நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

புதிய அக்கினி
எந்தப் பிரிவினர் என்ற பாகுபாடு இல்லாமல், எல்லா விசுவாசிகளுக்கும் ஆவியானவரின் திருமுழுக்கு கிடைக்கும்.
மேலும், ஆவியானவரின் திருமுழுக்கு இப்பொழுதே கிடைக்கும். ஆவியானவர் தன்னுடைய அக்கினியினால் உங்களை நிரப்ப விரும்புகிறார். அவருடைய பிரசன்னம் உங்களுக்குள்ளும், உங்கள் மூலமாகவும் கிரியை செய்வதினால் நீங்கள் பலனுள்ளவர்களாக உணர வேண்டும் என விரும்புகிறார்.
கர்த்தர் தம்முடைய ஆவியானவரால் உங்களை நிரப்ப வேண்டுமென விரும்புகிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் புதிய அக்கினியைப் பெற வேண்டும் என அவர் விரும்புகிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
அப்போஸ்தலர் 2:1-4ல், ஆவியானவர், சரீரமாகிய சபை அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தபோது தன்னை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் என்பதைக் காண்கிறோம்.
அப்போஸ்தலர் 4:1-8ல், பேதுருவும் யோவானும் ஒரு இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு பிரதான ஆசாரியனாகிய அன்னா மற்றும் அவனுடைய குடும்பத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இக்கடினமான சூழ்நிலைமையில் பேதுரு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார் என்று வேத வாக்கியம் சொல்கிறது!
நம்முடைய கடினமான நேரங்களிலே அவருடைய மகிமைக்காக கர்த்தர் நம்மை நம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்ப விரும்புகிறார், நாம் அதற்கு தயாரா? பரிசுத்த ஆவியானவரின் புதிய அக்கினிக்கு நம்முடைய வாழ்விலும், நம்முடைய மனதிலும் என்னென்ன மாற்றங்கள் தேவைப்படுகிறது?
மத்தேயு 3:11-17ல், யோவான் ஸ்நாகனிடத்தில் இயேசு பெற்ற திருமுழுக்கைப் பற்றிப் பேசுமுன், யோவான் ஸ்நானகன் அதையும் விட வலிமை வாய்ந்த திருமுழுக்கைப் பற்றி பேசுகிறார். அது நீரினால் பெறுகிற ஞானஸ்நானம் அல்ல அக்கினியினால் பெரும் ஞானஸ்நானம். இந்த திருமுழுக்கைக் கொடுப்பவர் யோவான் ஸ்நானகன் அல்ல, ஆவியானவர்.
நீங்கள் நீரில் ஞானஸ்நானம் பெற்று மறுபடியும் பிறப்பதற்கு எப்படி விசுவாசம் தேவைப்பட்டதோ, அதே போல ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கும் விசுவாசமே தேவைப்படுகிறது. தேவன் உங்களுக்கு ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்க விரும்புகிறார்,அக்கினியினால் திருமுழுக்கு கொடுக்க விரும்புகிறார்!
இந்த திட்டத்தைப் பற்றி

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்
