இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

The Parables of Jesus

36 ல் 23 நாள்

வழிதவறிய மகன்
அநேகமாக மிக பிரபலமான உவமை, பொதுவாக கெட்டகுமாரன் என்று அழைக்கப்படுவது, இரண்டு சகோதரர்கள் தங்கள் தந்தையை மகிழ்வித்து அவரது ஒப்புதலைப் பெற முயற்சிக்கும் கதையைச் சொல்கிறது.

ஊதாரித்தனமான மகன் தனது பரம்பரை செல்வத்தை எடுத்து, அதை முட்டாள்தனமாகவும் விரைவாகவும் செலவழிக்கிறான். அவர் தனது தந்தையை எவ்வாறு புண்படுத்தியுள்ளார் என்பதையும், அவரது வாழ்க்கை எவ்வளவு பயனற்றது என்பதையும் உணர்ந்து அவர், தந்தையிடம் திரும்பி வந்து தகப்பனின் நல்ல கிருபைக்குள் மீண்டும் வர முயற்சிக்கிறார். எவ்வாறாயினும், தந்தை தனது மகன் எந்த முயற்சியும் எடுக்க அனுமதிக்காது, அவருக்காக ஒரு நாள் வேலை செய்வதற்கு முன்பே நேசித்து, வரவேற்கிறார்.

"ஊதாரி" என்ற வார்த்தையின் பொருள் அதிகப்படியான கட்டுப்படுத்தப்படாத நிலை என்பதாகும், மகன் தன் சொத்துக்களை எவ்வாறு செலவழித்தான் என்பதற்காக அவனுக்கு ஒதுக்கப்பட்ட தலைப்பு. ஆனாலும், தந்தையின் கதையே உண்மையிலேயே பொறுப்பற்றது, ஏனென்றால் அவர் தனது மகன் திரும்பியவுடன் தனது அன்பு, மன்னிப்பு, கருணை மற்றும் உடைமைகளில் கட்டுப்படுத்தாது ஆடம்பரமாக இருக்கிறார்.

மூத்த மகன் பெரும்பாலும் கதையில் மறந்துபோன கதாபாத்திரம், ஆனால் அவர் பார்வையாளர்களிடம் அதாவது முதல் வசனத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிற பரிசேயர்களிடம், மிகுந்த ஆர்வம் கூட்டினார். ஏனென்றால் விதிகளை கடைப்பிடிக்க முனைப்பு காட்டியதால் அவர் தனது சகோதரருக்கு மேலாக இருக்க வேண்டும் என்று நம்பிய அவர்களின் பிரதிநிதியாக இந்த கதையில் இடம் பெற்ற மூத்த சகோதரரை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் மூத்த சகோதரர் அவற்றை அன்பைப் பெறுவதற்கும் ஒரு ஆசீர்வாதத்தைக் காப்பதற்கும் செய்கிறார், அன்பில் இருந்தும் தந்தையின் ஆசீர்வாதம் பெருகவும் விருப்பப்பட்டு அல்ல. இந்த கதையில் தம்பியின் மீட்பையும் நல்லிணக்கத்தையும் நாம் காண்கிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது செயல்களில் மட்டும் நம்பிக்கை கொண்ட மூத்த சகோதரரின் தலைவிதி கதையில் தீர்க்கப்படாமல் உள்ளது.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

The Parables of Jesus

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!

More

We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/