நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

நெருக்கமான நாட்களில் - கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு உதவி செய்ய - நாம் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள் : 1. அவரைக்குறிந்து சரியான அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும். 2. நம்மைச் சுற்றியுள்ள கவனச்சிதறல்களை குறைக்க வேண்டும்.
இதில் நேற்றைய தினத்தில் கர்த்தர்என் வெளிச்சமும் என் இரட்சிப்பும் ஆனவர், யாருக்குப் பயப்படுவேன்? என்று அவரைக்குறித்து சரியான அறிவைப் பெற்றோம்.கவனச்சிதறல்களைக் குறைத்து, எதில் நம் கவனத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதை இன்றைய வேதாகம வாக்கியத்தில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.
”ஒன்றை நான் கேட்டேன்” என்று தாவீது- சொல்வதில் அவருக்குள் எந்த கவனச்சிதறலும் இல்லை என்பதைக் காட்டுகின்றது.... தாவீது கர்த்தரிடத்தில் (இயேசுவினிடத்தில்) ஐசுவரியத்தை, வல்லமையை அல்லது கஷ்டமில்லாத வாழ்க்கையை தாரும் என்று கேட்கவில்லை.
இவ்வுலகில் இருக்கும் எதுவும் தேவனுடைய பிரசன்னத்தைப் போல் தன் ஆத்துமாவை - திருப்திபடுத்தாது என்பதை தாவீது அறிந்திருந்தார். நம்முடைய வாழ்க்கையிலும் எத்தனை கவனசிதறல்கள் – மொபைல் ஃபோன் வழியாக, டிவி செய்திகள். என இப்படி பல வழிகளில் வந்து கொண்டே இருக்கின்றன. “கனத்தைச் சிதறடிப்பவைகளை - கவனிக்கும் முன்பதாக” -நாம் நம்முடைய சிந்தையை தேவனுடைய வார்த்தையினால் நிரப்பவேண்டும். முதலாவது தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடவேண்டும்.
இதன் அர்த்தம் நாம் நம்முடைய பொறுப்புகளைத் தட்டி கழிக்கின்றோம் என்று அல்ல; நம்முடைய அஸ்திபாரமாக - நம் ஆத்தும நங்கூரமாகிய அவரை வைக்கின்றோம் என்பதே இதன் அர்த்தம்;
இதன்-பலன் வாழ்க்கையின் நாம் விரும்பும் மற்ற எல்லாம் அதினதின் இடத்தில் நமக்கு சரியாக பொருந்திவிடும். நமது அன்றாட செயல்பாடுகளில் ஞானமாகவும் சமாதானத்துடனும் நடந்துகொள்வோம். ஏனென்றால், அவர் நம்மைத் தமது கூடார மறைவினில் ஒளித்து வைத்து – கன்மலையின் மேல் உயர்த்துவார்.
தேவபிரசன்னம் என்பதினாலே நாம் ஓர் ஆலயத்திலே வாழ வேண்டும் அல்லது நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தம் அல்ல; மாறாக, தேவன் -அவரை முதலாவது தேடுவது -அவருடன் தொடர்ச்சியாக தொடர்பில்- இருப்பதை இது காட்டுகின்றது.
அவருடைய வார்த்தை, அவருடைய வாக்குதத்தம் என்னும் கூடாரத்தில் தீங்கு நாளில் மறைக்கின்றார். நம் தலை பயத்தினாலும், வெட்கத்தினாலும் தான் குனிகின்றது. ஆனால் நீங்கள் தனியாக யுத்தம் செய்வதாக இல்லை கர்த்தர் தாமே ”நான் உனக்குத் துணை நிற்கின்றேன்” என்ற நிச்சயத்தை நாம் பெற்றுக் கொள்ளும் போது- நாம் தலைநிமிர்ந்து வாழ்கின்றோம்.
என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு,கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன் என்று இதனை ”அனுபவத்தில் உணர்ந்த தாவீது” - 6ம் வசனத்தில் கூறுகின்றார்.
கவனச்சிதறல்களைத் தவிர்த்து நாம் கருத்தை கிறிஸ்துவின் மீது பதிக்கும் போது - நம் தலை சத்துருக்களுக்கு மேலாக நிச்சயமாக உயர்த்தப்படும்....நம்முடைய நெருக்கமான சூழ்நிலை மாறும்.
நாமும் தாவீதைப்போல நெருக்கத்திலிருந்து வெளிவந்து - கர்த்தைரைப்பாடி கீர்த்தனம் செய்பவர்களாக மாறுவோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

காலையில் கண் விழிக்கும் போது - நேற்றைய தின கவலைகளைப் பார்க்கின்றீர்களா? அல்லது இன்றைய நாளின் – புதிய தேவ கிருபையை உற்று நோக்குகின்றீர்களா? ஒவ்வொருநாளும் நாம் நெருக்கத்திற்கா அல்லது விசுவாசத்திற்கா? எதற்கு முதலிடம் தருகிறோம். ”என்கையிலஒன்னும் இல்லை” என்பதை விட யாவும் தேவன் - அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற அறிவுடன் செயல்படுகின்றோமா? கர்த்தர் என் வெளிச்சம் – யாருக்குப் பயப்படுவேன் (சங்கீதம் 27:1) சொல்லிப்பாருங்கள் உங்கள் இருள், சந்தேகம் விலகி ஓடும். கர்த்தர் என் இரட்சிப்பு என்னும் போது உங்கள் நம்பிக்கையிழந்த சூழ்நிலை மாறி – பெலவீனத்தில் பெலன் உண்டாகும். இந்த சங்கீதம் தேவன் அவர் ஏதோ தூரத்தில் இருந்து நம்மை பார்த்துக்கொண்டு இருப்பவர் அல்ல- அவரே எனது கோட்டை. நிலையற்ற உலகில் எனது அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவே என்று யோசிக்கச் சொல்கிறது. நெருக்கத்திலே நாம் அவரை அழைக்கலாம் - வாங்க!
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d