பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 6 நாள்

பாகால்பிராசீம் என்றால் முறிய அடிக்கும் கர்த்தர் என்று அர்த்தம். தாவீது அந்நாளில் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இருந்தார். கர்த்தர்: போ பெலிஸ்தரை உன்கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுப்பேன் என்று சொன்னார். கர்த்தர் சொன்னபடியே நடந்தது: 2சாமுவேல் 5:25ஆம் வசனத்தில் கர்த்தர் தாவீதுக்கு கட்டளையிட்ட பிரகாரம் செய்து பெலிஸ்தரை ... முறிய அடித்தான் என்று பார்க்கிறோம்.

இன்றக்கு நீங்களும் இந்த முறிய அடிக்கும் கர்த்தர் - என் வாழ்வில் ஒரு வெளிப்பாட்டைத் தரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கலாம். கண்ணுக்கு புலனாகாத ஒரு தடை- தேவன் தாமே உங்களுக்கு என்று வைத்திருப்பனவற்றை சுதந்தரிக்க விடாமல் தடுக்கின்றதா? தேவனுடைய வாக்குதத்தங்களை ஆணையிட்டு அறிக்கையிட ஆரம்பியுங்கள். தாவீது என்று சொல்லி (அதாவது அறிக்கையிட்டு,பேசி) அந்த ஸ்தலத்திற்கு பாகல்பிராசீம் என்று பேரிட்டான்.

சமாதானத்துக்கான நினைவுகள்: விசிவாசியுங்கள் – விசுவாசம் என்பது நிகழ்காலத்திற்குரியது. உங்கள் வாழ்வில் காணப்படும் தடைகளை முறிக்கிறார், பெருவளர்ச்சி தருகிறார். இழந்தனவற்றை திருப்பிக் கொண்டுவருகிறார் – முறிய அடிக்க்கிறார்; கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக - ”தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல” உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி -உரத்த சத்தமாய் தைரியத்துடன்
பேச ஆரம்பியுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d