யாத்திராகமம் 7

7
1அப்போது கர்த்தர் மோசேயிடம், “பார், நான் உன்னைப் பார்வோனுக்கு இறைவனாக்கினேன்; உன் அண்ணனான ஆரோன் உன் இறைவாக்கினனாக இருப்பான். 2நான் உனக்குக் கட்டளையிடும் யாவற்றையும் நீ சொல்; உன் அண்ணனான ஆரோன், இஸ்ரயேலரை அவனுடைய நாட்டிலிருந்து வெளியே போகவிடும்படி பார்வோனிடம் பேசட்டும். 3ஆனாலும் நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; எகிப்தில் என் அற்புத அடையாளங்கள் அதிகரித்தாலும், 4பார்வோன் நீ சொல்வதைக் கேட்க மாட்டான். அப்போது நான் எகிப்தின்மீது என் கரத்தை வைத்து#7:4 என் கரத்தை வைத்து எகிப்தியரைத் தண்டித்து, கடும் தண்டனைகளைக்கொண்டு, என் மக்களாகிய இஸ்ரயேலரை கோத்திரப் பிரிவுகளாக வெளியே கொண்டுவருவேன். 5நான் எகிப்தின்மீது என் கரத்தை நீட்டி இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார்.
6மோசேயும் ஆரோனும் கர்த்தர் தமக்குக் கட்டளையிட்டதைச் செய்தார்கள். 7அவர்கள் பார்வோனிடம் பேசியபோது, மோசேக்கு எண்பது வயதாகவும், ஆரோனுக்கு எண்பத்து மூன்று வயதாகவும் இருந்தது.
ஆரோனின் கோல் பாம்பாகுதல்
8கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது, 9“பார்வோன் உங்களிடம் ஒரு அற்புதத்தை செய்து காட்டுங்கள் என்றால் நீ ஆரோனிடம், ‘உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாக கீழே எறிந்து விடு’ என்று சொல், அது பாம்பாக மாறும்” என்றார்.
10அவ்வாறே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் கர்த்தர் கட்டளையிட்டபடி செய்தார்கள். பார்வோனுக்கும் அவன் அலுவலர்களுக்கும் முன்பாக ஆரோன் தன் கோலைக் கீழே எறிந்தபோது, அது பாம்பாக மாறியது. 11அப்போது பார்வோன், எகிப்திய மந்திரவாதிகளாகிய ஞானிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். இவர்களும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள்: 12அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது கோலைக் கீழே போட்டபோது அவை பாம்பாக மாறின. ஆனால் ஆரோனின் கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிவிட்டது. 13ஆயினும், கர்த்தர் சொல்லியிருந்தபடியே, பார்வோனுடைய இருதயம் கடினமாகியது; அவன் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை.
முதலாம் வாதையாகிய இரத்தம்
14அப்போது கர்த்தர் மோசேயிடம், “பார்வோனின் இருதயம் கடினமாகி விட்டது; அவன் இஸ்ரயேலரை போகவிட மறுக்கிறான். 15நாளை காலையில் பார்வோன் ஆற்றுக்குப்#7:15 ஆற்றுக்கு நைல் நதி போகும்போது நீ அவனிடம் போ. பாம்பாக மாறிய கோலை உன் கையில் எடுத்துக்கொண்டு நைல் நதிக்கரையிலே அவனைச் சந்திப்பதற்காக நில். 16நீ அவனிடம், ‘எபிரேயரின் இறைவனாகிய கர்த்தர் என்னை உன்னிடம் அனுப்பி, பாலைவனத்திலே என்னை வழிபடும்படி என்னுடைய மக்களைப் போக விடு என்று சொல்லியிருந்தார். ஆனாலும் இதுவரை நீர் அதற்கு செவிமடுக்கவில்லை. 17அதனால் கர்த்தர் உமக்குச் சொல்வது இதுவே: நானே கர்த்தர் என்பதை இதனால் நீ அறிந்துகொள்வாய்: என் கையிலுள்ள கோலினால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன், உடனே அது இரத்தமாக மாறும். 18நைல் நதியிலுள்ள மீன்கள் இறந்து, நதி நாற்றமெடுக்கும்; எகிப்தியரால் அதன் தண்ணீரைக் குடிக்க முடியாமல்போகும்’ என்று சொல்” என்றார்.
19மேலும் கர்த்தர் மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியதாவது: ‘உன் கோலை எடுத்து, எகிப்திலுள்ள ஆறுகள், அருவிகள், குளங்கள், நீர்த் தேக்கங்கள் ஆகிய தண்ணீருள்ள அனைத்து இடங்களின் மேலும் கையை நீட்டு’ என்று சொல். அவை இரத்தமாக மாறிவிடும். எகிப்து எங்கும் இரத்தம் இருக்கும், மரத்தினால் மற்றும் கல்லினாலான பாத்திரங்களில் உள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்றார்.
20மோசேயும் ஆரோனும் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கும் அவன் அலுவலர்களுக்கும் முன்பாக தன் கோலை நீட்டி, நைல்நதியிலிருந்த தண்ணீரை அடித்தான்; தண்ணீர் முழுவதும் இரத்தமாக மாறிற்று. 21நைல் நதியிலுள்ள மீன்களெல்லாம் இறந்துபோய், எகிப்தியர் நைல் நதித் தண்ணீரைக் குடிக்க முடியாதபடி நைல் நதி துர்நாற்றமெடுத்தது. எகிப்து முழுவதும் இரத்தமாயிருந்தது.
22ஆனால் எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறு செய்தார்கள். அதனால் பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, அவன் மோசேயும் ஆரோனும் சொல்வதைக் கேட்கவில்லை. 23கர்த்தர் செய்ததை பொருட்படுத்தாமல் பார்வோன் திரும்பி, தன் அரண்மனைக்குப் போனான். 24நைல் நதியின் தண்ணீரைக் குடிக்க முடியாதிருந்ததால், எகிப்தியர் குடிநீருக்காக நைல் நதியோரமெங்கும் ஊற்றுத் தோண்டினார்கள்.
இரண்டாம் வாதையாகிய தவளைகள்
25கர்த்தர் நைல் நதியை அடித்து ஏழு நாட்கள் கடந்தன.

ទើបបានជ្រើសរើសហើយ៖

யாத்திராகமம் 7: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល