வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோசுவா 1:8

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1     -சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

3 நாட்களில்

AIRBUS A330 - விமானத்தில் நாம் யாவருமே- ”இப்பொழுதும், எப்பொழுதும் - பயணித்துக்கொண்டிருக்கிறோம்” என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? நாம் வாழும் புவியைத்தான் சொல்கின்றேன். இப்பொழுது பூமி தன்னைதான் சுற்றும் வேகம் ஒருமணி நேரத்திற்கு-1600கி.மீ. பூமியின் எடை 60 ட்ரில்லியன் டன். இந்த பருப்பொருள் -தினமும் 520 இலட்சம் கி.மீ. பயணிக்கின்றது. இதில் விசேஷம் என்னவென்றால், இதன்வேகம் சீராக – எப்பொழுதும் இருக்கின்றது என்பது தான். ஏனென்றால் இது பயணிக்கும் வேகம் குறைந்தாலும் பிரச்சினை; கூடினாலும் நமக்கு பிரச்சினை என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த கனமான பருப்பொருள் பயணிக்க எரிசக்தியை-தொடர்ந்து தருவது எது? ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் .... பூமியை சிருஷ்டித்தார் என்ற - வாக்குமாறாத - தேவனுடைய - வார்த்தை தான். பரிசுத்த வேதாகமத்தில்- தேவன் தமது ” வார்த்தை யினால்” என்ன அற்புதங்களை - நிறைவேற்றிக்கொண்டே இருக்கின்றார்- என்பதை நாம் காணும் போது - நம்முடைய விசுவாசம் நிச்சயம் பெலப்படும். (வி)சுவாசிக்க வாங்க! ________________________________________

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க.  ரோமர் :12-2    சகோதரன் சித்தார்த்தன்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

3 நாட்களில்

யுத்தம் என்றால் அது நாடுகளுக்கு இடையே நடப்பது என்று நினைக்காதிருங்க. அனுதினமும் சத்துரு நம் சிந்தையில்– பயம் சந்தேகத்தால் நிரப்பி உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்தவர்களாக வாழு என போராடுகிறான். பட்டயமும் பீரங்கியும் வைத்து நடைபெறும் யுத்தம் அல்ல - இந்த யுத்தம்; இது நம் எண்ணங்களில் அனுதினமும் நடைபெறும் ஒரு யுத்தம்.... ஆனால், நமது தேவன் - புதிய மனம்; மறுரூபம் அல்லது முற்றிலும் மேம்பட்ட வாழ்க்கை வாழும்படி நம்மை அழைத்திருக்கின்றார். இப்பூவுலகில் வாழும் நாம்- பரலோகத்தின் சிந்தைகளை யோசித்துக் கொண்டு இருப்போமானால் நம் மனம் புதிதாகியது என்று அர்த்தம். உங்கள் எண்ணங்கள் தான் உங்களைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றது. எதைப்பற்றி நீங்கள்-கருத்து முரண்படாமல்- நினைக்கிறீர்களோ அதுதான் - உங்கள் விசுவாசம் ஆக இருக்கும், நீங்கள் போகின்ற திசையை தீர்மானிக்கும் - உங்களைப் பற்றி ”தேவன் தாமே குறித்திருக்கிறவைகளை” - அவருடைய பரிபூரணமான சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றும் வாங்க - மறுரூபமான வாழ்க்கைக்குள் பிரவேசிக்கலாம்.

இளைப்பாற நேரம் ஒதுக்குவது

இளைப்பாற நேரம் ஒதுக்குவது

5 நாட்கள்

பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம்.

சத்தியம் மறுரூபப்படுத்தும்

சத்தியம் மறுரூபப்படுத்தும்

8 நாட்களில்

சத்தியம் விடுவிக்கும்! சத்தியம் சீர்திருத்தும்! சத்தியம் மறுரூபப்படுத்தும்! ஆனால் 'சத்தியம்' என்றால் என்ன? இயேசு ஒரு வியக்கத்தக்க கூற்றைச் சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6) என்றும், அவருடைய வார்த்தையே சத்தியத்தின் ஊற்றாகும் (யோவான் 17:17) என்றும் கூறினார். மேலும், சத்தியத்தின் ஆவியினால் தம்முடைய சீடர்களை ஞானஸ்நானம் செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் இது வெறும் மத அல்லது ஆவிக்குரிய உணர்ச்சி மட்டும்தானா? அல்லது 'சத்தியம்', உண்மையிலேயே தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூகங்களிலும், நாடுகளிலும் நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா?