பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 4 நாள்

இயேசு உங்களுடன் இப்பொழுது பேசுகின்றார், அவர் அசைவாடுகின்றார். உயர் ஸ்தலத்திற்கு உங்களை அழைக்கின்றார். அவர் வாக்குதத்தம் செய்ததற்கு குறைவான எதனையும் ஏற்றுக் கொள்ளாதிருங்கள். இது போதும் என்னும் பொய்யை ஏற்றுக் கொள்ளாதிருங்கள்.

தேவன் அவர் பரிபூரணத்தின் தேவன்.; இவர் நிறைவின் தேவன் நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மேலாக செய்பவர்.

ஆனால், நீங்கள் விசுவாசிக்க வேண்டும்; நீங்கள் எதிர்பார்க்க வேண்டும்; அவர் என்ன செய்கின்றாரோ அதற்குள் தைரியமாக வரவேண்டும்; அத்துடன்
கைகோர்த்துச் செல்ல வேண்டும்.

களைத்துப் போனவர்கள் உங்களில் உண்டு. யுத்தத்தின் மேல் யுத்தம் சந்தித்தவர்கள் – களைத்து, இளைத்துப் போனவர்கள் – நீங்கள் இதற்கு-செவி கொடுக்க வேண்டும். உங்கள் பெலன் புதுப்பிக்கப்படுகிறது. நீங்கள் ஓடினாலும் இளைப்படைய மாட்டீர்கள்; நீங்கள் நடந்தாலும் சோர்ந்து போக மாட்டீர்கள்; உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு வேண்டிய தாங்கும் ஆற்றல் உங்களுக்குள் இப்பொழுது ஊற்றப்படுகிறது.

சமாதானத்துக்கான நினைவுகள்: பயப்பட வேண்டாம்; தேவன் உங்களுக்காக ஆயத்தம் செய்ததை சத்துரு-கொள்ளை கொண்டு போய்விட அனுமதிக்காதிருங்கள். உங்களில் நற்கிரியைத் தொடங்கினவர் அதனை முடிக்க வல்லவர். அவர் என்ன சொன்னாரோ அதனை செய்து முடிப்பார்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d