பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 2 நாள்

பெருவளர்ச்சி /தடைமுறிவு / திருப்புமுனை சம்பவங்கள் என்பது பெலவான்களுக்கல்ல, நீதிமான்களுக்கல்ல; என்னிடம் எல்லாம் சரியாக இருக்கின்றது என்பவர்களுக்கும் அல்ல; நொறுங்குண்டதும் நருங்குண்டதுமானவர்கள் – தராசு தட்டில் வைத்துப் பார்த்தால் -குறைவாக காணப்படுபவர்களுக்கே.

இயேசு -பிரவேசித்தால் எல்லாம் மாற்றமடையும்;

இயேசு ஓர் அறைக்குள் நுழைந்தவுடன் வியாதி பறந்தோட வேண்டும். பிசாசுகள் நடுங்கும்; மரித்தவர் உயிர்பெற்று எழுந்தனர்.

செங்கடலை இரண்டாக பிளக்கச் செய்த தேவன்; குருடரை பார்வையடைச்செய்தவர்; முடவர் நடக்கச்செய்த அதே தேவன் – உங்களுக்காக செயல்படப் போகிறார். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.

BREAKTHROUGH -என்பது தேவன் என்ன செய்கின்றார் என்பதைப் பற்றியது அல்ல; நீங்கள் என்ன பதில் அவருக்கு / அவருடைய செயல்பாட்டிற்குச் தரப் போகின்றீர்கள் என்பதைப் பற்றியது.

சமாதானத்துக்கான நினைவுகள்: நீங்கள் பாரத்தை- கீழே இறக்கி வைக்க வேண்டிய நேரம் இது. இது உங்களை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டிய நேரமிது. இந்த யுத்தத்தை நீங்கள் தனியாகச் செய்யவில்லை. இந்த யுத்தம் கர்த்தருடையது. அவர் யுத்தம் செய்யும் போது ஒருபோதும் தோற்பதில்லை.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d