யாத்திராகமம் 15:23-25
யாத்திராகமம் 15:23-25 TRV
அவர்கள் மாரா என்னும் இடத்துக்கு வந்தபோது, அந்த இடத்திலுள்ள தண்ணீர் கசப்பாயிருந்தபடியால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனாலேயே அந்த இடம் மாரா என அழைக்கப்பட்டது. எனவே இஸ்ரயேல் மக்கள், “நாங்கள் எதைக் குடிப்போம்?” என்று கேட்டு மோசேக்கு எதிராக முணுமுணுத்தார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கதறினான், அப்போது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அவன் அதைத் தண்ணீருக்குள் எறிந்தபோது, தண்ணீர் இனிப்பாக மாறியது. கர்த்தர் அங்கே ஒரு விதிமுறையையும், ஒரு சட்டத்தையும் ஏற்படுத்தி, அவர்களைப் பரீட்சித்தார்.

