நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

கர்த்தர் எனக்கு வெளிச்சம், இரட்சிப்பு தருகின்றார் என்று இல்லை; அவர் என் வெளிச்சமும் இரட்சிப்பும் ஆனவர். இதன் அர்த்தம் தேவன் தாமே நமது மகிழ்ச்சி, ஆறுதல், போதகர், வழிகாட்டி என்று ஆகி நமக்குள், நம்மைச்சுற்றி, நம்மால் பிரதிபலிக்கப்படும், நமக்கு வெளிப்படுத்தப்படும் வெளிச்சம் ஆகவும் இருக்கின்றார். இது நமது வெளிச்சம். அவர் நமது இரட்சிப்பு ஆனதால் எனக்கு - உரிமையான - உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் எல்லாம் அவரிடத்தில் இருக்கின்றது நான் அவைகளை எனது விசுவாசத்தினால் அவரிடத்தில் இருந்து - நான் பெற்றுக்கொள்கின்றேன்.
இருளின் வல்லமைகளுக்கு நாம் பயபடத்தேவையில்லை; ஏனென்றால், நமது கர்த்தராகிய இயேசு - அவற்றை அழித்து போடுகின்றார். பாதாளத்தின் சாபங்களுக்கு நாம் பயப்படத்தேவையில்லை; ஏனென்றால், கர்த்தரே நம் இரட்சிப்பு.
கோலியாத் கொக்கரித்தது தனது மாம்சபுயத்தை நம்பி -... ஆனால் நாம் சூளுரைப்பது “இருக்கின்றேன்”, என்பவரின் மெய்யான சர்வவல்ல- பெலனை நம்பி நாம் சொல்லலாம் “யாருக்குப் பயப்படுவேன்” என்று தைரியமாக – உரத்த சத்தத்துடன் “ கர்த்தர்என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” தைரியமாக நாம் சொல்லும் இந்த வார்த்தைகள் நம் நிகழ்காலத்திற்கும் பொருந்தும் எதிர்காலத்திற்கும் பொருந்தும்.
நமது பெலனின் ஆதாரமான இயேசுவைப் பற்றிக்கொண்டு நாம் இதனையும் இன்றைக்கு உரத்த சத்தமாய்- தைரியத்துடன் சொல்லலாம்,
“இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8:31-32
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

காலையில் கண் விழிக்கும் போது - நேற்றைய தின கவலைகளைப் பார்க்கின்றீர்களா? அல்லது இன்றைய நாளின் – புதிய தேவ கிருபையை உற்று நோக்குகின்றீர்களா? ஒவ்வொருநாளும் நாம் நெருக்கத்திற்கா அல்லது விசுவாசத்திற்கா? எதற்கு முதலிடம் தருகிறோம். ”என்கையிலஒன்னும் இல்லை” என்பதை விட யாவும் தேவன் - அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற அறிவுடன் செயல்படுகின்றோமா? கர்த்தர் என் வெளிச்சம் – யாருக்குப் பயப்படுவேன் (சங்கீதம் 27:1) சொல்லிப்பாருங்கள் உங்கள் இருள், சந்தேகம் விலகி ஓடும். கர்த்தர் என் இரட்சிப்பு என்னும் போது உங்கள் நம்பிக்கையிழந்த சூழ்நிலை மாறி – பெலவீனத்தில் பெலன் உண்டாகும். இந்த சங்கீதம் தேவன் அவர் ஏதோ தூரத்தில் இருந்து நம்மை பார்த்துக்கொண்டு இருப்பவர் அல்ல- அவரே எனது கோட்டை. நிலையற்ற உலகில் எனது அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவே என்று யோசிக்கச் சொல்கிறது. நெருக்கத்திலே நாம் அவரை அழைக்கலாம் - வாங்க!
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d