1
யோவேல் 2:12
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஆகையால், “இப்பொழுதேனும் உங்கள் முழு மனதுடன் என்னிடம் திரும்புங்கள்; உபவாசித்து அழுது புலம்பி, துக்கத்துடன் வாருங்கள்” என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
ஒப்பீடு
யோவேல் 2:12 ஆராயுங்கள்
2
யோவேல் 2:28
“அதன் பின்னர், நான் அனைத்து மக்கள்மீதும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் மகன்மாரும் மகள்மாரும் இறைவாக்கு உரைப்பார்கள்; உங்கள் முதியவர்கள் கனவுகளையும், உங்கள் இளைஞர் தரிசனங்களையும் காண்பார்கள்.
யோவேல் 2:28 ஆராயுங்கள்
3
யோவேல் 2:13
உங்கள் உடைகளைக் கிழிக்க வேண்டியதில்லை, மாறாக உங்கள் உள்ளத்தை உடைத்திடுங்கள். உங்கள் இறைவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள், ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர், கோபிக்கத் தாமதிப்பவர், நிலையான அன்பு நிறைந்தவர்; பேரழிவை அனுப்பாமல் மனம்மாறுகின்றவர்.
யோவேல் 2:13 ஆராயுங்கள்
4
யோவேல் 2:32
அப்போது கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்; கர்த்தர் சொன்னது போலவே, எஞ்சியிருப்பவர்கள் மத்தியிலிருந்து கர்த்தரினால் அழைக்கப்பட்டவர்களுக்கு சீயோன் மலையிலும் எருசலேமிலும் மீட்பு உண்டு.”
யோவேல் 2:32 ஆராயுங்கள்
5
யோவேல் 2:31
சூரியன் இருண்டு போகும், சந்திரன் இரத்தமாக மாறும். பெரிதானதும், பயங்கரமானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே இவை நிகழும்.
யோவேல் 2:31 ஆராயுங்கள்