அவன் மிகவும் வலிமையுடையவனாவான், ஆயினும் தனது சொந்தத் திறனினால் அல்ல. அவன் அதிர்ச்சி ஊட்டுகின்ற அழிவுகளைச் செய்து, தான் செய்பவற்றிலெல்லாம் வெற்றியடைவான். அவன் வலிமை வாய்ந்தவர்களையும், பரிசுத்த மக்களையும் அழிப்பான். இவ்வாறு அவன் வஞ்சனையை செழிக்கப்பண்ணி, தன்னை மிக உயர்ந்தவனாகக் கருதுவான். பலர் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணும்போது, அவர்களைக் கொன்றழிப்பான். அரசர்களுக்கெல்லாம் மகா உன்னதமானவராய் இருப்பவரை அவன் எதிர்த்து நிற்பான். ஆயினும் அவன் முறியடிக்கப்படுவான். ஆனால், மனித கையினால் அல்ல.