நம்மை பெலவீனப்படுத்தும் ஆயுதத்தை முறியடித்தல் - ஜான் பெவரேயுடன் மாதிரி

நேற்றைய தினத்தில் நாம் தியானித்த ஏஞ்செலாவை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். விக்கிரக ஆராதனைக்கு நிகராக வேசித்தன பாவமும் தேவனுக்கு வேதாகமத்தில். விக்கிரக ஆராதனை எப்படி தேவனுக்கு விரோதமாக இருக்கிறதோ அதற்கு நிகராகவே வேசித்தன பாவமும் தேவனை விரோதிக்கிறது என்பதை வேதத்திலிருந்து கற்றுக்கொண்டோம். இக்கால கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக வேசித்தன பாவத்தை சொன்னால், அது மிகையாகாது.
ஏஞ்செலாவின் வாழ்க்கையில் நாம் பார்த்தால், அவளின் வேசித்தன பாவத்திற்கு அடித்தளமாக இருந்தது, அவளின் ஆழ்மனதில் வேர்கொண்டிருந்த இச்சையே. இச்சைக்கு மறுவார்த்தை பேராசை என்றும் சொல்லலாம்.
பேராசையை இன்றைய காலத்தில் அதிகம் பேசப்படாத ஒரு விஷயம். எனவே நான் அதனை இங்கு விளக்கி கூற விரும்புகிறேன். "நல்லது போன்று தோன்றும் ஒன்றை எப்படியாகிலும் அடைந்தாகவேண்டும் என்கிற தீராத ஆசையே பேராசை" என்று மெரியம் வெப்ஸ்டர் கூறுகிறார். வேதம் இதை குறித்து என்ன சொல்கிறது என்று பார்ப்போம். கொலோசெயர் 3:5ல் "ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்." என்று பவுல் சொல்கிறார்.
ஆங்கில மொழியாக்கத்தில், வரிசை பெற்ற அனைத்தும் பாவங்களும் விக்கிரக ஆராதனையில் அடங்கும் என்று பொருள்பட எழுதப்பட்டிருக்கிறது. பேராசை என்ற வார்த்தை தமிழ் வேதாகமத்தில் பொருளாசை என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. பார்த்தீர்களா? வேசித்தன பாவங்களின் வரிசையில் பவுல் பொருளாசையையும் சேர்க்கிறார். நம்மில் அநேகர் சிலை வழிபாட்டை மாத்திரமே விக்கிரக ஆராதனை என்று எண்ணி கொண்டிருக்கிறோம். நீதியற்ற ஆசையில் (இச்சை) வேரூன்றிய அனைத்துமே விக்கிரக ஆராதனை தான்.
இந்த பேராசையை மேற்கொள்ளும் வழியையும் தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். மனநிறைவே பேராசையை மேற்கொள்ளும் வழி. எந்த நிலையில் இருந்தாலும் மனநிறைவோடு இருப்பதால் நம்மால் தேவனுடைய இருதயத்திற்கு நெருக்கமாக இருக்க முடியும். ஆனால், பேராசையோ தேவனை விட்டு நம்மை விலக செய்து, விக்கிரக ஆராதனைக்கு நேராக நம்மை கொண்டு செல்லும்.
எனவே தான் எபிரேயர் நிருப ஆக்கியோன் எழுதுகிறார், "நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே." (எபிரேயர் 13:5,6)
பேராசையும் விக்கிரக ஆராதனைக்கு நிகரான ஒரு பாவம் என்று இந்த வேதப்பகுதி நமக்கு தெளிவாக எழுத்துரைக்கிறது. ஏஞ்செலாவின் வாழ்க்கையில் பாருங்கள்! அவளின் சரீர தேவைக்கு தன் கணவர் ஜஸ்டினை நாடாமல், பிற ஆண்கள் மேல் இச்சை வைத்து மோசம் போனாள். நம்முடைய வாழ்விலும் கூட, நம்முடைய தேவைகளுக்கு தேவனை நாடாமல், சுய இச்சையின்படி வாழ்வதும் விக்கிரக ஆராதனையே! எந்த சூழலிலும் தேவன் நம் தேவைகளை பார்த்துக்கொள்ளுவார் என்ற நிச்சயத்துடன் மனநிறைவோடு இருக்க பழகிக்கொள்வோம்.
ஒரு விசுவாசி, தேவனுடைய சித்தத்தை அறிந்துகொண்ட பின்பும், வேண்டுமென்றே தன் சுய இச்சையின் பின் சென்றால், அதுவும் விக்கிரக ஆராதனையே. ஏனென்றால், அவர்கள் தேவனை ஆராதிக்காமல், தேவனுக்குரிய இடத்தை சுயத்திற்கு கொடுத்து, சுயத்தை ஆராதிக்கிறார்கள்.
உங்கள் வாழ்வின் குறிக்கோள்கள், முக்கியத்துவங்கள் பழக்கவழக்கங்களில் நீங்கள் எதில் வலிமையாக இருக்கிறீர்கள்? பேராசையிலா? மனநிறைவிலா? மேலான மனநிறைவுள்ள வாழ்க்கைக்கு நீங்கள் எவ்வாறு பிரயாசப்பட நினைக்கிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஒரு சூப்பர்மேன் எப்படி ஒவ்வொரு எதிரயையும் வீழ்த்துகிரானோ, கிறிஸ்துவை பின்பற்றுகிற உங்களுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட ஆற்றல் உள்ளது. ஆனால் சூப்பரமேனுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு பிரச்சனை, கிரிப்டோனைட் (கதையினுள் உள்ள கற்பனை பொருள்)உங்களுடைய பெலனை திருடுவது தான். இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அந்த ஆவிக்குரிய கற்பனை கதாபாத்திரத்தை வேரோடு பிடுங்கி எரிந்து, தேவன் உங்களுக்கு அளித்த அசாதரமான ஆற்றலை வரம்புகளின்றி வாழ்க்கையில் பூர்த்தி செய்திட உதவிடும்
More