யோசுவா 1:8-11

யோசுவா 1:8-11 TCV

இந்த சட்டத்தின் புத்தகத்தை உன் வாயிலிருந்து விலக்காமல் தொடர்ந்துபடி; அதில் எழுதியிருக்கிற யாவற்றையும் செய்யக் கவனமாயிருக்கும்படி, அதில் இரவும் பகலும் தியானமாய் இரு. அப்பொழுது நீ செய்யும் எல்லாவற்றிலும் செழித்து வெற்றிபெறுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு தைரியமாயிரு. திகிலடையாதே; மனச்சோர்வடையாதே. ஏனெனில், நீ எங்கே சென்றாலும் உன் இறைவனாகிய யெகோவா உன்னுடனே இருப்பார்.” எனவே யோசுவா மக்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, “நீங்கள் முகாமின் நடுவே சென்று மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவெனில், ‘உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஆயத்தம் செய்யுங்கள்; ஏனெனில் இன்றிலிருந்து மூன்றுநாட்களுக்குள்ளே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கப்போகிற நாட்டிற்குப்போய், அதை உங்கள் உரிமையாக்கிக்கொள்ள யோர்தான் நதியைக் கடப்பீர்கள்’ ” என்றான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோசுவா 1:8-11

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1     -சகோதரன் சித்தார்த்தன் யோசுவா 1:8-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

3 நாட்களில்

AIRBUS A330 - விமானத்தில் நாம் யாவருமே- ”இப்பொழுதும், எப்பொழுதும் - பயணித்துக்கொண்டிருக்கிறோம்” என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? நாம் வாழும் புவியைத்தான் சொல்கின்றேன். இப்பொழுது பூமி தன்னைதான் சுற்றும் வேகம் ஒருமணி நேரத்திற்கு-1600கி.மீ. பூமியின் எடை 60 ட்ரில்லியன் டன். இந்த பருப்பொருள் -தினமும் 520 இலட்சம் கி.மீ. பயணிக்கின்றது. இதில் விசேஷம் என்னவென்றால், இதன்வேகம் சீராக – எப்பொழுதும் இருக்கின்றது என்பது தான். ஏனென்றால் இது பயணிக்கும் வேகம் குறைந்தாலும் பிரச்சினை; கூடினாலும் நமக்கு பிரச்சினை என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த கனமான பருப்பொருள் பயணிக்க எரிசக்தியை-தொடர்ந்து தருவது எது? ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் .... பூமியை சிருஷ்டித்தார் என்ற - வாக்குமாறாத - தேவனுடைய - வார்த்தை தான். பரிசுத்த வேதாகமத்தில்- தேவன் தமது ” வார்த்தை யினால்” என்ன அற்புதங்களை - நிறைவேற்றிக்கொண்டே இருக்கின்றார்- என்பதை நாம் காணும் போது - நம்முடைய விசுவாசம் நிச்சயம் பெலப்படும். (வி)சுவாசிக்க வாங்க! ________________________________________