திட்ட விவரம்

கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நினைவுகூரல்மாதிரி

Remembering All God Has Done

5 ல் 1 நாள்

கர்த்தர் வல்லமையான ஆண்டவர். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவரால் மலைகளை அசைக்கவும், சூரியனை நிறுத்திப் போடவும், வியாதியஸ்தர்களை சுகமாக்கவும் முடியும். கர்த்தர் இஸ்ரவேலரை தாம் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்குள் இஸ்ரவேலரைக் கொண்டுவந்த மகத்தான செயலை யோசுவா 4ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். தாம் வாக்குத்தத்தம் பண்ணின படியே கர்த்தர் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்குள் அழைத்துச் சென்றார். அவர் செய்த காரியம் மகத்தானதாகையால், கர்த்தர் தாம் இஸ்ரவேலருக்கு செய்ததை அவர்கள் ஒருபோதும் மறக்கக்கூடாதென்று ஆசித்தார். கர்த்தர் தாம்இஸ்ரவேலருக்காக செய்த அற்புதங்களையும், தாம் எவ்வளவு வல்லமை நிறைந்தவர் என்பதையும் அவர்கள் என்றென்றைக்கும் நினைக்க வேண்டுமென்று விரும்பினார். சற்று யோசித்துப் பாருங்கள். கர்த்தர் உங்கள் வாழ்வில் சில ஆச்சரியமான காரியங்களைச் செய்திருக்கிறார். ஒரு சுகமளிக்கும் அற்புதமோ அல்லது பழக்க அடிமைத்தனமோ செய்து உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்த இடத்தில் கொண்டு சேர்த்திருக்கிறார். இன்று நேரம் எடுத்து கர்த்தர் உங்கள் வாழ்வில் செய்த ஆச்சரியமான காரியங்களை நினைவுகூறுங்கள். அவரைத் துதித்து அவர் உங்களுக்குச் செய்த ஆச்சரியமான காரியங்களை என்றும் மறக்க மாட்டேன் என்று அவருக்கு வாக்குக்கொடுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Remembering All God Has Done

எதிர்காலத்தைக் குறித்தே எண்ணிக்கொண்டிருப்பது நமது இயற்கை சுபாவமாக இருந்தாலும் கடந்த காலத்தை மறந்து விடக்கூடாது. இந்த திட்டம் ஐந்து நாட்களில் உங்களை இன்றைய நிலைமைக்கு உருவாக்கின கர்த்தரின் செயல்களை நினைவுகூரும்படி வடிவமைக...

More

We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்