலனாகிய பவுலைக்காண்போம், அவர் தன்னுடைய வேதனையைக் குறித்து ஆண்டவரிடத்தில் மூன்று ஜெபங்களை ஏறெடுத்தார். (வேதாகமத்தைப் பார்க்கவும், 2 கொரிந்தியர் 12: 7-10)
அவர் கொரிந்தியருக்கு எழுதின கடிதத்தில், "அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்." என்று எழுதியது உனக்கு நினைவிருக்கிறதா? (2 கொரிந்தியர் 12: 8)
நான் கற்பனை செய்கிறபடி, அவர் முதன்முதலில் ஜெபம் செய்தபோது, தன்மீது வந்திருக்கிற இந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபடப்போவதாக எண்ணி அவர் உறுதியாக இருந்தார்:
"ஆண்டவரே, நீர் எனக்கு வேண்டும்... இந்த நிலைமை என் அஸ்திவாரத்தையே அசைத்துப்போட்டது. தயவுசெய்து... இந்த வேதனையை என்னை விட்டுநீக்கிவிடும். ஆமென். "
ஆனாலும், அந்த முள்அங்கேயே இருந்தது. இருப்பினும் பவுல் பலமுள்ளவனாகி மனம் தளர்ந்துபோகவில்லை. அவர் இரட்டத்தனையான விழிப்புடன் ஜெபத்தில் உறுதியாக இருந்தார்:
"ஆண்டவரே, இந்த முள்ளை என்னிடமிருந்து எடுத்துப்போடும்படி விண்ணப்பிக்க நான் மீண்டும் வருகிறேன். நான் உண்மையில் அதைப் பற்றி யோசித்தேன், அது என்னை ஊழியத்தில் ஊனமுற்றவனாக்குகிறது. நீர் இதை என்னிடமிருந்து நீக்கிவிட்டால், நான் இன்று செய்வதை விட, இன்னும் சிறப்பாக உமக்கு சேவை செய்ய முடியும்: நான் அநேக விதவைகளை சந்திக்கமுடியும், அநேக மக்களுக்கு பயிற்சி அளிக்கமுடியும், உம்முடைய திருச்சபைக்கு போதிக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் அநேகக் கடிதங்களை எழுதவும்முடியும்! இந்த வேதனை என்னை விட்டுப்போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! ஆமென்."
இன்னும்... முள் அப்படியே இருந்தது.
இந்த முறை, பவுல் தனது வேதனை நீங்குவதைக் காண ஆவலுடன் காணப்பட்டு, நிச்சயமாகவே, உபவாசம் மற்றும் ஜெபத்திற்கான நேரத்தை ஒதுக்கினார்:
"இயேசுவே, சிலுவையில் மரித்ததன் மூலம் எங்கள் வேதனையை நீர் ஏற்றுக்கொண்டதாக சொன்னீர்கள், நானோ, இந்த முள்ளுடன் போராடுவதால் மிகவும் சோர்ந்துபோகிறேன். இறுதியாக நான் மீண்டும் ஒரு முறை உம்மிடம் கேட்கிறேன்... இந்த வலியை என்னிடமிருந்து எடுத்துப்போடும்படி நான் கெஞ்சுகிறேன்... தயவுசெய்து செய்யும்! அப்படி இல்லையெனில், என்னிடம் ஒரு வார்த்தையாகிலும் பேசுவீராக. ஆமென்."
கிறிஸ்துவில் அன்பிற்குரியவரே, இன்று பவுலுடன் இணைந்து இன்னும் ஒரு ஜெபம் செய்வதற்காக உங்களை அழைக்கிறேன்.
"ஆம்... நான் பலவீனமாக இருக்கும்போது, நான் மிகவும் பின்தங்கி தாழ்ந்து போயிருப்பதை உணரும்போது, இனியும் என்னால் அதைத் தாங்க முடியாது என்று நினைக்கும் போது, நான் அதை இழக்கப் போகிறேன் என்று நினைக்கும் போது, நான் என் கயிற்றின் முடிவில் இருக்கும்போது, என்னால் இந்த ஏமாற்றத்தை இனியும் தாங்க முடியாதபோது, நான் மிகவும் பலவீனமாக இருக்கும்போது... இதோ, இந்தத் தருணத்தில்தான் இயேசுவே, உம்மால் நான் பலமாக இருக்கிறேன். நான் என் முள்ளை கைவிட்டு, என் ஏமாற்றத்தை உமது கரங்களில் விட்டுவிடுகிறேன். ஆமென்!”
About this Plan

உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்று நினைக்கிறாயா? உன்னை பற்றி நினைக்கவோ கண்டுகொள்ளவோ யாருமில்லை என்று உன் உள்ளத்தில் தோன்றுகிறதா? நீ வாழ்க்கையில் தோற்றுப்போனதாக எண்ணுகிறாயா? நீ என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடிவதுபோல் இருக்கிறதா? எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லையா? அல்லது தாமதமாகிறதா? இனி நான் வாழ இயலுமா அல்லது வாழ்ந்து என்ன அர்த்தம் என்று யோசிக்கிறாயா? இந்த திட்டம் உனக்கானது. ஆம் அன்பரே நான் குறிப்பிட்ட அனைத்தும் மன அழுத்தத்தின் (depression) விளைவுகள். ஆண்டவர் இயேசு ஒருவரால் மட்டுமே இந்த மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு பரிபூரண விடுதலை அளிக்க முடியும். மேலும் அவர் உங்களுக்கு விடுதலை அளித்து உங்களை மேன்மையாக வைக்க ஆவலாய் இருக்கிறார். வாருங்கள் வேதாகமத்தின் அடிப்படையில் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிகளை ஆராய்வோம்.
More
Related Plans

Prayer Altars: Embracing the Priestly Call to Prayer

Sickness Can Draw You and Others Closer to God, if You Let It – Here’s How

How Stuff Works: Prayer

Journey With Jesus: 3 Days of Spiritual Travel

Journey Through Jeremiah & Lamentations

Here Am I: Send Me!

The Way of St James (Camino De Santiago)

Journey Through Proverbs, Ecclesiastes & Job

The Making of a Biblical Leader: 10 Principles for Leading Others Well
