கலாத்தியர் முன்னுரை
முன்னுரை
இக்கடிதத்தை கி.பி. 48 ஆம் ஆண்டிலிருந்து 49 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். பவுல் தனது முதலாவது நற்செய்தி பயணத்தின்போது கலாத்தியாவிலுள்ள மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது காலத்திற்குள்ளாக, சில யூத விசுவாசிகளும் யூதரல்லாத விசுவாசிகளும் அங்கு வந்து மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்றும், அப்படிச் செய்தால் மட்டுமே, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார்கள். இந்தத் தவறான போதனையைக் கண்டிப்பதற்காக பவுல் இந்தக் கடிதத்தை எழுதுகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலமாக இறைவனுடைய கிருபையினால் மனிதர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் என்பதே இதில் காணப்படும் தெளிவான போதனை.
ទើបបានជ្រើសរើសហើយ៖
கலாத்தியர் முன்னுரை: TCV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.