16
தந்திரமுள்ள நிர்வாகி
1இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “செல்வந்தன் ஒருவனுக்கு ஒரு நிர்வாகி இருந்தான். தன் எஜமானின் உடைமைகளையெல்லாம் அந்த நிர்வாகி வீணடிப்பதாக அவனது எஜமானிடம் குற்றம் கூறப்பட்டது. 2எனவே அந்த செல்வந்தன் அவனை அழைத்து, ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்க முடியாது, எனவே நீ வந்து உனது நிர்வாகக் கணக்கை என்னிடம் ஒப்படைத்து விடு’ என்றான்.
3“அதைக் கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கிவிடப் போகின்றாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பலமில்லை. பிச்சை கேட்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கின்றது. 4இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
5“ஆகவே, அவன் தன்னுடைய எஜமானின் கடனாளிகளை ஒவ்வொருவராக வரவழைத்து, வந்தவர்களில் முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கடன் பட்டிருக்கிறாய்?’ என்றான்.
6“அதற்கு அவன், ‘நூறு கொள்கலன்#16:6 நூறு கொள்கலன் – மூலமொழியிலே 100 பாத். இது சுமார் 3,000 லீட்டருக்கு சமம். ஒலிவ எண்ணெய்’ என்றான்.
“அந்த நிர்வாகி அவனிடம், ‘விரைவாக அமர்ந்து, உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதில் ஐம்பது என்று எழுதிக்கொள்’ என்றான்.
7“பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான்.
“ ‘ஆயிரம் மூடை#16:7 ஆயிரம் மூடை – மூலமொழியிலே 100 கோர். இது சுமார் 30,000 கிலோவுக்குச் சமம். கோதுமை’ என்று அவன் பதிலளித்தான்.
“அப்போது அந்த நிர்வாகி அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
8“நேர்மையற்ற இந்த நிர்வாகி, இவ்வாறு சாதுரியமாகச் செயல்பட்டதை அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கின்றவர்களோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கின்றார்கள். 9நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அவை இல்லாமல் போகும்போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள்.
10“மிகச் சிறியவற்றில் உண்மையுள்ளவன், பெரியவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருப்பான். சிறியவற்றில் நேர்மையற்றவனாய் இருக்கின்றவன், பெரியவற்றிலும் நேர்மையற்றவனாய் இருப்பான். 11எனவே இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில் நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உங்களை நம்பி உண்மையான செல்வத்தை உங்கள் கையில் கொடுப்பவர் யார்? 12இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், உங்களுக்கென்று ஒரு சொத்தை உரிமையாகக் கொடுப்பவர் யார்?
13“எந்த வேலைக்காரனாலும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அவ்வாறே நீங்கள் இறைவனுக்கும் உலக செல்வத்துக்கும் பணிசெய்ய முடியாது” என்றார்.
14பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர்கள் இதைக் கேட்டபோது இயேசுவை ஏளனம் செய்தார்கள். 15அவர் அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனிதருடைய பார்வையில் உங்களை நீதிமான்கள் எனக் காண்பிக்கிறீர்கள். ஆனால் இறைவனோ உங்கள் இருதயங்களை அறிவார். மனிதருடைய பார்வையில் உயர்வாய் மதிக்கப்படுவது, இறைவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கும்.
மேலதிகமான போதனைகள்
16“நீதிச்சட்டமும் இறைவாக்கினரின் வார்த்தைகளும், யோவானுடைய காலம்வரை மட்டுமே; அதுமுதல், இறைவனுடைய இராச்சியத்தைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது, ஆகவே அனைவரும் தீவிரமாய் அதற்குள் செல்வதற்கு முயற்சிக்கிறார்கள். 17வானமும் பூமியும் மறைந்து போனாலும், நீதிச்சட்டத்தில் இருக்கின்ற எழுத்தின் ஒரு சிறிய புள்ளிகூட மறைந்து போகாது.
18“தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், தகாத உறவுகொள்கின்றான். விவாகரத்துச் செய்யப்பட்ட ஒரு பெண்ணை எவனாவது திருமணம் செய்தால், அவனும் தகாத உறவுகொள்கின்றான்.
செல்வந்தனும் லாசருவும்
19“ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான#16:19 கருஞ்சிவப்பும் மென்பட்டுமான என்பது விலையுயர்ந்த உடை உடை அணிந்து, ஒவ்வொருநாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். 20அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் கிடத்தப்பட்டிருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய், 21பணக்காரனின் மேசையில் இருந்து விழுகின்ற உணவை சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். தெருநாய்களும் வந்து அவனது புண்களை நக்கின.
22“காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்து போனான். இறைதூதர்கள் அவனை ஆபிரகாமின் அருகே#16:22 ஆபிரகாமின் அருகே – மூலமொழியிலே ஆபிரகாமின் மடி. சிலர் இதை பரலோக விருந்து என்றும் அர்த்தப்படுத்துகிறார்கள் சுமந்து சென்றார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம் செய்யப்பட்டான். 23இறந்தவர்கள் இருக்கும் இடத்திலிருந்து#16:23 இறந்தவர்கள் இருக்கும் இடத்திலிருந்து – கிரேக்க மொழியில் ஹேதீஸ் என்றுள்ளது. சிலர் இதை, பாதாளம் என்று அர்த்தப்படுத்துகிறார்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவன், மேலே நோக்கிப் பார்த்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவரது அருகில்#16:23 அருகில் அல்லது அவரது மார்பில் சாய்ந்திருந்த சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். 24எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவரை அழைத்து, ‘என்னில் இரக்கம்கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரச் செய்யும்படி, அவனை அனுப்புவீராக! நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான்.
25“அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலமானவற்றை அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ கஷ்டங்களை அனுபவித்தான். இப்போது அவன் இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய். 26இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்து வர விரும்புகின்றவர்களால் அவ்வாறு வர முடியாது, அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும் ஒருவராலும் முடியாது’ என்றார்.
27“அதற்கு அவன், ‘அவ்வாறானால் தந்தையே, நான் உம்மிடம் கெஞ்சிக் கேட்கின்றேன், லாசருவை என்னுடைய தந்தை வீட்டுக்கு அனுப்புவீராக! 28ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவன் போய் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்துக்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான்.
29“அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவைகள் அவர்களிடம் உள்ளன;#16:29 உள்ளன; கிரேக்க மொழியில் – அவர்களுக்கு மோசேயும் இறைவாக்கினர்களும் உள்ளனர். அவர்கள் அவற்றைக் கேட்டு கீழ்ப்படியட்டும்’ என்றார்.
30“அதற்கு அவன், ‘அவ்வாறல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால் அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான்.
31“அப்போது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் சொன்னதைக் கேட்பதற்கு அவர்கள் மனமற்றவர்களாக இருந்தால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும்கூட, அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று சொன்னார்.”