திட்ட விவரம்

எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம் மாதிரி

All Is Calm: Receiving Jesus' Rest This Christmas

5 ல் 1 நாள்

நாள் ஒன்று: கிறிஸ்துமஸ் நாட்களில் ஏன் நமக்கு இளைப்பாறுதல் தேவை


“அர்நாகத்தையும் வீட்டையும் அலங்கரியுங்கள்" என்ற கிறிஸ்துமஸ் பாடல்களை நாம் அறிவோம், அப்படியே நாம் செய்தும் வருகிறோம்.


நம்மில் சிலர் குளிர்காலம் துவங்கியவுடன் கிறிஸ்துமஸ் அலங்காரத்தை தொடங்குகிறோம், சிலர் கடைசி வேலையிலாவது அலங்காரத்தை செய்தே தீருவோம்.


ஆனால் நாம் அனைவரும் இந்த செயல்பாடுகளில் மூழ்கிப்போகிறோம் - இவைகளில் அநேகம் களிகூருதல் மற்றும் விழாக்கோலம் கொண்டவைகளாக இருந்து நம்முடைய ஆத்துமாக்களை அமைதியில்லாமல் வெறுமையாக மாற்றுகின்றன. அநேக வேளைகளில் இந்த விடுமுறை கலியாட்டத்தின்போதுதான் நாம் யோசிக்கிறோம், "இவ்வளவுதானா சந்தோசம்?" என்று. சந்தோஷமான செய்தி என்னவென்றால் இனிப்புகள், ஷாப்பிங் பட்டியல் மற்றும் அலங்காரத்திற்கும் மேலாக தேவகுமாரன் நமக்காக மனிதனாக மாறியுள்ளார்.


தேவன் நாம் மும்முரமாக வேளையில் இடுப்படக்கூடியவர்கள் என்று அறிந்திருக்கிறார். இதனால் தான் இஸ்ரவேலருக்கு ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் ஒரு நாள் ஓய்வை அவர் ஆயத்தம் செய்தார். அவர்கள் அதன்மூலமாக சிறிது நேரம் அமைதலாக இருந்து தேவனுடைய நன்மையை புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு அவர் தேவையென்று புரிந்துகொள்ளவும், அவருடைய அமைதியென்னும் ஈவை அறிந்துக்கொள்ளவும்.


நாம் இளைப்பாறுதலை கடைப்பிடிப்பதன் மூலம், தேவனுடைய உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்கிறோம்: நாம் வேலைசெய்யாவிட்டாலும் கூட, தேவன் நம்முடைய உலகத்தை கிரமமாக நடத்துகிறார்.


இந்த வருடம் நான் உங்களை தேவனாகிய இயேசு கிறிஸ்து தம் சீஷர்களை அழைத்ததுபோல வரவழைக்கிறேன், அவரோடு தனியாக வந்து அவருடைய இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ளும்படியாக, உங்கள் விடுமுறை நாட்களின்போது கொஞ்சம் அமைதலாகி கிறிஸ்துமஸ் நாட்களின் அதிசயத்தையும் சந்தோஷத்தையும் உணரும்படியாக அழைக்கிறேன்.


ஆனால் அது எப்படி இருக்கும்?


வரும் நான்கு நாட்களில், நாம் ஆங்கில வார்த்தையான REST (இளைப்பாறுதல்) ஐ நாம் சிந்திப்போம்: R - அவருடைய நன்மைகளை நினைவுகூர, E - உன்னுடைய தேவையை அறிக்கையிட, S - அவருடைய அமைதியை நாட, T - அவருடைய உண்மைத்தன்மையை விசுவாசிக்க.


இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வீர்களா? கொஞ்சம் நேரம் அமைதலாக இருக்க தனியே வாருங்கள்.


ஜெபம்: ஓ தேவனே, என்னை நீர் நன்கு அறிந்திருக்கிறீர். என் குடும்பத்தோடும் நண்பர்களோடும் நேரம் செலவிக்க நான் விரும்புகிறேன் ஆனால் அதிகாமாக வேலையை என்மீது ஏற்றுக்கொண்டு முடிவில் மன அழுத்தம் மற்றும் காயமும் படுகிறேன் என்று நீர் அறிவீர். இந்த ஆண்டு எனக்கு அது வேண்டாம். ஆகவே நான் திறந்த இருதயத்தோடும் கரங்களோடும் உம்மிடம் வருகிறேன், இதோ நான், எங்கள் இரட்சகரின் பிறப்பை அமைதலாக இருந்து கொண்டாட எனக்கு கற்றுத்தாரும். உம்முடைய அழகை ரசித்து, உம்முடைய துதியைப் பாட என் இருதயத்தை இசைந்தருளும். ஆமென்.


இன்னும் தகவலறிய? பதிவிறக்க இயேசுவின் நாமங்களை அறிய பெற்றுக்கொள்ள இயேசுவின் நாமங்கள் ஜெப புத்தகம், ஜெப இளைப்பாறுதல் மற்றும் கிருஸ்துமஸ் இளைப்பாறுதல் புத்தகம்.



நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

All Is Calm: Receiving Jesus' Rest This Christmas

இது சந்தோஷமாக இருக்கவேண்டிய காலம், கூடவே மிகவும் மும்முரமாக இருக்கக்கூடிய காலமும்கூட. இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க கொஞ்சம் நேரம் அமைதி மற்றும் ஆராதனைக்காக உங்கள் மும்முரமான வாழ்க்கையை விட்டு வெளியே வார...

More

இந்தத் திட்டத்தை வழங்கியமைக்கு பேக்கர் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு http://onethingalone.com/advent/ஐ பார்வையிடுங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்