ஆதியாகமம் 30

30
1தன்னால் யாக்கோபுக்கு பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியவில்லை என்பதை ராகேல் கண்டுகொண்டபோது, அவள் தன் மூத்த சகோதரியின்மீது பொறாமை கொண்டாள். எனவே அவள் யாக்கோபிடம், “நீர் எனக்கு பிள்ளைகளைக் கொடும்; இல்லாவிட்டால் நான் மரணிக்கப் போகின்றேன்” என்றாள்.
2அப்போது யாக்கோபு ராகேலின்மீது கோபம்கொண்டு, “நான் என்ன இறைவனா? அவர் அல்லவோ உன்னைப் பிள்ளைப்பேறு அற்றவளாக ஆக்கி இருக்கின்றார்!” என்றான்.
3அதற்கு அவள், “இதோ என் பணிப்பெண் பில்காள் இருக்கின்றாள், அவளுடன் உறவுகொள்ளும். எனக்காக அவள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கட்டும், அவள் மூலமாக என் குடும்பம் கட்டப்படும்” என்றாள்.
4அவ்வாறே அவள் தன் பணிப்பெண் பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். யாக்கோபு அவளுடன் தாம்பத்திய உறவுகொண்டான். 5பில்காள் கருத்தரித்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 6அப்போது ராகேல், “இறைவன் எனக்கு நியாயம் செய்து, என் வேண்டுதலைக் கேட்டு, எனக்கொரு மகனைத் தந்தார்” என்றாள். ஆகவே அவனுக்கு, தாண்#30:6 தாண் இறைவன் தீர்ப்பளித்தார் என்று அர்த்தம். எனப் பெயர் சூட்டினாள்.
7மறுபடியும் ராகேலின் பணிப்பெண் பில்காள் கருத்தரித்து, யாக்கோபுக்கு இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தாள். 8அப்போது ராகேல், “என் சகோதரியுடன் எனக்கிருந்த பெரிய போராட்டத்தில் நான் போராடி வெற்றியடைந்தேன்” என்று சொல்லி அவனுக்கு, நப்தலி#30:8 நப்தலி நான் வெற்றி பெற்றேன் என்று அர்த்தம். எனப் பெயர் சூட்டினாள்.
9லேயாள் தனக்குக் குழந்தைப்பேறு நின்றுபோனதைக் கண்டுகொண்டதும், தன் பணிப்பெண் சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். 10லேயாளின் பணிப்பெண் சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 11அப்போது லேயாள், “நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி” என்று சொல்லி அவனுக்கு காத்#30:11 காத் ஆசீர்வதிக்கப்பட்டவன் அல்லது மகிழ்ச்சியானவன் என்று அர்த்தம். எனப் பெயர் சூட்டினாள்.
12லேயாளின் பணிப்பெண் சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாவது மகனையும் பெற்றெடுத்தாள். 13அப்போது லேயாள், “நான் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்! பெண்கள் என்னை, மகிழ்ச்சி உள்ளவள் என அழைப்பார்கள்” என்றாள். அதனால் அவனுக்கு ஆசேர்#30:13 ஆசேர் மகிழ்ச்சி, திருப்தி, செழுமை, உறுதி. என்று அர்த்தம். எனப் பெயர் சூட்டினாள்.
14கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயல்வெளிக்குப் போனான். அங்கே தூதாயீம்#30:14 தூதாயீம் – அக்கால கலாச்சாரத்தில், இது பாலுணர்வைத் தூண்டும் மூலிகை என நம்பப்பட்டது. மூலிகைச் செடியைக் கண்டு அவற்றைக் கொண்டுவந்து தனது தாய் லேயாளிடம் கொடுத்தான். அப்போது ராகேல் லேயாளிடம், “உன் மகன் கொண்டுவந்த மூலிகைகளில் எனக்கும் கொஞ்சம் தா” என்றாள்.
15அதற்கு லேயாள், “நீ என் கணவனை என்னிடமிருந்து எடுத்துக்கொண்டது போதாதோ? என் மகன் கொண்டுவந்த தூதாயீம் மூலிகையையும் அபகரிக்கப் பார்க்கின்றாயோ?” என்று கேட்டாள்.
அதற்கு ராகேல், “அவ்வாறானால் உன் மகன் கொண்டுவந்த தூதாயீம் மூலிகைக்குப் பதிலாக, இன்றிரவை அவர் உன்னுடன் கழிக்கட்டும்” என்றாள்.
16அவ்வாறே மாலை வேளையில் யாக்கோபு வெளியிலிருந்து திரும்பி வந்தபோது, லேயாள் அவனைச் சந்திப்பதற்காக வெளியே போய், “இன்றிரவு நீர் என்னுடன் தங்க வேண்டும், ஏனெனில் என் மகன் ரூபன் கொண்டுவந்த தூதாயீம் மூலிகையைக் கொடுத்து, நான் உம்மை வாங்கிக் கொண்டேன்” என்றாள். அவ்வாறே அவன் அன்றிரவு அவளுடன் தாம்பத்திய உறவுகொண்டான்.
17இறைவன் லேயாளின் வேண்டுதலைக் கேட்டார். அவள் கருத்தரித்து யாக்கோபுக்கு ஐந்தாவது மகனைப் பெற்றெடுத்தாள். 18அப்போது லேயாள், “நான் என் பணிப்பெண் சில்பாளை என் கணவனுக்குக் கொடுத்ததற்காக இறைவன் எனக்கு வெகுமதி அளித்தார்” என்று சொல்லி அவனுக்கு, இசக்கார்#30:18 இசக்கார் வெகுமதி என்று அர்த்தம். எனப் பெயர் சூட்டினாள்.
19லேயாள் மறுபடியும் கர்ப்பம் தரித்து, யாக்கோபுக்கு ஆறாவது மகனைப் பெற்றெடுத்தாள். 20அப்போது லேயாள், “இறைவன் எனக்கு விலைமதிக்க முடியாத ஒரு வெகுமதியைப் பரிசாகக் கொடுத்தார். நான் ஆறு மகன்மாரைப் பெற்றெடுத்ததால், என் கணவர் இப்போது என்னை மரியாதையுடன் நடத்துவார்” என்று சொல்லி, அவனுக்கு, செபுலோன்#30:20 செபுலோன் நன்மதிப்பு என்று அர்த்தம். எனப் பெயர் சூட்டினாள்.
21சில காலத்தின் பின்பு அவள் ஒரு மகளையும் பெற்றெடுத்து அவளுக்கு, தீனாள் எனப் பெயர் சூட்டினாள்.
22பின்பு இறைவன் ராகேலையும் நினைவுகூர்ந்தார்; அவளுடைய வேண்டுதலைக் கேட்டு அவளையும் கர்ப்பம் தரிக்கக்கூடியவளாக ஆக்கினார். 23அவள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுத்து, “இறைவன் என் அவமானத்தை நீக்கிவிட்டார்” என்று சொன்னாள். 24அவள் அவனுக்கு, யோசேப்பு#30:24 யோசேப்பு எனக்கு இன்னொன்றைக் கொடு என்று அர்த்தம். என்று பெயர் சூட்டி, “கர்த்தர் இன்னும் ஒரு மகனை எனக்குக் கொடுப்பாராக” என்றாள்.
யாக்கோபின் மந்தைப் பெருக்கம்
25ராகேல் யோசேப்பைப் பெற்றெடுத்ததும், யாக்கோபு லாபானிடம், “நான் என் சொந்த நாட்டுக்கும் வீட்டுக்கும் திரும்பிப் போக என்னை அனுப்பி விடுவீராக. 26நான் உம்மிடம் வேலைசெய்து அதனால் கிடைத்த என் மனைவியரையும் அத்துடன் என் பிள்ளைகளையும் என்னுடன் அனுப்பி, என்னைப் போக விடுவீராக; உமக்காக நான் எவ்வளவு வேலை செய்தேன் என்பது உமக்குத் தெரியும் அல்லவா” என்றான்.
27ஆனால் லாபானோ அவனிடம், “உன் கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால், நீ இங்கேயே தங்கியிரு. உன் பொருட்டு கர்த்தர் என்னையும் ஆசீர்வதித்தார் என்பதை நான் குறிபார்த்து#30:27 குறிபார்த்து – ஒரு காரியம் நடைபெறக் காரணம் என்ன என்பதை அறியப் பயன்படுத்தப்பட்ட சோதிட முறை. பிற்காலத்தில் இவை தடைசெய்யப்பட்டன உபா. 18:10-14 அறிந்துகொண்டேன்” என்றான். 28மேலும் அவன், “நீ உன் கூலியைச் சொல்; அதை நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
29யாக்கோபு அவனிடம், “நான் உம்மிடத்தில் எவ்வாறு வேலை செய்தேன் என்பதையும், என்னுடைய பராமரிப்பில் உமது மந்தை எவ்வாறு நலமாய் இருந்தது என்பதையும் நீர் அறிவீர். 30நான் இங்கு வருவதற்கு முன் உம்மிடத்தில் இருந்த சிறிய அளவிலான மந்தை, இப்போது அதிகமாய் பெருகியிருக்கின்றது, நான் இருந்த இடங்களில் எல்லாம் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்திருக்கின்றார். நான் என் சொந்த குடும்பத்துக்காக சம்பாதிப்பது எப்போது?” என்றான்.
31அதற்கு லாபான், “நான் உனக்கு என்ன தர வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு யாக்கோபு, “நீர் எனக்கு எதையும் தர வேண்டாம். எனக்காக இந்த ஒரு காரியத்துக்கு மட்டும் இணக்கம் தெரிவிப்பீரானால் நான் இங்கேயே தங்கி, தொடர்ந்து உமது மந்தையை மேய்த்து, அவற்றைப் பராமரிப்பேன். 32அதாவது, நான் உமது ஆட்டுத் தொழுவத்துக்குச் சென்று, அவற்றில் கலப்பு நிறமும் புள்ளிகளும் உள்ள செம்மறியாடுகளையும், கறுப்பு நிறச் செம்மறியாட்டுக்குட்டிகளையும், புள்ளிகளும் கலப்பு நிறமும் உள்ள வெள்ளாடுகளையும் வேறுபிரித்து விடுகின்றேன். அவை என் கூலியாக இருக்கும். 33எதிர்காலத்தில் நீர் எனக்குக் கூலியாய் கொடுத்திருக்கின்ற இவற்றைப் பார்க்கும் போதெல்லாம், என் நேர்மையே எனக்காக சாட்சிபகரும். நீர் சோதித்துப் பார்க்கும்போது என்னிடம் கலப்பு நிறமும், புள்ளிகளும் இல்லாத வெள்ளாடுகளும், கறுப்பு நிறம் அல்லாத செம்மறியாட்டுக்குட்டிகளும் இருக்குமானால், அவை என்னால் திருடப்பட்டவையாக எண்ணிக்கொள்ளலாம்” என்றான்.
34அதற்கு லாபான், “சரி; நீ சொன்னபடியே ஆகட்டும்” என்றான். 35ஆனால் அன்றைய தினமே லாபான் தன் மந்தையிலிருந்து வரிகளும், புள்ளிகளுமுள்ள அனைத்து வெள்ளாட்டுக்கடாக்களையும், வெள்ளை நிறப் புள்ளியுடன் கலப்பு நிறமும் புள்ளிகளுமுள்ள அனைத்து வெள்ளாடுகளையும், கறுப்பு நிற செம்மறியாட்டுக்குட்டிகளையும் வேறுபிரித்தெடுத்து, அவற்றைத் தன் மகன்மாரின் பராமரிப்பில் விட்டான். 36மேலும் லாபான் யாக்கோபை தன்னை விட்டு மூன்று நாள் நடை பயணத் தூரத்தில்#30:36 மூன்று நாள் நடை பயணத் தூரத்தில் – சுமார் 90 கிலோ மீற்றர் தூரம். இருக்கும்படி செய்தான். எஞ்சியிருந்த லாபானின் மந்தைகளை யாக்கோபு மேய்த்து வந்தான்.
37ஆனாலும் யாக்கோபு புன்னை, வாதுமை, அர்மோன் மரங்களில் இருந்து பசுமையான கொப்புகளை வெட்டி, பட்டைகளை உரித்து அதன் உள்ளே இருக்கும் வெண்மை இடையிடையே தோன்றும்படி, வெள்ளை நிறக் கோடுகளை உண்டாக்கினான். 38மந்தை தண்ணீர் குடிக்க வரும்போது பட்டை உரிக்கப்பட்ட அக்கொப்புகள் மந்தைக்கு நேரே இருக்கும்படி தண்ணீர்த் தொட்டிகளுக்குள் வைத்தான். இனப்பெருக்கக் காலத்தில் அவை தண்ணீர் குடிக்க வரும்போது, அந்தக் கொப்புகளை அவற்றுக்கு எதிராக வைத்தான். 39ஆடுகள் கொப்புகளுக்கு முன்பாக இணைசேர்ந்ததால், வரிகளை அல்லது கலப்பு நிறத்தை அல்லது புள்ளிகளை உடைய குட்டிகளையே ஈன்றன. 40யாக்கோபு அக்குட்டிகளை வேறுபிரித்து, லாபானுக்குரிய மந்தையை வரியும் கறுப்புமான மந்தைக்கு எதிராக நிறுத்தினான். இவ்வாறு அவன் தனக்கு மந்தையை உருவாக்கினான். அவற்றை லாபானின் மந்தையோடு சேர்க்கவில்லை. 41வலிமையான ஆடுகள் இணைசேரும் காலத்தில், அவை அந்த மரக்கொப்புகளுக்கு அருகே இணைசேரும்படி யாக்கோபு அவற்றைத் தண்ணீர்த் தொட்டிகளுக்குள் வைப்பான். 42ஆனால் பலவீனமான ஆடுகளுக்கு முன்பாக அங்கே அவன் கொப்புகளை வைக்க மாட்டான். அதனால் லாபானுக்கு பலவீனமான ஆடுகளும், யாக்கோபுக்கு வலிமையான ஆடுகளும் சொந்தமாயின. 43இவ்வாறு யாக்கோபு பெரிய செல்வந்தனாகி, பெருந்திரளான மந்தைகளுக்கும் பணியாளர்களுக்கும் பணிப்பெண்களுக்கும் ஒட்டகங்களுக்கும் கழுதைகளுக்கும் உரிமையாளன் ஆனான்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 30: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល