திட்ட விவரம்
கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நினைவுகூரல்மாதிரி
திருவிருந்து ஒரு நினைவுகூரும் செயலாகும். 19 ம் வசனத்தில், இயேசு கூறுகிறார், "இது உங்களுக்காக கொடுக்கப்பட்ட என் சரீரம்; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்." நாம் திருவிருந்தில் பங்கேற்கும் போதெல்லாம் கிறிஸ்து நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து செய்த ஒப்பற்ற பலியை நினைவுகூருகின்றோம். இன்று கிறிஸ்துவின் பலியை சிறிது நேரம் நினைத்துப் பாருங்கள். அவரது சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலால் மட்டுமே உங்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது, அதனால் நமக்காக கிறிஸ்து செய்த ஒப்பற்ற பலியை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. உங்கள் எதிர்காலம் நித்தியமாக மாற்றப் பட்டிருக்கிறது. உங்களுக்கு வசதி இருந்தால் இன்று திருவிருந்தில் பங்கெடுங்கள். பங்கேற்கும் போது இயேசு கட்டளையிட்டபடி பரிசுத்த சாக்கிரமந்தில் பங்கேற்கும் நேரத்தில் அவரை நினைவுகூருங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எதிர்காலத்தைக் குறித்தே எண்ணிக்கொண்டிருப்பது நமது இயற்கை சுபாவமாக இருந்தாலும் கடந்த காலத்தை மறந்து விடக்கூடாது. இந்த திட்டம் ஐந்து நாட்களில் உங்களை இன்றைய நிலைமைக்கு உருவாக்கின கர்த்தரின் செயல்களை நினைவுகூரும்படி வடிவமைக...
More
We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church