நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

தேவனிடத்தில் கிட்டி சேருதல்
தேவனிடத்தில் கிட்டிச் சேர்தல் என்றால், நாம் தேவனை முழு இருதயத்தோடு தேடுதல் என்பதே அர்த்தம். ஜெபம் மற்றும் உபவாசம் எல்லாம் இதை குறித்ததே. உபவாசம் என்பது தேவன் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென அவரை வற்புறுத்துவதற்காக நம் உண்ணாவிரதம் இருப்பதல்ல. தேவனை நாம் ஏதோ ஒன்று நாம் செய்ய வைக்க கூடும் என நினைத்தால் நாம் முட்டாள்களே. மாறாக ஜெபத்தின் மூலமாகவும் உபவாசத்தின் மூலமாகவும் அவருடைய சித்தத்தில் தேவன் நம்மை நடத்தத் தக்கதாக நம்மை நாமே தாழ்த்துகிறோம். ஜெபம் மற்றும் உபவாசத்தின் மூலமாக தேவனுடைய காதுகளில் நம்முடைய ஜெபம் சேருவதற்கு தடையாய் இருக்கிற எல்லா அழுக்குகளையும் நீக்குகிறோம். ஜெபம் மற்றும் உபவாசம் என்பது நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொண்டு தேவனை தேடுவது.
யாக்கோபு 4:1-10 வசனங்களில் சில பகுதியை இத்திட்டத்தில் முன்பு வாசித்தோம், இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்ப்போம். இந்த வசனங்கள் பெருமையைப் பற்றியும் தாழ்மையைப் பற்றியும் பேசுகிறது. இந்த வசனங்கள் தேவனிடத்தில் கிட்டிச் சேர்வதற்கு நாம் தாழ்மையோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. நாம் தேவனிடத்தில் தாழ்மையாக இருக்க தீர்மானிக்கும் போது மற்ற எல்லா உயர்வையும் தேவன் நமக்கு அரளுவார் நன்மைகளும் நம்மை வந்து சேருகிறது.
2 நாளாகமம் 15:1-2ல், ஓதேதின் குமாரனாகிய அசரியாவிடம் தேவனுடைய ஆவியானவர் பேசுகிறதைக் காண முடியும். அசரியா தேவனையும் தேவனுக்கடுத்த காரியங்களையும் தேடினால் தேவன் அவனோடு இருப்பதாகவும், ஆனால் அசரியா தேவனை மறந்து விட்டால், தேவனிடம் கிட்டிச் சேராவிட்டால் தேவனும் அசரியாவை மறந்துவிடுவதாக சொல்கிறார்.
நம்முடைய இருதயம் மாசுபடும் போது, தேவனுக்கு அடுத்த காரியங்களுக்கு நம்முடைய இருதயம் கடினப்பட்டு போகிறது. அப்படி நம்முடைய இருதயம் கடினப்படும்போது நம்மால் தேவனிடம் கிட்டிச்சேர முடியாது. தேவனிடம் கிட்டிசேர்வதற்கு என்னை நான் சுத்திகரிப்பது அவசியம் (எனை நானே வெறுமையாக்குவது அத்தியாவசியம்), ஆவியானவருடைய வல்லமையினால் சத்தியத்திற்கு கீழ்படிதலோடும், ஆர்வத்துடனும் உத்தமத்துடனும் தேவனை சுத்தமான இருதயத்தோடு நேசிக்க வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்
